கடைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்: வணி​கர்​களுக்கு முதல்​வர் ஸ்​டா​லின் வேண்​டு​கோள்

0
36

மது​ராந்​தகம் அருகே நடை​பெற்ற வணி​கர் தின மாநாட்​டில் பங்​கேற்ற முதல்​வர் மு‌.க.ஸ்​டா​லின், தமிழகத்​தில் 24 மணி நேர​மும் கடைகள் செயல்​படு​வதற்​கான ஆணையை மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டிப்பு செய்​வ​தாக அறி​வித்​தார். செங்​கல்​பட்டு மாவட்​டம், மது​ராந்​தகத்​தில் வணி​கர் தினத்தை முன்​னிட்டு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு சார்​பில் வணி​கர் தின மாநாடு நேற்று நடை​பெற்​றது.

இதில், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சிறப்பு அழைப்​பாள​ராக பங்​கேற்​றார். அவர், நிகழ்ச்​சி​யில் பேசி​ய​தாவது: வணி​கர் தின​மான மே 5-ம் தேதியை வணி​கர் தின நாளாக அறி​விப்​ப​தற்​கான அரசாணை விரை​வில் வெளி​யிடப்​படும். தமிழகத்​தில் 24 மணி நேர​மும் கடைகள் செயல்​படும் வகையி​லான அறி​விப்​பு, மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டிக்​கப்​படு​கிறது. அதே​போல், தமிழகத்​தில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்​டும் எனக் கேட்​டுக்​கொள்​கிறேன்.

வணி​கர் சங்​கத்​தில் நிரந்தர உறுப்​பின​ராக உள்​ளவர்​களுக்கு உதவித் தொகை​யாக தற்​போது ரூ.3 லட்​சம் வழங்​கப்​பட்ட வரு​கிறது. இதை ரூ.5 லட்​ச​மாக உயர்த்தி வழங்​கப்​படும். அமை​தி​யான மாநிலத்​தில்​தான் தொழிலும், வணி​க​மும் வளரும். தொழிலா​ளர்​கள் மற்​றும் வணி​கர்​கள் நிம்​ம​தி​யாக இருக்​கும் வகை​யில் அமைதி மிக்க மாநில​மாக தமிழகத்தை உரு​வாக்கி இருக்​கிறோம். வணி​கர் சங்​கம் சார்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்ள அனைத்து கோரிக்​கைகளும் படிப்​படி​யாக நிறைவேற்​றப்​படும்.

தேர்​தல் நேரத்​தில் அறிவிக்​கப்​பட்ட அனைத்து வாக்​குறு​தி​களும் நிறைவேற்​றப்​படும். நான் முதல்​வன் திட்​டத்​தின் மூலம் குடிமைப் பணி தேர்​வு​களில் பலர் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். பள்ளி மாணவர்​கள் அனை​வருக்​கும் பயனளிக்​கும் வகை​யில், காலை உணவு திட்​டத்தை சிறப்​பாக செயல்​படுத்தி வரு​கிறோம். மிக​வும் கவன​மாக திட்​டத்தை செயல்​படுத்தி வரு​கிறோம். தொழில் துறை​யில், இந்​தி​யா​விலேயே தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது. இந்​தி​யா​வில் எந்த மாநில​மும் எட்​டாத சாதனையை நாம் செய்​துள்​ளோம்.

திரா​விட மாடல் அரசு பொறுப்​பேற்று 4 ஆண்​டு​கள் நிறைவடைந்​து​விட்​டன. என்னை நம்பி வாக்​களித்த மக்​களுக்கு தொடர்ந்து நான் சேவை​யாற்​று​வேன். இது உங்​களு​டைய அரசு. தொடர்ந்து எங்​களுக்கு ஆதரவு அளி​யுங்​கள். வணி​கர்​கள் அனை​வரும் கடைகளுக்கு தமிழில் பெயர் சூட்​டுங்​கள். இதுவே என் பெரிய கோரிக்​கை. இவ்​வாறு அவர் பேசி​னார். இந்​நிகழ்ச்​சி​யில், வணி​கர் சங்க பேரமைப்பு தலை​வர் விக்​கிரம​ராஜா உட்பட வணி​கர் சங்​கத்​தின் பல்​வேறு நிர்​வாகி​கள் மற்​றும்​ உறுப்​பினர்​கள்​ கலந்​து கொண்​டனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here