Google search engine
முரசொலி அறக்​கட்​டளை நிர்​வாகம் சட்​ட​விரோத நடவடிக்​கை​களில் ஈடு​பட்​ட​தாக குற்​றம்​சாட்டி தொடரப்​பட்ட வழக்​கில் சிபிஐ, தேசிய தாழ்த்​தப்​பட்​டோர் ஆணை​யம் தரப்​பில் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. நெல்​லை​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் வெங்​க​டாஜலபதி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யுள்​ள​தாவது: முரசொலி அறக்​கட்​டளை​யின் அலு​வல​கம் பஞ்​சமி நிலத்தை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​ட​தாக ஏற்​கெனவே குற்​றச்​சாட்​டு​கள் உள்​ளன. இந்த நிலை​யில், ஆளுங்​கட்​சி​யின் அதி​கார பலத்​துடன் சட்​ட​விரோத நடவடிக்​கை​களி​லும் அறக்​கட்​டளை நிர்​வாகம் ஈடு​பட்​டுள்​ளது. அதற்கு...
மகாவீர் ஜெயந்தி தினத்​தில் மது​பானம் விற்​பனை செய்​யக்​கூ​டாது, மீறி​னால் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மார்ச் 31-ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்​னிட்டு தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை மற்​றும் தமிழ்​நாடு மது​பான உரிமம் மற்​றும் அனு​மதி விதி​களின்​கீழ் சென்னை மாவட்​டத்​தில் உள்ள அனைத்து டாஸ்​மாக் மது​பான சில்​லறை விற்​பனைக் கடைகள்,...
மதுராந்தகம் அடுத்த வையாவூரில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ள சுவற்றை அகற்றாவிட்டால், சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் அமைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வையாவூர் கிராமத்தில் படவேட்டம்மன் கோயில் தெருவில் தனிநபர் ஒருவர், சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். இதனால், அந்தத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் குடியிருப்புக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் இறந்தவர்களின் உடலைக் கூட கொண்டு செல்ல...
 காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன், கட்சிப் பதவியை ராஜினாமா செய் துள்ளார். அ​தி​முக கூட்​ட​ணி​யில் தமிழ் மாநில​ காங்​கிரஸ் கட்​சிக்கு வெற்​றி​பெற வாய்ப்​பில்​லாத தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​ட​தாக எழுந்த புகார்​களைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, ‘‘கட்​சித்​தலைமை, தமாகா கட்​சி​யின் வளர்ச்​சிக்​கான எவ்​வித ஆக்​கபூர்​வ​மான நடவடிக்​கைகளை​யும் எடுக்​க​வில்​லை. மேலும், நடை​பெறவுள்ள தேர்​தலில் கட்​சி​யின் தனித்​து​வத்​தைப் பேணா​மல், பாஜக​வின் ‘தாமரை’ சின்​னத்​தில் போட்​டி​யிட ஜி.கே.​வாசன்...
சைவம், வைணவம் குறித்​தும் பெண்​கள் குறித்​தும் சர்ச்​சைக்​குரிய வகை​யில் அவதூறாகப் பேசி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடிக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்கு விசா​ரணைக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது. சென்​னை​யில் கடந்​தாண்டு ஏப்​ரலில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்று பேசிய அப்​போதைய திமுக அமைச்​சர் பொன்​முடி, சைவம், வைணவம் குறித்​தும் பெண்​கள் குறித்​தும் சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​னார். அவரது இந்த பேச்சு காரண​மாக அவர் தனது அமைச்​சர் பதவியை இழந்​தார். இந்​நிலை​யில்...
தமிழகத்​தில் இது​வரை விதி​களை மீறி கொண்டு செல்​லப்​பட்ட ரூ.189 கோடி மதிப்​பிலான பணம், பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்​டி, நடத்தை விதி​களை அமல்​படுத்​தும் பணி​யில் தலா 2,106 பறக்​கும் படைகள் மற்​றும் நிலைக் கண்​காணிப்பு குழுக்​கள் ஈடு​பட்டு வரு​கின்​றன. தமிழகத்​தில் இது​வரை உரிய ஆவணங்​களின்றி கொண்டு செல்​லப்​பட்ட...
சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு சென்​னை​யில் 100 சதவீதம் வாக்​களிப்​ப​தன் அவசி​யம் குறித்த தேர்​தல் விழிப்​புணர்வு கண்​காட்சி பேருந்து சேவையை மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் நேற்று தொடங்​கி​ வைத்​தார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் 100 சதவீதம் வாக்​களிப்​ப​தன் அவசி​யம் குறித்​து, வாக்​காளர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், “தேர்​தல் திரு​விழா – தமிழ்​நாட்​டின் பெரு​விழா” எனும் தேர்​தல் விழிப்​புணர்வு கண்​காட்​சிப் பேருந்து மற்​றும்...
தமிழகத்​தைச் சேர்ந்த 10 போலீஸ் அதி​காரி​கள் ஐபிஎஸ் அந்​தஸ்து வழங்​கப்​பட்​டுள்​ளது. தமிழக காவல் துறை​யில் 3 கட்​டங்​களாக பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்டு வரு​கின்​றன. முதல் கட்​ட​மாக 2-ம் நிலை காவலர்​கள் தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூல​மும், உதவி ஆணை​யர்​கள் (டிஎஸ்​பி) தமிழக அரசால் நடத்​தப்​படும் குரூப்-1 தேர்வு மூல​மும், அடுத்த கட்​ட​மாக மத்​திய அரசு (யுபிஎஸ்சி தேர்​வு) மூல​மும் ஐபிஎஸ் அதி​காரி​களும் தேர்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். இவர்​களில் குரூப்-1 தேர்வு மூலம்...
பாது​காப்பு தொழில்​நுட்​பங்​கள் மேம்​பாடு தொடர்​பாக, சென்னை ஐஐடி அறக்​கட்​டளை​யுடன், இந்​திய ராணுவம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. பாது​காப்பு தொழில்​நுட்​பங்​களை மேம்​படுத்​து​வது, ராணுவத் தொழில்​நுட்​பங்​களில் வெளி​நாடு​களை சார்ந்​திருப்​பதை குறைப்​பது தொடர்​பாக, சென்னை ஐஐடி பிர​வர்​தக் டெக்​னாலஜீஸ் அறக்​கட்​டளை​யுடன், இந்​திய ராணுவத்​தின் எலெக்ட்​ரானிக்ஸ் அண்ட் மெக்​கானிக்​கல் இன்​ஜினீயரிங் பிரிவு நேற்று புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. பிர​வர்​தக் அறக்​கட்​டளை​யின் தலை​மைச் செயல் அலு​வலர் எம்​.ஜெ.ஷங்​கர் ராமன், இந்​திய ராணுவத்​தின் இஎம்இ பிரிவு கமாண்​டிங் அதி​காரி மேஜர்...
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. கூட்டணியில் கடைசியாக இணைந்த தேமுதிக-வுக்கு 10 தொதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 6 பேர் கொண்ட குழுவை சுதீஷ் தலைமையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதில் இளங்கோவன், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், எம்.ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விருகம்பாக்கம், ரிஷிவந்தியம், விருதுநகர்,...