Google search engine

மார்த்தாண்டம்: அழுகிய நிலையில் சடலமாக கிடந்த டிரைவர்

மாமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் அருண் (26). டிரைவர். அருணின் 3 வயதில் தந்தை, தாய், தங்கை ஒரு வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் பாட்டியிடம் வளர்ந்தார். பாட்டியும் தற்போது உயிரிழந்தார். அருணின் வீடு கடந்த 3 நாட்களாக திறக்காமல் பூட்டிய நிலையில் காணப்பட்டது. நேற்று வீட்டில் இருந்து...

மண்டைக்காடு: வேலைக்கு சென்ற பட்டதாரி பெண் மாயம்

மண்டைக்காடு அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்தவர் நாராயண வடிவு இவரது மகள் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு நாகர்கோவில் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் 4 வருடமாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2ஆம் தேதி வேலைக்குச் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும்...

நடைக்காவு: சாலை பணிகளை துவக்கிய எம்எல்ஏ

நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட மணிலி - பாத்திமா நகர் - பெருங்குளம் சாலை சீரமைக்க ரூ. 1 கோடியே 20 லட்சத்து 21,356 நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று பாத்திமா நகர் பகுதியில் வைத்து ராஜேஷ் குமார் எம்எல்ஏ...

நித்திரவிளை: டாஸ்மாக் பாரில் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

கிள்ளியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெப்ரிமோள் தலைமையில் நித்திரவிளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் பாரில் நேற்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் தரக்குறைவான தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.  இதை அடுத்து அதிகாரிகள் அங்கிருந்து 300 மில்லி...

இரணியல்: தொழிலாளி தூக்கிட்டு  தற்கொலை

குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பால்சிங் (52). பூ கட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர். அதிக மதுப்பழக்கம் உள்ளவர். சம்பவ தினம் வேலை முடிந்து வந்த பால்சிங் அதிக மது போதையில் இருந்துள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு அவரது அறைக்கு சென்று விட்டார். மறுநாள்...

மார்த்தாண்டம்: வீட்டு பொருட்களை சூறையாடிய பெண் கைது

மார்த்தாண்டம் சிங்கிளேயர் தெருவை சேர்ந்தவர் பிஜி ஜோசப் (50). பொறியாளர். இவர் வீட்டின் மாடி அறையை தனியார் வங்கிக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வங்கியில் ஆஷா (32) என்பவர் ஊழியராக வேலை செய்தாராம். தற்போது அந்த வங்கி திவால் ஆனதால் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. நேற்று அங்கு வந்த...

மார்த்தாண்டம்: விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் படுகாயம்

மார்த்தாண்டம் லீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பிரபாகிஷன் (21) சட்டக் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவர். நேற்று இவர் பைக்கில் மார்த்தாண்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வெட்டுமணி பகுதியில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு ஸ்கூட்டரை மோதியது.  இதில் படுகாயம் அடைந்த பிரபாகிஷன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு...

இடைக்கோடு: சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்

இடைக்கோடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவில் மேல் தளத்தில் ரூ. 60 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டிட பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளை கலெக்டர் அழகு மீனா இன்று பார்வையிட்டார்.  தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மேலும் அங்கு...

விளவங்கோடு: மாதம் 35 கிலோ அரிசி.. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை வறுமை கோட்டுக்கு கீழ் வகைப்படுத்தி குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ அரிசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழித்துறை, விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின்...

கிள்ளியூர்: திமுக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், ஒன்றிய செயலாளர் பி கோபால் தலைமையில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற கோஷத்தோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (ஜூலை 3) மாலை நடைபெற்றது.  பாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், இந்திரா நகர், பூட்டேற்றி காலனி பகுதிகளில் வீடு...