Google search engine
வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் காவல் நிலையம்’ ஆகிய படங்களை இயக்கியவர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். இவர் இப்போது இயக்கும் படத்துக்கு ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 2எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்கிறார். தயாள் பத்மநாபன் இணைந்து தயாரிக்கும் இந்த த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில்,...
நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு ஹன்சிகாவுக்கும் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2024-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்துக் கோரி மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது. விவாகரத்து பெற்றாலும் கணவரிடம்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம், ஜன.10-ல் வெளியாகிறது. இப்படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்டதாவது, “‘பராசக்தி’ கதை நான் எழுதிய பின்பு பாராட்டுகளை பெற்ற அதேசமயம் கதையை சுற்றி பல சந்தேகங்களும் எழுந்தது. திரைக்கதை உருவாக்கமே கடினமாக இருந்தது. இந்தக் கதையை படமாக்குவது...
இரணியல் அருகில் நுள்ளிவிளை பகுதி தண்டவாளத்தில் நேற்று(நவம்பர் 21) மாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவரின் பைக் உள்ளிட்டவை ரயில்வே மேம்பாலம் ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. இறந்தவர் யார் என தெரியவில்லை. தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் லுங்கியும், அரைக்கைச் சட்டையும் அணிந்த நிலையில்...
பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘ரயில்’ திரைப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, படத்தின் தலைப்பு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்மகன்’, ‘நான் மகான் அல்ல’ உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் பாஸ்கர் சக்தி, தேசிய விருதுபெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கு கதை, வசனம் எழுதியிருந்தார். அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வடக்கன்’. இதில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர்....
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19-ம் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறது படக்குழு. தற்போது மார்ச் 19-ம் தேதி இப்படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன்...
‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் இதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு தீபிகா படுகோன் தீபிகா...
‘தொலைக்காட்சியில் பொழுதுபோக்காளராக மக்கள் பார்த்தார்கள். அதையே திரையுலகிலும் செய்யத் தொடங்கினேன்’ என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் நடிகர்கள், இயக்குநர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் குஷ்பு - சிவகார்த்திகேயன் இடையிலான உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் குஷ்புவின் கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்தார். அப்போது திரையுலகில் நடிகராக வலம் வருவது குறித்த கேள்விக்கு சிவகார்த்திகேயன், “தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு...
பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, சாய் ராஜ்குமார், பாவெல் நவகீதன், மாஸ்டர் அஜய் உள்ளிட்டோர் நடித்து 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘குற்றம் கடிதல்’. இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. இதை ஜே.எஸ்.கே. பிலிம் கார்பரேஷன் மூலம் சதீஷ்குமார் தயாரித்து நடிக்கிறார். எஸ்.கே.ஜீவா இயக்குகிறார். பாண்டியராஜன், அப்பு குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவல், பத்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்திசாவ்லா, விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர்...
 மல்​லிகேஸ்​வரர் கோயி​லுக்கு வந்த நடிகர் அஜித்​கு​மாரை ரசிகர்​கள் சூழ்ந்​து​கொண்​ட​தால் அவசர, அவசர​மாக வழி​பாடு செய்து ருத்​தி​ராட்ச மாலையை பெற்​றுக்​கொண்டு கிளம்பினார். தமிழகத்தை சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித்​கு​மார் கார் பந்தய வீர​ராக உள்​ளார். இவர், அடுத்த வாரம் இத்​தாலி​யில் கார் பந்தய போட்​டி​யில் பங்​கேற்க உள்​ளார். இந்த கார் பந்தய போட்​டி​யில், நடிகர் அஜித் வெற்றி பெற வேண்​டும் என அவரது நண்​பர் கார்த்​தி​கேயன் என்​பவர், மாமல்​லபுரம் மல்​லிகேஸ்​வரர் கோயி​லில் சிறப்பு...