Google search engine

தேங்காபட்டணம்: தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 2 பேர் கைது

தேங்காபட்டணம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் தலைமையில் போலீசார் தைவிடை என்ற பகுதியில் உள்ள முத்துவேல் (48) என்பவர் பெட்டிக்கடையில் சோதனையிட்ட போது, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தடை...

கிள்ளியூர்: புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பைங்குளம் ஊராட்சியில் உள்ள பரக்காணி அங்கன்வாடி மையம் எண் 20-க்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.11,97,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை, குழந்தைகள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆன Adv. எஸ்....

புதுக்கடை: 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே குஞ்சாகோடு பகுதியைச் சேர்ந்தவர் சசி என்பவர் மகன் ஆதர்ஷ் (15). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரியும் உண்டு. தந்தை சசி தற்போது வெளியூரில் கொத்தனார் வேலை செய்கிறார். தற்போது ஆதர்ஷின் தாயார்...

மார்த்தாண்டம்:   கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (40). இவர் கொத்தனார். இவரது தங்கை பியூலா என்பவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த கொத்தனார் பாபு தாஸ் (57) என்பவருக்கும் சொத்துத் தகராறு உள்ளது. இந்த நிலையில் பியூலா வீட்டுக் காம்பவுண்ட் சுவர் கட்டுமானப் பணி நடைபெற்றது.  அப்போது அவரது...

திங்கள்சந்தை: மாணவியின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல்

நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள் கேரளா மாநிலம் மூணார் பகுதிக்கு பஸ்சில் சுற்றுலா சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திங்கள்சந்தை அடுத்த மாங்குழி பகுதியை சேர்ந்த ஆதிகா (19), அஞ்சுகிராமம் வேணிகா (19), நெல்லை மாவட்டம் ஏர்வாடி சேர்ந்த சுதன்...

களியக்காவிளை: பயிர்களை சேதப்படுத்திய தம்பதி; வழக்கு பதிவு

படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அதங்கோடு பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் வாழை, பப்பாளி மரங்களை பயிரிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் தாமரேசன்(59), அவரது மனைவி சரோஜா (50). இவர்கள் சுரேஷ்குமாருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாழை, பப்பாளி...

பளுகல்: பெண்களிடம் ரூ.13 லட்சம் மோசடி

களியக்காவிளை அருகே பளுகல் என்ற இடத்தை சேர்ந்தவர் மணியன் மனைவி ராணி (45). இந்த தம்பதிக்கு விபின் என்ற மகன் உள்ளார். ராணிக்கும் புரவலூர் பகுதியை சேர்ந்த சந்தியா (44) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்புடன் பழகிய நிலையில் ராணி சந்தியாவிடம் இருந்து கடந்த...

நீரோடி: ஏவிஎம் கால்வாய்; கலெக்டர் திடீர் ஆய்வு

குமரி மாவட்டத்தையும் கேரளாவையும் இணைக்கும் நீர்வழிப் போக்குவரத்து பாதையாக இருந்த வரலாற்று சிறப்புமிக்க ஏவிஎம் கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது. ஒரு காலத்தில் கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து மண்டைக்காடு வரை நீர்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு போன்றவற்றிற்கு இக்கால்வாய் பிரதானமாக விளங்கியது. தற்போது இந்த கால்வாய் செயல்பாடின்றி...

இரயுமன்துறை: மீன் பிடி துறைமுக சீரமைப்பு கூட்டம்

தேங்காப்பட்டணத்தில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இங்கு ஏராளமான நாட்டுப்புற படகுகளும், விசைப்படகுகளும் தங்குதளமாக கொண்டு மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றன. தற்போது இரைமன் துறை பகுதியில் கட்டப்படும் படகு தங்குதளத்தின் நீளம் அதிகரிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.  இதை ஏற்று அரசு 70 கோடி ரூபாய்...

நாதக பொறுப்பில் இருந்து விலகிய காளியம்மாள்.. திமுகவுடன் இணையவுள்ளதாக தகவல்

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த மாதம் தூத்துக்குடி மணப்பாட்டில் நடைபெறும் ‘உறவுகள் சங்கமம்’ எனும் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளராகவே காளியம்மாள் பங்கேற்கிறார். அங்கு திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்வில்,...