Google search engine
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் வரும் 20-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக, பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒரு மணிநேரம் தாமதமாக பணிக்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளால் பாதுகாப்பு துறை ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 223 ஆண்டுகள் பழமையான...
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்துக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்துவற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை மருத்துவ சிகிச்சைகளுக்காக டிஸ்பென்சரி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏற்கெனவே இரண்டு பொது மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், ஊழியர்கள், மனுதாரர்கள், அதில் தொடர்புடையோர் என நீதிமன்றம் சார்ந்த அனைவருக்கும் ஏதேனும் அடிப்படை சிகிச்சை தேவைப்பட்டால் அங்கு...
அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து, மின் தடைக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்ய வேண்டும் என, மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மாநிலம் முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் போது, மின்வாரியம் முன்னெடுத்துள்ள புதிய...
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 4 வார்டுகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர். தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 133 மக்கள் பிரதிநிதி பதவிகள் காலியாக உள்ளன. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 உள்ளாட்சி பிரதிநிதி பதவிகள் காலியாக...
மது​ராந்​தகம் அருகே நடை​பெற்ற வணி​கர் தின மாநாட்​டில் பங்​கேற்ற முதல்​வர் மு‌.க.ஸ்​டா​லின், தமிழகத்​தில் 24 மணி நேர​மும் கடைகள் செயல்​படு​வதற்​கான ஆணையை மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டிப்பு செய்​வ​தாக அறி​வித்​தார். செங்​கல்​பட்டு மாவட்​டம், மது​ராந்​தகத்​தில் வணி​கர் தினத்தை முன்​னிட்டு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு சார்​பில் வணி​கர் தின மாநாடு நேற்று நடை​பெற்​றது. இதில், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சிறப்பு அழைப்​பாள​ராக பங்​கேற்​றார். அவர், நிகழ்ச்​சி​யில் பேசி​ய​தாவது: வணி​கர் தின​மான மே...
மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்த பயணிகளிடம் ஆன்லைன் மற்றும் க்யூஆர் குறியீடு மூலமாக கருத்து கேட்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) நடத்தி வருகிறது. சென்னையில் விமான நிலையம் - விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் என 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். விரைவான, பாதுகாப்பான பயணம்...
நீட் விலக்கு பெற முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் "அன்னம் தரும் அமுதக்கரங்கள்" திட்டமானது கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முதல் 2026 பிப்ரவரி 19-ம் தேதி வரை 365 நாட்களும் தினமும் 1000 நபர்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு...
வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில், இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வரும் 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழித் தடம் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகளுக்கு14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் கிடைக்கும்...
அரசி​யலமைப்பு சட்​டத்தை அழிக்க துடிக்​கும் பாஜக அரசை எதிர்க்​கும் வழியை இந்​திய மக்​களுக்கு தமிழகம் காட்டியிருக்​கிறது என அகில இந்​திய காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​தார். தமிழக காங்​கிரஸ் கட்சி சார்​பில் ‘அரசி​யலமைப்பை காப்​பாற்​று​வோம்’ என்ற தலைப்​பில் அரசி​யல் மாநாடு சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள காங்​கிரஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை மாநாட்​டுக்கு தலைமை வகித்​து, ‘இந்​திய அரசி​யலமைப்​பு’ புத்​தகத்தை காங்​கிரஸ் நிர்​வாகி​களுக்கு வழங்கினார்....
குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் மருத்துவர் மோகன் ராஜன் தெரிவித்தார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் ‘விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்’ எனும் கருப்பொருளில் விழித்திரை சிகிச்சை குறித்த மாநாடு ‘ரெட்டிகான் 2025’ சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைவர் அமர் அகர்வால் தலைமையில், தலைமை மருத்துவ...