நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்துள்ளது. கோடை காலத்தில் மைனஸ் அளவுக்கு சென்ற நீர்மட்டம், தற்போது 25 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 11.30 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.















