மண்டைக்காடு:  இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

0
51

மண்டைக்காடு அருகே அழகன்பாறை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் மகள் ஆஷிகா (27). இவருக்கும் படர்நிலம் பகுதியை சேர்ந்த வினோ என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வினோ – ஆஷிகா தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் தனது பெற்றோர் வீட்டில் ஆஷிகா வசித்து வந்தார். 

இதற்கு இடையே கணவன் மனைவி தங்களுக்கு விவாகரத்து கேட்டு நாகர்கோவில் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று சசிகுமார் மற்றும் மனைவி ஜெயா ஆகியோர் வெளியில் சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த ஆஷிகா திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்டைக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் ஆஷிகா உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 வருடங்களில் இறந்ததால் பத்மநாபபுரம் சப்கலெக்டர் விசாரணையை தொடங்கி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here