Google search engine
இந்திய செய்தி​யாளர்கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோ​ருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்​கப்​பட்டுள்​ளது. அமெரிக்க செய்​தி​யாளர் ஜோசப் புலிட்​சர் நினை​வாக, அமெரிக்​கா​வின் கொலம்​பியா பல்​கலைக்​கழகம் சார்​பில் ஆண்​டு​தோறும் புலிட்​சர் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதன்​படி இதழியல், இலக்​கி​யம், உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு நேற்று முன்​தினம் புலிட்​சர் விருது அறிவிக்​கப்​பட்டது. இதில் இந்​திய செய்​தி​யாளர்​கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோர் உள்​ளனர். டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி தொடர்​பாக, ‘‘டி​ராப்​டு’’ என்ற...
ஐக்​கிய அரபு அமீரகத்​தின் (யுஏஇ) புஜைரா துறை​முகத்​தின் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யதில் 3 இந்​தி​யர்​கள் படு​கா​யம் அடைந்​தனர். இதற்கு பிரதமர் நரேந்​திர மோடி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா, ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல்போர் நடை​பெற்​றது. தற்​போது இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலில் உள்​ளது. எனினும் ஹார்​முஸ் ஜலசந்​தியைஈரானும் அமெரிக்கா​வும் முடக்கி வைத்து உள்​ளன. இந்த சூழலில் அமெரிக்​கா​வின் நட்பு நாடான ஐக்​கிய...
சீனாவின் ஹுனான் மாகாணத் தலைநக​ர் சாங்ஷாவின் கீழ் உள்ள லியு​யாங் நகரில், ஹுவா ஷெங் பட்டாசு உற்​பத்தி ஆலையில் நேற்று முன்​தினம் பயங்கர வெடி​விபத்து ஏற்பட்​டது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்​குச் சென்ற தீயணைப்பு மற்​றும் மீட்​புக் குழு​வினர் தீயை கட்​டுக்​குள் கொண்டு​வந்​தனர். மேலும் 3 மீட்பு ரோபோக்​களும் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டன. இந்த விபத்​தில் 26 பேர் உயி​ரிழந்​த​தாக​வும் 61 பேர் காயமடைந்​த​தாக​வும் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். வெடி விபத்து நடந்த...
​சர்​வ​தேச அளவில் கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் போர் பதற்​றம் காரண​மாகப் பாகிஸ்​தானில் பெட்​ரோல், டீசல் உள்​ளிட்ட எரிபொருட்​களின் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. இந்​நிலை​யில் பாகிஸ்​தானின் சமா டிவிக்கு அளித்த பேட்டி பாகிஸ்​தான் அமைச்​சர் அலி பெர்​வேஸ் மாலிக் கூறிய​தாவது: எரிபொருள் வளத்​தில் பாகிஸ்​தான் நிலைமை மோச​மாகவே இருக்​கிறது. பாகிஸ்​தானிடம் தற்​போது அவசர கால (போர்) தேவைக்​கான எரிபொருள் இருப்பு ஒரு நாள் கூட கிடை​யாது என்​பதே உண்​மை....
கென்யாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.  கென்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள தாராகா நிதி, எல்கேயோ-மராக்வெட் மற்றும் கியாம்பு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான நிலச்சரிவுகள் பல குடும்பங்களை பாதித்துள்ளதுடன், ஏராளமானோர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், பொதுக் கட்டமைப்பு வசதிகளும் சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள்...
ரஷ்​யா​வின் 2 எண்​ணெய் கப்​பல்​களை உக்​ரைன் ராணுவம் தாக்கி அழித்​தது என்று அதிபர் விளாடிமிர் ஜெலன்​ஸ்கி தெரிவித்​துள்​ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்​டோ​ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த உக்​ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் போர் தொடங்​கியது. கடந்த 4 ஆண்​டு​களாக இரு நாடு​களும் ஒன்​றின் மீது ஒன்று தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில், டெலிகி​ராம் சமூக...
போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போரில் தற்போது தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. யுரேனியம் செறிவூட்டல் பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நீடிப்பதால் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதனிடையே...
ஈரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​ய​போது, ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மற்​றும் பிற இடங்​களை குறி​வைத்து ஈரான் 500 ஏவு​கணை​கள், 2,000 ட்ரோன்​களை ஏவி தாக்​குதல் நடத்​தி​யது. இவற்​றில் பெரும்​பாலானவை நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன. சில ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன்​கள் அமீரகத்​தில் பாதிப்பை ஏற்​படுத்​தின. ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு இஸ்​ரேல் ஏற்​கெனவே அயர்ன் டோம் என்ற வான் பாது​காப்பு ஆயுதங்​களை​யும், அவற்றை செயல்​படுத்த ராணுவத்​தினரை​யும்...
ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிய ஏந்தியபடியான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும், அணு ஆயுத முயற்சியை கைவிட...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் ஈ​ரானுட​னான நடை​பெற​விருந்த இரண்​டாம் கட்ட அமைதிப் பேச்​சு​வார்த்​தைகள் கடந்த வாரம் ரத்து செய்யப்​பட்​டன. இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ‘ட்​ரூத் சோஷியல்’ சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யுள்​ள​தாவது: ஈரா​னால் ஒரு முடிவுக்கு வர முடிய​வில்​லை. அணுசக்தி அல்​லாத ஒப்பந்தத்​தில் எப்​படி கையெழுத்​திடு​வது என்​பது கூட அவர்​களுக்​குத் தெரிய​வில்​லை. அவர்​கள் விரை​வில் புத்திசாலித்​தன​மாக செயல்​படு​வது நல்​லது. ஈரானின் கடற்​படை கடலுக்​கடி​யில் உள்​ளது; அவர்​களின் விமானப்​படை மற்​றும் ரேடார்...