இரணியல்: சாலை விபத்தில் 2 மாணவர்கள் காயம்
தக்கலை அருகே குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ராஜ் (19) என்பவரும் படித்து வருகிறார். நேற்று மாலை இரண்டு பேரும் கல்லூரி முடித்து வீட்டிற்குப்...
பத்துகாணி: வழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
பத்துகாணி பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கற்றுவா சந்திப்பு பகுதியில் வந்த போது திடீரென பிரேக் பழுது ஏற்பட்டது. டிரைவர் பஸ்ஸை நிறுத்த முயன்றும், அந்த சாலை மிகவும் செங்குத்து பகுதி என்பதால் மிகவும் சிரமப்பட்டு சாமர்த்தியமாக நிறுத்தினார். இதனால் பஸ்ஸில்...
மார்த்தாண்டம்: பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (56). விவசாயியான இவர் சம்பவ தினம் தனது பைக்கில் பழையகடை என்ற பகுதியிலிருந்து மாமூட்டுகடை என்ற பகுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு பைக்கில் வந்த நெட்டியான்விளை சேர்ந்த ஹாரிஸ் (25) என்பவர் சாலையைக் கடக்க...
கொல்லங்கோடு: சாலையில் மயங்கி கிடந்த வாலிபர் உயிரிழப்பு
கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு காலனி பகுதியை சேர்ந்தவர் ரெஜிபுதியின் மகன் முகமது பாகர் (20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மார்ஜின் ஃப்ரீ மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கடையிலிருந்து வீட்டுக்கு புறப்பட்ட பின்னர் வீட்டின் முன் பகுதியில்...
செங்கவிளை: ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட செங்கவிளையில் ஏ ஆர் எஸ் நியாய விலை கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. நீண்ட வருடங்களாக இரண்டு பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வந்த கடையில் சில மாதங்களாக விற்பனையாளர் ஒருவர் மட்டும் பணிபுரிகிறார். தற்போது இருக்கும் இயந்திரம் சரியாக இயங்கவில்லை...
நாகர்கோவில்: தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டம்
பி எஃப் தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பி எஃப் மண்டல அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நாகர்கோவில் பி எஃப் மண்டல அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு...
குளச்சல்: ரூ.25 ஆயிரத்துடன் மனைவி மாயம்; கணவர் புகார்
குளச்சல் அருகே சாஸ்தான்கரை பகுதியில் வசித்து வருபவர் அபினேஷ் (34). இவர் பள்ளிமுக்கு சந்திப்பில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் பிள்ளைகளுடன் வசித்து வந்த மகாலட்சுமி கடந்த மாதம் 25ஆம் தேதி திடீரென...
இரையுமன்துறை: மீன்படி துறைமுக பணிகள் ஆய்வு
இரையுமன்துறை மற்றும் தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளில் ரூ. 120 கோடி மதிப்பில் அலை தடுப்பு சுவர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை நேற்று மீனவர் நலத்துறை ஆணையர் கஜலட்சுமி, குமரி கலெக்டர் அழகு மீனா ஆகியோர் பார்வையிட்டனர். அதோடு, அந்த கடலோரப்பகுதிகளில்...
தக்கலை: பஸ் நிலைய கட்டுமான பணியை பார்வையிட்ட எம்எல்ஏ
தக்கலை தேசிய நெடுஞ்சாலையோரம் பத்மநாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலைய பழைய கட்டுமானங்களை இடித்து அகற்றப்பட்டு, ரூ. 6.39 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மனோ தங்கராஜ் எம்எல்ஏ நேற்று பார்வையிட்டார். அப்போது...
கடையாலுமூடு: 400 கிலோ ரப்பர் ஷீட்டுகள் திருட்டு
கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவர் ரப்பர் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வாங்கிய உலராத பச்சை ரப்பர் ஷீட்டுகளை தனது வீட்டின் கார் ஷெட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று பஷீர் உலராத பச்சை ரப்பர் ஷீட்டை புகையறையில் வைத்து...













