சர்வதேச யோகா சேம்பியன் போட்டி; குமரி மாணவர் சாதனை
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச யோகாசன சேம்பியன்ஷிப் போட்டியில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது மாணவர் விஹான், கால் சமநிலை மற்றும் பாரம்பரிய குழு பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த...
இரணியல்: பிளஸ் 1 மாணவி கர்ப்பம் ; இசை கலைஞர் கைது
இரணியல் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தக்கலை பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது, சிங்காரி மேளமடிக்கும் இசைக்கலைஞரான கதிஷ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மார்ச் 20ஆம் தேதி, கதிஷ் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை...
பளுகல்: விபச்சாரம் நடத்திய லாட்ஜுக்கு சீல்
தேவிகோடு பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவருக்குச் சொந்தமான பளுகல் லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை நடத்தி, கேரளாவைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று அதே லாட்ஜில்...
கருங்கல்: கடையில் ரூ 1 கோடி மோசடி வாலிபர் கைது
கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (52) என்பவருக்குச் சொந்தமான மொபைல் கடையில் வேலை பார்த்த அபிஷேக் (22) மற்றும் அபிஷ் (27) ஆகியோர், கடை காசோலைகளைப் பயன்படுத்தி சுமார் ரூ. 1 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து திரும்பிய உரிமையாளர் ஐயப்பன் இந்த மோசடியைக் கண்டுபிடித்து குமரி...
முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்துள்ளது. கோடை காலத்தில் மைனஸ் அளவுக்கு சென்ற நீர்மட்டம், தற்போது 25 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 11.30 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
குலசேகரம்: வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருவனந்தபுரத்தில் மகளைப் பார்க்கச் சென்ற வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த சசி (71) என்பவரின் வீடு, அவர் திரும்பி வந்தபோது உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் சுமார் ரூ. 6 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சசி குலசேகரம்...
குளச்சல்: மர்ம வாகனம் மோதி மாற்றுத்திறனாளி படுகாயம்
குளச்சல் பகுதியைச் சேர்ந்த 61 வயதான மாற்றுத்திறனாளி ஜோன்ஸ், மண்டைக்காடு சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வேகமாக வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஜோன்ஸ், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குளச்சல் போலீசார், மாற்றுத்திறனாளி மீது...
பளுகல்: காரில் சென்றவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
நேற்று மஞ்சாலுமூடு பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த அஜின் கில்பர்ட் (45) என்பவரை, அவருக்கு முன்னால் சென்ற இருவர் பைக்கில் வழிமறித்து, காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு, அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர். காயமடைந்த அஜின் கில்பர்ட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து...
குமரியில்: கலெக்டர் வீட்டு சமையல்காரர் மீது தாக்குதல்
குமரி மாவட்ட கலெக்டர் பங்களாவில் சமையல்காரராக பணிபுரியும் பாபுராஜ், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ வினோத்குமார் என்பவரால் தாக்கப்பட்டார். நேற்று பாபுராஜ் பணிக்குச் செல்லும்போது, ஸ்ரீ வினோத்குமார் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். தடுக்க வந்த பாபுராஜின் தந்தை ரவியையும் அவர் தாக்கியுள்ளார். காயமடைந்த இருவரும்...
ராஜாக்கமங்கலம்: வெள்ள பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேற்று அப்பகுதிக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பாதிப்புகள்...













