Google search engine

குமரியில்: தெரு நாய்களை பிடித்த பேருராட்சி பணியாளர்கள்

களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, பேரூராட்சி ஊழியர்கள் தெருநாய்களைப் பிடித்து, குழித்துறை கருத்தடை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 3 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு...

திருவட்டாறு: கார் – பைக் மோதல்; தலைகீழாக கவிழ்ந்த கார்

திருவட்டாறில் இருந்து நேற்று மாலை மாத்தூரை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி, சாலையோரம் நிறுத்தியிருந்த பைக்கில் மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டியவருக்கு காயம் ஏற்படவில்லை. பைக் முழுமையாக சேதமடைந்தது. திருவட்டாறு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமியார்மடம்: கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு

சிற்றாறுபட்டணம் கால்வாயின் சுவாமியார்மடம் பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தார். இது தொடர்பாக நீர்வளத்துறைக்கு புகார் சென்றதுடன், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று திருவட்டாறு போலீஸ் பாதுகாப்புடன், தாசில்தார் மரகதவல்லி தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த...

கருங்கல்: நர்சிங் மாணவி திடீர் மாயம்

கருங்கல் ஆர்.சி தெருவைச் சேர்ந்த மீன் தொழிலாளி ஆண்டனி என்பவரின் மகள் ஆன்றோ ரினா (18), திருச்சியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்கு ஊர் திரும்பிய மாணவி நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போனார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், தந்தை...

குமரி: கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு

தூத்துக்குடி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கடலுக்குச் செல்லத் தயாராக இருந்த ஒரு விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள படகு...

குமரியில் போக்குவரத்து மாற்றம்; SP அதிரடி உத்தரவு

குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நாகர்கோவில் - ஒழுகினச்சேரி பகுதியில் நடைபெற்று வரும் பாலம் பணியை விரைந்து முடிக்கும் நோக்கில், நாளை முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். வடசேரியில் இருந்து ஒழுகினச்சேரி வழியாக வழக்கம்போல் வாகனங்கள் இயக்கப்படும். நெல்லை மார்க்கமாக வரும் வாகனங்கள் நான்கு வழிச்சாலை...

தக்கலை: மரத்தில் பைக் மோதி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த 26 வயது எலக்ட்ரீசியன் ஆஸ்பின் நிக்சன், நேற்று முன்தினம் ஜிஜோவுடன் பைக்கில் சென்றபோது காட்டாத்துறை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் ஆஸ்பின் நிக்சனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தக்கலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட...

குமரி: சாலையில் கிடந்த பணம் போலீஸில் ஒப்படைத்த மாணவன்

குழித்துறை பெருந்தெருவைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் சூரிய பிரசாத், மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் கண்டெடுத்த ரூ.60,000 பணத்தை தனது தாய் அம்பளியுடன் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். மாணவனின் நேர்மையைப் பாராட்டி சப்-இன்ஸ்பெக்டர் அவருக்குப் பரிசளித்து வாழ்த்தினார்.

நித்திரவிளை: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மாயம்

திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்ற மனைவி வீடு திரும்பாததால் கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். சின்னத்துறை ஜூட்ஸ் காலனியை சேர்ந்த மீனவர் ஜெர்பின் (32) என்பவரின் மனைவி சுபினா (24) நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் ஆலயத்திற்கு செல்வதாக கூறிவிட்டு...

யானைகள் தாக்குதலிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். குமரி மாவட்டத்தில் பொதுமக்களை யானைகள் தாக்கும் சம்பவங்களைத் தடுக்க அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அவர் உறுதியளித்தார். வனவிலங்கு நடமாட்டம் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்கனவே மின் வேலிகள் அமைக்கப்பட்டு...