Google search engine
தோல்விக்​கான காரணம், தற்​போதைய அரசி​யல் சூழல் குறித்து கட்சி நிர்​வாகி​களு​டன் திமுக தலை​வர் மு.க.ஸ்டாலின் ஆலோ​சனை நடத்​தி​னார். இதில் உதயநி​தி, கனி​மொழி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக ஆட்​சியை இழந்​துள்ள நிலை​யில் தோல்விக்​கான காரணம் குறித்து ஆராய குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த குழு​வினர் ஒவ்​வொரு தொகு​திக்​கும் சென்று தேர்​தல் தோல்விக்​கான காரணங்​கள் குறித்து கள ஆய்வு செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், திமுக தலை​வர் ஸ்டா​லின் நேற்று காலை சென்னை...
உரங்​களின் விலை உயர்வை கட்​டுப்​படுத்த மத்​திய அரசு உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்​து, அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: அமெரிக்க ஏகா​திபத்​தி​யத்​தின் சதி​யால் மத்​திய கிழக்கு நாடு​களில் நில​விவரும் போர் பதற்​றச் சூழல் காரண​மாக​வும், ஹார்​முஸ் நீரிணை வழி​யான வணி​கக் கப்​பல் போக்​கு​வரத்து முடக்​கப்​பட்​டுள்​ள​தா​லும், உலகளா​விய உர விநி​யோகச் சங்​கி​லி​யில் பெரிய பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. வெளி​நாடு​களில் இருந்து உரத்தை இறக்​குமதி செய்​வது...
மின்சாரத் துறையின் ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.நிர்மல் குமார், தலைமைச் செயலர் எம்.சாய்குமார், மின்துறை செயலர் மங்கத் ராம் சர்மா, மின் வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலர் மு.அ.சித்திக் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண் டனர். இக்கூட்டத்தில், மாநிலத்தின் மின் உற்பத்தி, மின்தேவை, மின் விநியோகம், நிதிநிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்காலக்...
விஜய் முதல்​வ​ராகப் பதவி​யேற்​ற​தால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்​எல்ஏ கருப்​பையா நேர்த்​திக்​கடன் செலுத்​தி​னார். மதுரை மாவட்​டம் சோழ​வந்​தான் தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வென்​றவர் எம்​.வீ.கருப்​பை​யா. சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது தவெக வெற்​றி​பெற்று விஜய் முதல்​வ​ராக வேண்​டும் என சோழ​வந்​தான் ஜெனகை மாரி​யம்​மனுக்கு அவர் வேண்​டு​தல் வைத்​திருந்​தார். இதன்​படி விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​றார். இந்​நிலை​யில் நேற்று ஜெனகை மாரி​யம்​மன் கோயில் வைகாசி திரு​விழா கொடியேற்​றம் நடந்த நிலை​யில், நகரி சாலை​யில்...
காக்களூரில் ஒரே நாளில் 18 பேரை தெரு நாய் கடித்ததை அடுத்து நேற்று கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், காக்களூர், புட்லூர் பகுதிகளில் 75 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத் தப்பட்டது; 10 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஊராட்சி பகுதிகளில் கூட்டமாக சுற்றி வரும் தெரு நாய்களில் ஒன்று நேற்று முன் தினம் சாலையில் சென்ற 18 பேரை கடித்தது....
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக ஆட்சியிலும்...
எம்​ஜிஆர், ஜெயலலிதா உரு​வாக்​கிய இயக்​கம் பழனி​சாமி​யால் வலு​விழந்​து​விட்​ட​தாக நிதி அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார். கோவை விமான நிலை​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் மேலும் அவர் கூறிய​தாவது: தமிழக பொருளா​தார நெருக்​கடிகளை சமாளிக்​கும் திறமை விஜய்​யிடம் உள்​ளது. மகளிர் பாது​காப்​பு, போதைப்​பொருள் தடுப்பு போன்ற விஷ​யங்​களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்​கப்​பட்டுவரு​கிறது. 717 டாஸ்மாக் கடைகள் அகற்​றப்​பட்​டுள்​ளன. பொறுப்​பேற்ற உடனேயே இவ்​வளவு சாதனை​கள் செய்யப்பட்டுள்ளன. அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் நிலைப்​பாடு​களை பார்க்​கும்​போது எம்ஜிஆர், ஜெயலலிதா...
தமிழகம் முழு​வதும் தெரு நாய்​கள் குழந்​தைகள், பெரிய​வர்​கள் என அனை​வரை​யும் கடிக்​கும் நிகழ்வு தொடர் கதை ஆகி​விட்​டது. இதனால் உயி​ரிழப்​பு​களும் ஏற்​படு​கிறது. திரு​வள்​ளூர் அடுத்த காக்​களூர் ஊராட்​சி​யில் நாய்கள் கூட்​ட​மாக சுற்றி வரு​கின்​றன. திரு​வள்​ளூரில் இருந்து காக்​களூர் வழி​யாக இருசக்கர வாக​னத்​தில், நடந்து செல்​பவர்​கள் நாய்​கள் கடித்து விடுமோ என்ற அச்​சத்​தில் சாலையை கடந்து செல்​கின்​றனர். இந்​நிலை​யில் காக்​களூர் ஊராட்சி குடி​யிருப்பு பகு​தி​யில் சுற்​றித் திரிந்த தெரு நாய்க்கு வெறி பிடித்​த​தாக...
மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தஞ்​சாவூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறியது: சமூக நீதி, மதச்​சார்​பின்​மை, ஜனநாயகம், பெண்​கள் பாது​காப்​பு, தமிழக வாழ்​வா​தா​ரங்​களை காக்​கும் கடமை இவற்​றில் எள்​ளள​வும் பிச​காமல் முதல்​வர் விஜய் ஆட்​சியை நடத்த வேண்​டும். மத்​திய அரசின் பி.எம். திட்​டத்​தையோ, மும்மொழி திட்​டத்​தையோ முந்​தைய திமுக அரசு ஏற்​றுக்​கொள்ளவில்லை. அதே நிலைப்​பாட்டை தான் இந்த அரசும் பின்​பற்ற வேண்​டும் என்று வலி​யுறுத்​துகிறேன். நீட் தேர்வு நிரந்​தர​மாக ரத்து செய்​யப்பட வேண்​டும். கேள்​வித்​தாள்...
சென்னை ரயில்வே கோட்​டத்​தில், நடப்பு நிதி​யாண்​டில் 2,600 கிலோ​வாட் சூரிய மின்​சக்​தியை உற்​பத்தி செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டத்​தில், சூரியசக்தி உள்​கட்​டமைப்பை விரிவுபடுத்த முயற்சி எடுக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், கடந்த நிதி​யாண்​டில் பரங்​கிமலை ரயில் நிலை​யம், ஆவடி​யில் உள்ள மண்டல மின்​சார இழுவை பயிற்சி மையம், ஆண்​கள் விடுதி மற்​றும் கிண்டி ரயில் நிலை​யம் ஆகிய​வற்​றில் மொத்​தம் 140 கிலோ​வாட் திறன்...