கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநிவாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார். கடந்த பிப்.9-ம் தேதி முதல் இவரை காணவில்லை.
இந்நிலையில், சாகேத் சடலமாக மீட்கப்பட்டதை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாணவர் சாகேத் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை...
வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு – இந்தியாவின் சார்பில் ஓம் பிர்லா பங்கேற்பு
admin - 0
பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை (பிப்ரவரி 17-ம் தேதி) வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார்.
வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மறைந்த வங்கதேச பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 300 இடங்களைக் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப்...
வங்கதேசப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வச் செய்திக் குறிப்பில், வரும் காலங்களில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆழமான உறவை வளர்த்தெடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, பிஎன்பி கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மானைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக...
அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இறந்த இந்திய மாணவி குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு
admin - 0
அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்தியப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜானவி கன்டுலா, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தகவல்தொழில்நுட்பப் படிப்பு படித்து வந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு இவர் சியாட்டில் நகர சாலையை கடக்கும் போது, சைரன் ஒலியுடன் அவசரமாக சென்ற போலீஸ் வாகனம் மோதியது. இதில் ஜானவி கன்டுலா உயிரிழந்தார். இது...
வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.13) வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியமைக்க 151 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் பிஎன்பி தலைமையிலான 10 கட்சிகளின் கூட்டணி சுமார் 201 தொகுதிகளில் முன்னிலை...
வங்கதேச தேர்தல் முடிவுகள் | ‘இந்தியாவுக்கு நன்றி… இரு தரப்பு உறவு வலுப்படும்’ – பிஎன்பி நம்பிக்கை
admin - 0
வங்கதேச தேர்தல் முடிவுகளை அங்கீகரித்ததற்காகவும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக வங்கதேச தேசியவாத கட்சி தெரிவித்துள்ளது.
வங்கதேச நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், 59.44 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 299 இடங்களில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
ஜமாத் இ இஸ்லாமி தலைமையிலான...
வங்கதேசத் தேர்தலில் மறைந்த வங்கதேச பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி) கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். பின்னர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இதில் மறைந்த வங்கதேச பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி...
வங்கதேசத் தேர்தலில் பிஎன்பி கட்சி மூத்த தலைவரும், இந்து மதத்தைச் சேர்ந்தவருமான காயேஷ்வர் சந்திர ராய் போட்டியிட்டார். டாக்கா-3 தொகுதியில் போட்டியிட்ட அவர் மொத்தம் 99,163 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் வங்கதேச முன்னாள் அமைச்சர் ஆவார்.
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடைபெற்று வரும் வேளையில், சிறுபான்மையினராக இருக்கும் இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர் தலைநகர் டாக்காவில் உள்ள தொகுதியில் வெற்றி...
மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக். கடந்த 2025 ஆகஸ்ட் 3-ம் தேதி ‘டூயின்' மற்றும் இன்ஸ்டா கிராம் பக்கங்களில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார்.
அதில், மூன்று சிறுவர்கள் கே.எஃப்.சி உணவகத்தில் கோழி இறைச்சியை உண்டுவிட்டு, மீதமிருந்த எலும்புகளை வீணாக்க விரும்பாமல் அதனைச் சாதத்துடன் கலந்து ஒரு ஆதரவற்ற முதியவருக்கு வழங்குகின்றனர். ”இன்று நாம் ஒரு நற்செயல் செய்யப் போகிறோம்” என்ற பின்னணி குரலுடன் அந்த...
வங்கதேசத்தில் மேலும் ஒரு வர்த்தகர் கொடூர கொலை – இந்துக்களின் பாதுகாப்புக்கு சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தல்
admin - 0
வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்து வர்த்தகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகிய பிறகு நடந்த வன்முறை சம்பவம் மற்றும் தாக்குதல்களில் இந்துக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மைமென்சிங் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இந்து அரிசி வர்த்தகர் சுஷேன் சந்திர சர்க்கார் (62) கொடூரமான முறையில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர்...








