ட்ரோன் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அணு மின் நிலையத்தில் தீப்பற்றியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கதிர்வீச்சு பாதிப்பும் ஏற்படவில்லை.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திய போது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா,...
ஆப்கனில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன் அடுத்த கட்டமாக, ‘கணவன் - மனைவி பிரிவதற்கான கொள்கைகள்’ என்ற தலைப்பில் தலிபான்கள் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.
அதற்கு ஆப்கன் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார். அந்த சட்டத்திருத்தத்தில், ‘‘ஆப்கானிஸ்தானில் கன்னிப் பெண்கள் மவுனம், திருமணத்துக்கு சம்மதமாகக் கருதப்படும். பெண் குழந்தைகளின் திருமண விஷயத்தில், பருவம் அடைந்த பிறகு,...
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி கவுரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. இதையடுத்து பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி-க்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து சென்றிருந்தார்.
இந்நிலையில், இந்த பயணத்தில் மூன்றாவது நாடாக ஸ்வீடனுக்கு அவர் நேற்று...
“தைவானால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” – ட்ரம்ப்பிடம் ஜி ஜின்பிங் எச்சரிக்கை
admin - 0
சீனா - அமெரிக்கா உறவுகளில் மிக முக்கிய விஷயமாக இருக்கும் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது....
“சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும்” – ட்ரம்ப் முன்னிலையில் ஜி ஜின்பிங் விருப்பம்
admin - 0
சீனாவும் அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூன்று நாள் பயணமாக நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அவர், அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தார். பெய்ஜிங்கில் உள்ள மக்கள் பேரவையில் (Great Hall of the...
அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார்.
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. முன்னதாக, 2017-ம் ஆண்டு டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் பெய்ஜிங் சென்றிருந்தார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற ஜின்பிங் உடனான சந்திப்பின் போது டிரம்ப் பேசுகையில், “ஜி ஜின்பிங் ஒரு...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 3 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். சீன அதிபர் ஜி ஜின் பிங்கை அவர் நேற்று சந்தித்தார்.
அப்போது, "சீன – அமெரிக்க உறவில் தைவான் பிரச்சினை மிக முக்கியமானது. அதை சரிவர கையாளாவிட்டால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டு உறவும் ஆபத்தில் சிக்கும்"என்று ஜின்பிங் எச்சரித்தார்.
சுயாட்சி தீவான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருவதை ஏற்காத அமெரிக்கா, தொடந்து தைவானுக்கு ஆதரவு...
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் செயல்படுகிறது. இந்த கல்லூரியில் ஜவுளி தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
கடந்த 8-ம் தேதி வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 176 பேர் இளநிலை பட்டங்களையும், 26 பேர் முதுநிலை பட்டங்களையும் பெற்றனர். இந்த விழாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் அனில் கோச்சார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழாவில் பேசிய...
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு பெய்ஜிங்கில் இன்று நடைபெறுகிறது.
தைவானுக்கு ஆயுத விநியோகம், ஈரான் விவகாரம் மற்றும் இருதரப்பு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட சிக்கலான விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மே 13 முதல் 15...
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விற்கப்பட்டது. இதில் 15 சதவீத தொகை நிறுவனத்தில் பணியாற்றும் 540 ஊழியர்களுக்கு செல்ல வேண்டும் என ஃபைபர் பாண்ட் நிறுவன உரிமையாளர் கிரகாம் வாக்கர் நிபந்தனை விதித்தார்.
இந்தத் தொகையை 5 ஆண்டுகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். அதுவரை அவர்கள் பணியில்...









