இனப்பெருக்க அதிகரிப்பால் 80 நீர்யானைகளை கொல்ல கொலம்பியா முடிவு – ‘வன்தாரா’வுக்கு அனுப்ப ஆனந்த் அம்பானி வேண்டுகோள்
admin - 0
கொலம்பியா அரசு 80 நீர்யானைகளைக் கொல்ல முடிவு செய்துள்ளது. இவற்றை தடுத்து தன்னிடம் ஒப்படைக்க தொழிலதிபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொலம்பியாவின் கோகைன் போதைப் பொருள் கடத்தல் மன்னனாக திகழ்ந்தவர் பாப்லோ எஸ்கோபார். இவருக்கு லத்தீன் அமெரிக்காவில் மிகப் பெரிய தனியார் உயிரியல் பூங்கா அமைக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காக கடந்த 1980-ம் ஆண்டுகளில் 3 பெண் நீர்யானைகள் மற்றும் ஒரு ஆண் நீர்யானை கொலம்பியாவுக்கு இறக்குமதி...
“கோஹினூர் வைரத்தை திரும்பத் தருமாறு மன்னர் சார்லஸை வலியுறுத்துவேன்” – நியூயார்க் மேயர் மம்தானி
admin - 0
வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் வழங்குமாறு பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் வலியுறுத்த உள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கூறியுள்ளார்.
பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்நாட்டு அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை அவர்கள் சந்தித்தனர். வெள்ளை மாளிகையில் அவர்களுக்கு அமெரிக்கா அரசு முறை வரவேற்பை அளித்தது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நியூயார்க் நகர மேயர் ஜோரான்...
இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் சொல்லி மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான நிறுவனம். இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
நேபாள அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம்தான் நேபாள ஏர்லைன்ஸ். புதன்கிழமை அன்று தங்களது விமான நிறுவன சேவை கிடைக்கும் நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. அதில் டெல்லி,...
அமெரிக்கா தனது வாக்குறுதியை மீறியதால், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் இஸ்ரேல் - லெபனான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதால், ஹார் முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் அறிவித்தது. இதையடுத்து ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை விலக்கி கொள்ளப்படும் என அமெரிக்கா வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்கா...
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய நிலையில், “எங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த சனிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ், பிரிட்டனை சேர்ந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இது போர் நிறுத்த ஒப்பந்த மீறல்...
இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு: ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதி உறுதி
admin - 0
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுக தீர்வு காணப்படும் என ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா போர் நிறுத்த விதிகளை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது. ஜலசந்தி திறக்கப்படும் என்ற அறிவிப்பு அதற்கு முன் வெளியானதால், 2 இந்திய எண்ணெய்க் கப்பல்கள் பயணத்தைத் தொடர்ந்தன.
ஆனால், ஈரானிய புரட்சிகர காவல் படை ஒரு கப்பல் மீது துப்பாக்கிச்...
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் எரிசக்தி நிலையங்கள் தகர்க்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை
admin - 0
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இதனிடையே...
உக்ரைன் ட்ரோன்கள் மூலம் நடத்தும் தாக்குதலால் ரஷ்யாவுக்கு தினமும் ரூ.926 கோடி இழப்பு ஏற்படுகிறது.
ரஷ்யாவுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் தொழில் கச்சா எண்ணெய் விற்பனையும் முக்கியமானது. அதனால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், சேமிப்பு கிடங்குகள், துறைமுகங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவில் உள்ள 10 பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் டுவாப்சி சுத்திகரிப்பு நிலையம், ரோஸ்நெஃப்ட் சுத்திகரிப்பு மையம் ஆகியவையும்...
ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய ஈரானிடம் முதல் முறையாக சீனா வலியுறுத்தல்
admin - 0
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் பாதுகாப்பையும், தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் அரசுக்கு முதன்முறையாக சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக் சியுடன் புதன்கிழமை தொலைபேசியில் உரையாடிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறியுள்ளதாவது: தற்போதைய சூழல் மோதலுக்கும் அமைதிக்கும் இடையிலான ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
அமைதிக்கான ஒரு...
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பிபி நெதன்யாகு ஆகியோருடன் மிகச்சிறந்த உரையாடல்களை மேற்கொண்டேன்.
தங்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டும் வகையில், இன்று முதல் 10 நாட்கள் போர் நிறுத்தத்தைத் தொடங்க இந்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்....










