கடந்த ஆண்டு இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்குக் களத்தில் தொழில்நுட்ப உதவி வழங்கியதை சீனா முதல்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத...
வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்’: அதிபர் கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல்
admin - 0
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடுகள் மீது தானாகவே அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்' என்றழைக்கப்படுகிறது.
கடந்த 1980-களில் சோவியத் யூனியன் (ரஷ்யா) ‘டெட் ஹேண்ட்' என்ற அணு ஆயுத கட்டளை அமைப்பை உருவாக்கியது. எதிரி நாடுகளின் அணு ஆயுத தாக்குதலால் ரஷ்யா அழிந்து, அதன் தலைவர்கள் உயிரிழந்தால் ‘டெட் ஹேண்ட்'...
ஈரான் போருக்கு உதவும் வகையில், இராக்கின் பாலைவனப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத் தளம் அமைத்துள்ளது. இதை இராக் படையினர் கண்டுபிடித்தபோது, அவர்களை விரட்டியடிக்க இஸ்ரேல் வான் தாக்குதலையும் நடத்தியுள்ளது.
இராக்கின் மேற்கு பாலைவனப் பகுதி மிகப் பெரியது. இங்கு மக்கள் நடமாட்டம் இருக்காது. கடந்த 1991-2003-ம் ஆண்டுகளுக்கு இடையே சதாம் உசேனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டபோது, அமெரிக்க ராணுவம் இப்பகுதியை ராணுவத் தளமாக பயன்படுத்தியது.
இப்பகுதியில் இஸ்ரேல் ராணுவமும் இராக்குக்கு தெரியாமல்...
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் அளித்த பதிலை அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "ஈரானின் பிரதிநிதிகள் அனுப்பிய பதிலை இப்போதுதான் வாசித்தேன். இது எனக்குப் பிடிக்கவில்லை; இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பதிவிட்டுள்ளார். எனினும் நிராகரிப்புக்கான காரணம் குறித்து அவர் தெளிவாக எதையும் விளக்கவில்லை.
முன்னதாக...
பல ஆண்டுகளாக நீண்ட விடுமுறை, ரிமோட் ஒர்க், ஆரோக்கியம் சார்ந்த தங்குமிடங்கள் மற்றும் பேக்பேக்கிங் சாகசங்களுக்குத் தாய்லாந்து மிகவும் பிரபலமான நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இப்போது, நவீன காலப் பயணிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது போன்ற ஒரு விசா மூலம், அந்த நாடு தனது நற்பெயரை இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்கிறது. ‘டெஸ்டினேஷன் தாய்லாந்து விசா’ என்று அழைக்கப்படும் இது சுமார் ரூ.25 ஆயிரத்துக்கு கிடைக்கிறது.
இந்த 5 ஆண்டு கால மல்டிபிள்-என்ட்ரி...
உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 10 சதவீத கூடுதல் வரி செல்லாது என்று அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் பெரும்பாலான இறக்குமதிப் பொருட்களுக்கு 10 சதவீத வரியை விதித்தது. இதை எதிர்த்து 24 மாகாணங்களும், சில தனியார் நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட...
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு
admin - 0
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி.ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்கியது. இதில் 150 பயணிகள் மற்றும் மாலுமிகள் உட்பட 72 ஊழியர்கள் இருந்தனர். அண்டார்டிகா மற்றும் தெற்கு அட்லான்டிக் பகுதிகளின் தீவுகளுக்கு சொகுசு கப்பல் பயணம் மேற்கொண்டது. புறப்பட்ட...
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது போராக இதை மாற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தற்காலிக அமைதி நீண்ட காலப் போர்நிறுத்தத்துக்கான தொடக்கமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றியை...
அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத காலம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியில் இரு தரப்பும் மத்தியஸ்தர்கள் மூலம் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரானின் அணுசக்தி திட்டம்,...
மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் சுமார் 150 பயணிகளுடன் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பல் ஒன்றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனர்.
மேலும் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கலாம் என்ற தகவல் சர்வதேச அளவில் அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்த ஹன்டா வைரஸ் எலிகள் மற்றும் பெருச்சாளிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.
அவற்றின் எச்சில், சிறுநீர் அல்லது கழிவுகளுடன் நேரடித்...









