Google search engine
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக்கோரி தாக்கலான மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை விசாரணைக்கு வருகின்றன. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கும் விழா கரூரில் நாளை நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்நிலையில் இதற்கு தடை கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும்...
முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை அதிமுகவின் பெரும்பாலோனோர் தவெகவில் தஞ்சம் புகுந்துள்ளனர். தவெகவை முற்றிலுமாக அதிமுகவினர் ஆக்கிரமித்து வருவதால், அக்கட்சியின் ‘அசல்’ நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தவெகவில் இப்போது கூட்டம் எங்காவது நடக்குமானால், அங்கு நிற்கும் நபர்களை பார்த்துவிட்டு, அது அதிமுக கூட்டமா, தவெக கூட்டமா என யோசிக்கும் அளவுக்கு, அதிமுகவினர் வேகவேகமாக தவெக பக்கம் தாவி வருகின்றனர். இதனை ஆமோதிப்பது போல அதிமுகவும், தவெகவும்...
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் வருகிறார். அப்போது 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ செல்கிறார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் தனியார் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், கருணை அடிப்படையில் 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்குகிறார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில்...
இனிவரும் காலங்​களில் பள்ளிகளின் அனு​மதி இன்றி எவரும் உள்ளே நுழைய அனு​ம​தி​யில்​லை. அரசு நடத்​தும் அதி​காரப்​பூர்வ நிகழ்ச்​சிகளைத் தவிர, பிறந்​த​நாள் விழாக்​கள் அல்​லது அரசு சாராத எந்​த வொரு நிகழ்ச்​சி​யும் பள்​ளி​களில் நடத்​தக் கூடாது என பள்​ளிக்​கல்​வித்​ துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அறி​வுப்​பண்​ணை​கள் கல்விக்​கூடங்​கள் என்​பவை காட்​சிக்​ கூடங்​கள் அல்ல; அதே​போல் பள்​ளி​கள் அரசி​யல் மேடைகளும் அல்ல. அவை அடுத்த...
“ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று தெரியாதவர்கள் தான் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது தமிழகத்துக்கே தலைகுனிவு” என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் அராஜக போக்குடன் கேள்வி...
சென்னை எழும்​பூர் அரசு மகப்​பேறு மருத்துவமனையில் முதல்​வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்​வரை நேரில் பார்த்த மருத்​து​வர்​கள், செவிலியர்​கள், சிகிச்சை பெறும் தாய்​மார்​கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை எழும்​பூர் அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் நேற்று தமிழக முதல்​வர் விஜய் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார். சுகாதாரத்துறை அமைச்​சர் அருண்​ராஜ், செயலர் தாரேஸ் அகமது உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர். மருத்​து​வ​மனைக்​குள் சென்ற முதல்​வர், பல்​வேறு வார்​டு​களை பார்​வை​யிட்​டார். பிரசவத்​துக்​காக காத்​திருக்​கும் பெண்​கள், பிரச​வித்த...
மின்​வாரிய ஊழியர்​கள் கண்​டிப்​பாக அடை​யாள அட்டை அணிய வேண்​டும் என உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து மின்​வாரி​யம் பிறப்​பித்த உத்​தரவு விவரம்: தமிழ்​நாடு மின்​வாரி​யம், மின் உற்​பத்தி கழகம், பகிர்​மானக் கழகம், மின் தொடரமைப்​புக் கழகம், பசுமை எரிசக்​திக் கழகம் ஆகிய அனைத்து பிரிவு ஊழியர்​களும் அலு​வலக வளாகத்​துக்​குள் நுழை​யும்​போதும், பணி நேரத்​தி​லும் அடை​யாள அட்​டையை வெளி​யில் தெரி​யும்​படி கண்​டிப்​பாக அணிந்​திருக்க வேண்​டும். பாது​காப்பு பணி​யாளர்​கள், அதி​காரி​கள் சோதனை​யிடும்​போது தயக்​கமின்றி அடை​யாள அட்​டையைக்...
மேகேதாட்டு அணை விவ​காரம் தொடர்​பாக, தமிழகம் மற்​றும் கர்​நாடக மாநில எல்​லை​யில் ஜூலை 15-ம் தேதி இருதரப்​பினரும் போராட்​டங்​களை அறி​வித்​துள்​ள​தால், எல்​லைப் பகு​தி​களில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. காவிரி ஆற்​றின் குறுக்கே மேகேதாட்​டில் அணை கட்ட கர்​நாடக அரசு நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கிறது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, தமிழக விவ​சா​யிகள் பல்​வேறு கட்​டப் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகு​தி​யாக, கர்​நாடக...
விவசாயிகளுக்கு வழி​காட்​டு​வதற்​காக ‘கலந்​துரை​யாடல் மூலம் விரி​வாக்​கம்’ எனும் புதிய திட்​டத்​தை, வேளாண்மை துறை அமைச்​சர் வினோத், சென்​னை​யில் தொடங்கி வைத்​தார். தமிழக வேளாண்மை துறை ‘கலந்​துரை​யாடல் மூலம் விரி​வாக்​கம்’ எனும் புதிய திட்​டத்தை அமல்​படுத்​தி​யுள்​ளது. இதன்​மூலம், காணொலி வாயி​லாக விவ​சா​யிகளின் கேள்வி​களுக்கு பதிலளித்​து, அவர்​கள் பிரச்​சினை​களுக்கு ஒரே தளத்​தில் தீர்வு வழங்க மாநில அளவி​லான நிபுணர் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தக் குழு​வில் வேளாண் மற்​றும் அது​சார்ந்த தோட்​டக்​கலை, மீன்​வளம், பால்​வளம், வேளாண்​மைப்...
கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு கட்டண சேவைகள் மூலம் பழநி மலைக்கோயில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது தவிர, பஞ்சாமிர்தம் மட்டும் ரூ.63.16 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டண சேவைகளை வழங்கி வருகிறது....