சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் விஜய் வசந்த்கலந்து கொண்டேன்.
மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ் நாடு பொறுப்பாளர் அஜோய் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஶ்ரீ வல்ல பிரசாத், முன்னாள் மாநில தலைவர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.