Google search engine

கருங்கல்: கடையில் ரூ 1 கோடி மோசடி வாலிபர் கைது

கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (52) என்பவருக்குச் சொந்தமான மொபைல் கடையில் வேலை பார்த்த அபிஷேக் (22) மற்றும் அபிஷ் (27) ஆகியோர், கடை காசோலைகளைப் பயன்படுத்தி சுமார் ரூ. 1 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து திரும்பிய உரிமையாளர் ஐயப்பன் இந்த மோசடியைக் கண்டுபிடித்து குமரி...

முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்துள்ளது. கோடை காலத்தில் மைனஸ் அளவுக்கு சென்ற நீர்மட்டம், தற்போது 25 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 11.30 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

குலசேகரம்: வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருவனந்தபுரத்தில் மகளைப் பார்க்கச் சென்ற வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த சசி (71) என்பவரின் வீடு, அவர் திரும்பி வந்தபோது உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் சுமார் ரூ. 6 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சசி குலசேகரம்...

குளச்சல்: மர்ம வாகனம் மோதி மாற்றுத்திறனாளி படுகாயம்

குளச்சல் பகுதியைச் சேர்ந்த 61 வயதான மாற்றுத்திறனாளி ஜோன்ஸ், மண்டைக்காடு சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வேகமாக வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஜோன்ஸ், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குளச்சல் போலீசார், மாற்றுத்திறனாளி மீது...

பளுகல்: காரில் சென்றவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

நேற்று மஞ்சாலுமூடு பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த அஜின் கில்பர்ட் (45) என்பவரை, அவருக்கு முன்னால் சென்ற இருவர் பைக்கில் வழிமறித்து, காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு, அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர். காயமடைந்த அஜின் கில்பர்ட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து...

குமரியில்: கலெக்டர் வீட்டு சமையல்காரர் மீது தாக்குதல்

குமரி மாவட்ட கலெக்டர் பங்களாவில் சமையல்காரராக பணிபுரியும் பாபுராஜ், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ வினோத்குமார் என்பவரால் தாக்கப்பட்டார். நேற்று பாபுராஜ் பணிக்குச் செல்லும்போது, ஸ்ரீ வினோத்குமார் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். தடுக்க வந்த பாபுராஜின் தந்தை ரவியையும் அவர் தாக்கியுள்ளார். காயமடைந்த இருவரும்...

ராஜாக்கமங்கலம்: வெள்ள பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேற்று அப்பகுதிக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பாதிப்புகள்...

குமரியில்: தெரு நாய்களை பிடித்த பேருராட்சி பணியாளர்கள்

களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, பேரூராட்சி ஊழியர்கள் தெருநாய்களைப் பிடித்து, குழித்துறை கருத்தடை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 3 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு...

திருவட்டாறு: கார் – பைக் மோதல்; தலைகீழாக கவிழ்ந்த கார்

திருவட்டாறில் இருந்து நேற்று மாலை மாத்தூரை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி, சாலையோரம் நிறுத்தியிருந்த பைக்கில் மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டியவருக்கு காயம் ஏற்படவில்லை. பைக் முழுமையாக சேதமடைந்தது. திருவட்டாறு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமியார்மடம்: கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு

சிற்றாறுபட்டணம் கால்வாயின் சுவாமியார்மடம் பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தார். இது தொடர்பாக நீர்வளத்துறைக்கு புகார் சென்றதுடன், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று திருவட்டாறு போலீஸ் பாதுகாப்புடன், தாசில்தார் மரகதவல்லி தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த...