Google search engine
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னடப் படம் ‘காந்தாரா’. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக தற்போது போர்க்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காகத் திறமையான 500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்....
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜகுமாரி’யை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. 1947-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது என்றாலும் அந்த வெற்றிக்கு, தான் காரணமல்ல என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். இதனால் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக, தன்னை முன்னிலைப் படுத்தும் ஒரு கதையை எழுத ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். அப்படி அவர் உருவாக்கிய ஸ்கிரிப்ட் தான் ‘மர்மயோகி’! அந்த காலத்து ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோக்களான டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் (Douglas...
தமிழில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், கான்ஜூரிங் கண்ணப்பன் என பல படங்களில் நடித்திருக்கிறார் ரெஜினா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாளை (பிப்.06) வெளியாகும் இந்தப் படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படத்துக்காக முதலில் இயக்குநர் மகிழ் திருமேனி அழைத்தார். கதை கேட்டேன். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அழைத்தார்கள். நான்...
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. பல்வேறு சிக்கல்களை கடந்து இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதல் காட்சியாக இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணி...
பழம்பெரும் நடிகையும், நடிகர் ஏவி.எம் ராஜனின் மனைவியுமான புஷ்பலதா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் சினிமாவில் 1960, 1970 மற்றும் 80 களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் புஷ்பலதா. 1961-ம் ஆண்டு ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, போலீஸ்காரன் மகள், பார் மகளே பார், ஆலயமணி, வானம்பாடி, ஆண்டவன் கட்டளை, ராஜபார்ட் ரங்கதுரை, ஆயிரம் ஜென்மங்கள், கல்யாண ராமன் என...
விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்தியன் என்பதை நம்பாமல் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “படப்பிடிப்பு ஒன்றுக்காக நியூயார்க் சென்றிருந்தேன். அப்போது விமான நிலையத்தில் என்னைத் தடுத்துவிட்டார்கள். நான் இந்தியன் என்பதையும், எனது இந்திய பாஸ்போர்ட்டையும் அவர்கள் நம்பவில்லை. என்னைப் பதிலளிக்க விடாமல் கேள்வி கேட்டுக்...
மணிகண்டன், ஷான்வே மேக்னா, இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ படம், ஜன.24-ல் வெளியானது. சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரித்த இந்தப் படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். அவருடன் இணைந்து பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை அமைத்திருந்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி கூறும்போது, “குடும்பஸ்தன் படம் வெற்றி பெறும் என்று நினைத்தோம். இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. 10 வருடத்துக்கு முன்...
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. இதில் அவருடன் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி படமாக உருவாகியுள்ள இதை செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வழங்குகிறது. இந்தப் படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், லைம்லைட் பிரிவில் திரையிடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக இயக்குநர்...
மறைந்த டேனியல் பாலாஜி நடித்துள்ள படம், ‘ஆர்பிஎம்’. பிரசாத் பிரபாகர் இயக்கியுள்ள இதில் கோவை சரளா, ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி, சுனில் சுகதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜெ.செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்துள்ளார். இதை கோல்டன் ரீல் இன்டர்நேஷனல் புரொடக் ஷன் சார்பில் கல்பனா ராகவேந்தர் தயாரித்துள்ளார். படம் பற்றி பிரசாத் பிரபாகர் பேசும்போது, 'டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது....
சென்னையை பூர்​வீக​மாகக் கொண்ட சந்திரிகா டாண்​ட​னுக்கு கிராமி விருது வழங்​கப்​பட்​டுள்​ளது. இசைத்​துறை​யில் சிறந்து விளங்​குபவர்​களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருது வழங்​கப்​பட்டு வருகிறது. இசைத்​துறைக்கான உயர்ந்த விரு​தாகக் கருதப்​படும் இவ்விருது பாப், ராக்,நாட்டுப்புற இசை, ஜாஸ் என பல்வேறு இசைப்பிரிவு​களுக்கு வழங்​கப்​படு​கிறது. இந்த ஆண்டுக்கான 67-வது கிராமி விருது விழா, கலிபோர்​னி​யா​வில் காட்டுத்​தீ​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்​சியாக லாஸ் ஏஞ்சல்​ஸில் நடைபெற்​றது. அதில், அமெரிக்​காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகி...