குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பால்சிங் (52). பூ கட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர். அதிக மதுப்பழக்கம் உள்ளவர். சம்பவ தினம் வேலை முடிந்து வந்த பால்சிங் அதிக மது போதையில் இருந்துள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு அவரது அறைக்கு சென்று விட்டார். மறுநாள் காலை பால்சிங் வீட்டு உத்தரத்தில் தூக்கு மாட்டி சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து அவர் மனைவி பாப்பா (45) இரணியல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். போலீசார் உடலை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.