ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 321 ரன்கள் குவித்த இந்திய அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்றார். அவர், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 97* ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 89 ரன்களும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் 89 ரன்களையும் விளாசி அணியின் வெற்றிகளில்...
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான எம்.எஸ்.தோனி அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விஐபி மாடத்திலிருந்து ண்டுகளித்தார். போட்டி முடிந்து இந்திய அணி கோப்பையை வென்ற சில நிமிடங்களிலேயே, தோனி ஒரு மகிழ்ச்சியான பதிவை வெளியிட்டார்.
அதில், “அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், அணி வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா நாட்டின் பொக்கிஷம் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையையும்,...
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சகாப்தம் படைக்கிறோமா? – மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்
admin - 0
இந்திய கிரிக்கெட் அணி கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று ஐசிசி கோப்பைகளை (2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2026-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை) வென்றிருப்பது ஒரு அசாத்தியமான சாதனை என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், 1999-2007 காலகட்டத்தில் ஆஸ்திரேலியா காட்டிய ஆதிக்கத்துடன் ஒப்பிடும்போது இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மிக எதார்த்தமான ஒரு பார்வையை முன்வைக்கிறார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன்...
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று வரலாறு படைத்தது. இதில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்களித்தவர் இஷான் கிஷன். இறுதிப் போட்டியில் 25 பந்துகளில் 54 ரன்களை அவர் விளாசியது குறிப்பிடத்தக்கது. இதோடு மூன்று கேட்ச்களையும் அவர் பிடித்திருந்தார்.
நியூஸிலாந்து அணி உடனான இறுதிப் போட்டிக்கு முதல் நாளன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த இஷான் கிஷனுக்கு கார் விபத்தில் தனது சகோதரி (Cousin) மற்றும்...
தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் குழந்தையுடன் சூர்யா நடப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
அது, மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்து வெளியான...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு 256 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள்...
ஐடிடி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளரான...
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 கோப்பையை 3-வது முறையாகக் கைப்பற்றியது.
இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் சஞ்சு சாம்சன், தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இந்நிலையில், மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு அவர் கூறியதாவது:
“ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது எனக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அப்போது எனக்கு என்ன மாதிரியான மனநிலை தேவை என்பதை தேடினேன். அப்போது சச்சினை தொடர்பு...










