குமரி- பாஜக முக்கிய கவுன்சிலர் மரணம்
குலசேகரம் பேரூராட்சி 2-வது கவுன்சிலர் பாஜக உறுப்பினர் தங்கப்பன் அவர்கள் நேற்று திடீரென மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மதியம் 12-மணிக்கு அரமன்னம் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறுகிறது. அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குமரி -தாரகை கத்பர்ட்- எம். எல். ஏ வுக்கு வாழ்த்து
விளவங்கோடு சட்ட மன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட , அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து நேற்று பொறுப்பேற்று கொண்டார். தாரகை கத்பட் அவர்களுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர். எஸ். ராஜன் சால்வை...
எஸ்.ஐ., மீது தாக்குதல் முன்னாள் ஏட்டு மகன் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே போலீஸ் எஸ்.ஐ.,யை வெட்டிக் கொல்ல முயன்ற மாஜி ஏட்டு மகனை போலீசார் கைது செய்தனர்.
மணவாள குறிச்சி அருகே கருங்காலிவிளையை சேர்ந்தவர் புஷ்பலதா. மாற்றுத்திறனாளியான இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஏட்டு செல்வ பெருமாள்...
போலீசார் மீது பயங்கர தாக்குதல் புகாரை விசாரித்தபோது கொடூரம்
மணவாளக்குறிச்சி அருகே கருங்காலிவிளையைச் சேர்ந்தவர் புஷ்பலதா. மாற்றுத்திறனாளியான இவர், கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு செல்வபெருமாள் மகன் மகேந்திர கொடிலனுக்கும், 40, முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் மகேந்திர கொடிலன், புஷ்பலதாவிடம் தகராறு செய்தார். மணவாளக்குறிச்சி எஸ்.ஐ., வில்சன்,...
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்- விஜய் வசந்த் பங்கேற்பு
சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் விஜய் வசந்த்கலந்து கொண்டேன்.
மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ் நாடு பொறுப்பாளர் அஜோய் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஶ்ரீ வல்ல பிரசாத்,...
குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் பரவலாக மழை பெய்த நிலையில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. கொட்டாரம் பகுதியில் நேற்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 5 மணி...
மீன்பிடி தடைகாலம் முடிய இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் தயாராகும் மீனவர்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.
இந்த காலங்களில் விசைப்படகு கள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி...
என் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நாட்டுக்காக அர்ப்பணிப்பேன்- பிரதமர் மோடி
3 நாட்கள் தியானம் முடித்து புறப்பட்ட பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்தார்.
இந்தியாவின் கடைசி முனையான கன்னியாகுமரியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமான உணர்வை அனுபவித்து வருகிறேன். பார்வதியும், சுவாமி விவேகானந்தரும் இந்த பாறையில் தியானம் செய்திருந்தனர். பின்னர் ஏக்நாத்...
பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு
பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர்மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலு
பிரதமர்...
விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் 8-வது முறையாக மகுடம் சூடுமா?
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்த வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் தான் அதிக வெற்றியை பெற்றுள்ளனர். இந்த தொகுதி 1952-ம்...













