சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழப்பு

0
21

மேற்கு ஆப்​பிரிக்​கக் கடற்​கரை​யில் சுமார் 150 பயணி​களு​டன் நிறுத்​தப்​பட்​டுள்ள சொகுசுக் கப்​பல் ஒன்​றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்​பட்​டுள்​ளது. இதன் பாதிப்​பால் 3 பயணி​கள் உயி​ரிழந்​தனர்.

மேலும் பலர் உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், இந்த வைரஸ் மனிதர்​களிடையே பரவக்​கூடிய தன்​மை​யைக் கொண்​டிருக்​கலாம் என்ற தகவல் சர்​வ​தேச அளவில் அச்​சத்தை அதி​கரித்​துள்​ளது. இந்த ஹன்டா வைரஸ் எலிகள் மற்​றும் பெருச்சாளி​கள் மூலம் மனிதர்​களுக்​குப் பரவு​கிறது.

அவற்​றின் எச்​சில், சிறுநீர் அல்​லது கழி​வு​களு​டன் நேரடித் தொடர்பு ஏற்​படும்​போது பாதிப்பு உண்​டாகிறது. ஆனால், இந்த வைரஸால் எலிகளுக்​குப் பாதிப்பு ஏற்​படு​வ​தில்​லை. எலிக் கழி​வு​கள் படிந்த இடங்​களைச் சுத்​தம் செய்​யும்​போது, அந்த நுண்துகள்கள் காற்​றில் கலந்​து, அவற்றை சுவாசிப்​ப​தன் மூலம் பெரும்​பாலானோர் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

பொது​வாக ஹன்டா வைரஸ் மனிதர்​களிடையே பரவுவது மிக அரிது. இருப்​பினும், தென் அமெரிக்​கா​வில் காணப்​படும் ‘ஆண்டீஸ்’ வகை வைரஸ் மட்​டும் நெருங்​கிய தொடர்​பு​கள் மூலம் மனிதர்​களிடையே பரவ வாய்ப்​புள்​ளது. தற்​போது கப்​பலில் ஏற்பட்​டுள்ள பாதிப்​பும் இவ்​வகை​யாக இருக்​கலாம் என சந்தேகிக்கப்​படு​கிறது. ஆனால், உலகின் வெவ்​வேறு பகு​தி​களில் இவ்​வைரஸ் வெவ்​வேறு வித​மாகச் செயல்​படு​கிறது.

சில வகைகள் நுரை​யீரலைப் பாதிக்​கும்; சில வகைகள் சிறுநீரகம் மற்​றும் ரத்த நாளங்​களைப் பாதிப்​பவை​யாக உள்​ளன. காய்ச்​சல், தசை வலி மற்​றும் வயிற்று உபாதைகள் ஹன்டா வைரஸ் பாதிப்பின் ஆரம்​பகட்ட அறிகுறிகளாகும். இவை ஒரு வாரம் முதல் எட்டு வாரங்​களுக்​குள் வெளிப்​படும். ஆரம்​பத்​தில் இது சாதா​ரணக் காய்ச்​சல் போன்றே தோன்​றும்.

அமெரிக்​கக் கண்​டங்​களில் பரவும் ஹன்டா வைரஸ், நுரை​யீரலில் நீர் கோர்த்​துக் கொள்​ளும் நிலையை உரு​வாக்​கி, உயிருக்​கும் உலை வைக்​கும். உலக சுகா​தார அமைப்​பின் கூற்​றுப்​படி, நுரையீரல் பாதிப்பு ஏற்​படும்​போது இறப்பு விகிதம் 50% வரை இருக்​கலாம் என்று தெரிவிக்​கப்​படு​கிறது. ஆனால், ஐரோப்பா மற்றும் ஆசி​யா​வில் இதன் பாதிப்பு 1 முதல் 15% ஆக மட்​டுமே உள்ளது. ஹன்டா வைரஸைக் குணப்​படுத்​தத் தடுப்​பூசிகளோ அல்​லது நேரடி மருந்​துகளோ இல்​லை.

காய்ச்​சலைக் குறைத்​தல், உடலில் நீர்ச்​சத்​தைப் பராமரித்​தல் மற்றும் செயற்கை சுவாசக் கருவி​களின் மூலமே சிகிச்சை அளிக்கப்​படு​கிறது. எலிகளு​டன் தொடர்பு கொள்​வதைத் தவிர்ப்​பதே மிகச் சிறந்த பாது​காப்​பாகும். சுற்​றுப்​புறத்​தைத் தூய்மையாக வைத்​திருப்​ப​தன் மூலம் ஆபத்​தைக் குறைக்​கலாம்.

கப்​பலில் நிலைமை கவலைக்​கிட​மாக இருந்​தா​லும், நிலப்​பகுதியில் உள்ள பொது​மக்​களுக்கு உடனடி ஆபத்து ஏது​மில்லை என்று சுகா​தார நிபுணர்​கள் தெரி​வித்​துள்​ளனர். ‘எம்​.​வி. ஹோண்டியஸ்’ கப்​பலில் உள்ள நிலைமை மிக​வும் கவலைக்குரியதாக இருப்​ப​தாகப் பயணி ஜேக் ரோஸ்​மேரின் தெரி​வித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here