முரசொலி அறக்கட்டளை நிர்வாகம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தரப்பில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: முரசொலி அறக்கட்டளையின் அலுவலகம் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிலையில், ஆளுங்கட்சியின் அதிகார பலத்துடன் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதற்கு...
மகாவீர் ஜெயந்தி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச் 31-ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளின்கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்,...
மதுராந்தகம் அடுத்த வையாவூரில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ள சுவற்றை அகற்றாவிட்டால், சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் அமைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வையாவூர் கிராமத்தில் படவேட்டம்மன் கோயில் தெருவில் தனிநபர் ஒருவர், சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்துள்ளார்.
இதனால், அந்தத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் குடியிருப்புக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் இறந்தவர்களின் உடலைக் கூட கொண்டு செல்ல...
காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன், கட்சிப் பதவியை ராஜினாமா செய் துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிபெற வாய்ப்பில்லாத தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘கட்சித்தலைமை, தமாகா கட்சியின் வளர்ச்சிக்கான எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
மேலும், நடைபெறவுள்ள தேர்தலில் கட்சியின் தனித்துவத்தைப் பேணாமல், பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட ஜி.கே.வாசன்...
சைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னையில் கடந்தாண்டு ஏப்ரலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அப்போதைய திமுக அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவரது இந்த பேச்சு காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார். இந்நிலையில்...
தமிழகத்தில் இதுவரை விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.189 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
admin - 0
தமிழகத்தில் இதுவரை விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, நடத்தை விதிகளை அமல்படுத்தும் பணியில் தலா 2,106 பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்பு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட...
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து சேவையை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” எனும் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சிப் பேருந்து மற்றும்...
தமிழகத்தைச் சேர்ந்த 10 போலீஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் 3 கட்டங்களாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக 2-ம் நிலை காவலர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமும், உதவி ஆணையர்கள் (டிஎஸ்பி) தமிழக அரசால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு மூலமும், அடுத்த கட்டமாக மத்திய அரசு (யுபிஎஸ்சி தேர்வு) மூலமும் ஐபிஎஸ் அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இவர்களில் குரூப்-1 தேர்வு மூலம்...
பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை ஐஐடி அறக்கட்டளையுடன், இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது, ராணுவத் தொழில்நுட்பங்களில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைப்பது தொடர்பாக, சென்னை ஐஐடி பிரவர்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளையுடன், இந்திய ராணுவத்தின் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவு நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரவர்தக் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் எம்.ஜெ.ஷங்கர் ராமன், இந்திய ராணுவத்தின் இஎம்இ பிரிவு கமாண்டிங் அதிகாரி மேஜர்...
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. கூட்டணியில் கடைசியாக இணைந்த தேமுதிக-வுக்கு 10 தொதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 6 பேர் கொண்ட குழுவை சுதீஷ் தலைமையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.
இதில் இளங்கோவன், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், எம்.ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விருகம்பாக்கம், ரிஷிவந்தியம், விருதுநகர்,...










