பாஜக அரசை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழகம்: காங்கிரஸ் மாநாட்டில் கிரிஷ் சோடங்கர் பேச்சு

0
38

அரசி​யலமைப்பு சட்​டத்தை அழிக்க துடிக்​கும் பாஜக அரசை எதிர்க்​கும் வழியை இந்​திய மக்​களுக்கு தமிழகம் காட்டியிருக்​கிறது என அகில இந்​திய காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​தார். தமிழக காங்​கிரஸ் கட்சி சார்​பில் ‘அரசி​யலமைப்பை காப்​பாற்​று​வோம்’ என்ற தலைப்​பில் அரசி​யல் மாநாடு சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள காங்​கிரஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது.

கட்​சி​யின் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை மாநாட்​டுக்கு தலைமை வகித்​து, ‘இந்​திய அரசி​யலமைப்​பு’ புத்​தகத்தை காங்​கிரஸ் நிர்​வாகி​களுக்கு வழங்கினார். ‘ஒரு​மித்த குரலோடு, ஒற்​றுமை​யான கைகளோடு இந்​திய தேசத்தை பாது​காப்​போம்’ என்று உறு​தி​மொழி எடுத்​துக்​கொண்​டனர்.

மாநாட்​டில் கு.செல்​வப்​பெருந்​தகை பேசி​ய​தாவது: காங்​கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்​டங்​கள் மக்​களுக்​கானது. ஆனால் பாஜக கொண்டு வந்த திட்​டங்​கள் அம்​பானிக்​கும், அதானிக்​கு​மானது. பாஜக ஆட்​சி​யில் 50 சதவீதத்​துக்கு மேல் தேசத்​தில் ஒவ்​வொரு குடிமகன் மீதும் கடன் சுமத்​தப்​பட்​டிருக்​கிறது.

அரசி​யலமைப்பு சட்​டத்தை மாற்றி எழுத வேண்​டும் என்​பது தான் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் திட்​ட​மாகும். ஆனால் யார் ஆட்​சிக்கு வந்​தா​லும் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் அடிப்​படையை மாற்ற முடி​யாது. அங்கே தான் அம்​பேத்​கர் மக்​களோடு வாழ்ந்து கொண்​டிருக்​கிறார். இவ்​வாறு அவர் பேசி​னார்.

தொடர்ந்து மாநாட்​டில் கலந்து கொண்ட அகில இந்​திய காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் பேசுகை​யில், ‘‘நாட்​டில் ஜனநாயக படு​கொலை நடந்து கொண்​டிருக்​கிறது. அம்​பேத்​கர் உரு​வாக்​கிய அரசி​யலமைப்பு சட்​டத்தை பாது​காக்க வேண்​டியது நமது கடமை. அமலாக்​கத்​துறை​யும், சிபிஐ​யும் பாஜக அரசின் கைப்​பாவை​யாக செயல்​பட்டு கொண்​டிருக்​கிறது.

புதுச்​சேரி​யில் பெரியள​வில் ஊழல் நடை​பெற்று கொண்​டிருக்​கும் நிலை​யில் அங்​கெல்​லாம் அமலாக்​கத்​துறை செல்​லாமல், தமிழகத்​துக்கு வரு​கிறது. இதையெல்​லாம் நாட்டு மக்​கள் நன்கு அறி​வார்​கள்.

இந்த ஆட்​சி​யாளர்​கள் விரை​வில் மாற்​றப்​படு​வார்​கள். ஆளுநருக்கு எதி​ராக பெற்ற உச்​ச நீ​தி​மன்ற தீர்ப்​பின் மூலம் பல்​வேறு வழிகளில் அரசி​யலமைப்பு சட்​டத்தை அழிக்க துடிக்​கும் மோடி அரசை எதிர்க்​கும் வழியை இந்​திய மக்​களுக்கு தமிழகம் எடுத்​துக்​காட்​டி​யிருக்​கிறது.” என்று குறிப்​பிட்​டார்.

இம்​மா​நாட்​டில் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் கே.​வி.தங்​க​பாலு, சு.​திரு​நாவுக்​கரசர், கே.எஸ்​.அழகிரி, எம்​.கிருஷ்ண​சாமி, அகில இந்​திய காங்​கிரஸ் கட்சி சொத்து பாது​காப்பு குழு​வின் தலை​வர் விஜய் இந்​தர் சிங்​கலா, இணை செய​லா​ளர் நிதின் கும்​பல்​கர், எம்​பி.க்​கள் சுதா ராமகிருஷ்ணன், சசி​காந்த் செந்​தில், விஜய்​ வசந்த்​, முன்​னாள்​ எம்​பி. ஏ.செல்​லக்​கு​மார்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here