மத்திய கிழக்கு பகைமையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா - ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கின. இதையடுத்து, ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், அந்த பாதையில் கப்பல் போக்குவரத்து...
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்திய அரசு ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் 2 எரிவாயு...
ஈரான் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். கடந்த இரு நாட்களாக ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில்...
ஏர் கனடா விமானம் விபத்து: நியூயார்க் விமான நிலையத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு; 72 பயணிகள் தப்பினர்
admin - 0
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் முதன்மை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இருந்து 72 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் புறப்பட்ட ‘ஏர் கனடா எக்ஸ்பிரஸ்'...
மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதை குறைக்க ஈரான் மீதான தடையை ஒரு மாத காலத்துக்கு அமெரிக்கா நீக்கியது.
தற்போது நட்பு நாடுகளின் எண்ணெய்க் கப்பல்களை மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதிக்கிறது. இதற்கு கட்டணமாக ரூ.18.8 கோடி வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம்...
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அறிவித்துள்ளது. இரு நாடுகளிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது இருக்கும்.
மேலும் இந்தத் தொடர் மார்ச்சில் நிறைவடையும். வரும் ஆகஸ்டில் வங்க தேசத்துடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், அக்டோபரில் தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டிகளிலும், டிசம்பர் முதல் 2027 ஜனவரி வரை நியூஸிலாந்துடன்...
எதிரிகளின் கப்பல்களை தவிர மற்ற அனைத்தும் ஹார்முஸ் வழியாக செல்லலாம்: ட்ரம்ப் கெடுவுக்கு ஈரான் பதில்
admin - 0
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்த தனது கெடுபிடியை ஈரான் தளர்த்தியுள்ளது. எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஐ.நா.வின் ஈரான் பிரதிநிதி தெரிவித்தார்.
முன்னதாக, 48 மணி நேரத்திற்குள் இந்த ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்படாவிட்டால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்திருந்தார்....
‘‘ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நாளை காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம்’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘அமெரிக்கா தாக்கினால் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மையங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும்’’ என்று ஈரானும் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் கெடு விதித்திருந்தார். அதற்கு...
கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்-15 இ ரக போர் விமானங்களை குவைத்வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தின.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க விமானப்படையின் அதி நவீன எப்-35 போர் விமானத்தை தாக்கியதாக ஈரான் கூறியது. இந்த விமானம் அமெரிக்க விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஹார்முஸ் தீவு அருகே எதிரி நாட்டின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு...
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதியான பிலால் ஆரிப் சராபி சனிக்கிழமை ஈத் தொழுகைக்குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முரிட்கே பகுதியில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உருக்குலைந்த தலைமையகத்திற்கு அருகிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத் தகராறு காரணமா ?: இந்தக் கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், இது சொந்த குடும்பத்...










