வங்காளம் உட்பட 11 மொழி பேசும் மனித ரோபோ – முதல் பெண்மணிகள் மாநாட்டில் அறிமுகம் செய்தார் மெலனியா ட்ரம்ப்
admin - 0
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் பெண்மணிகள் மாநாட்டில், வங்காள மொழி உட்பட 11 மொழிகள் பேசும் மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. உலகளாவிய கூட்டணியை ஏற்படுத்த 45 நாடுகளின் முதல் பெண்மணிகள் பங்கேற்கும் மாநாடு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதில் ஃபிகர் என்ற அமெரிக்க ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய மனித ரோபோ, வெள்ளை மாளிகையின் முதல் ரோபோ விருந்தாளியாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த...
போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை மத்தியஸ்தர்கள் மூலம் ஈரான் பெற்றதாகவும், எனினும் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் அழைப்பை ஈரான் நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இரு தரப்புக்குமான போர் 25 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருப்பதாகவும், எனவே 5 நாட்களுக்கு...
போரை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் 15 அம்ச திட்டம் – ஈரான் ஏற்க மறுத்து கடும் நிபந்தனைகள் விதிப்பு
admin - 0
ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டத்தை வெளியிட்டுள்ளார். அவற்றை ஏற்க மறுத்த ஈரான், பதிலுக்கு 5 கடுமையான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு ஈரான் மறுத்ததால், அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் ஆரம்பித்து 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், மேற்கு ஆசியாவுக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்பும் பணியில் அமெரிக்கா...
மேற்காசிய நாடான ஈரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் போரிட்டு வருகின்றன. இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண அமெரிக்கா தனது கடற்படையை வளைகுடா நோக்கி அனுப்பியுள்ளது. இதில் சுமார் 4,500 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஈரானுடன் புதிய ராஜதந்திர முயற்சியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரிசீலித்து வரும் நிலையில், அவருக்குக் கூடுதல் ராணுவ வாய்ப்புகளை வழங்கும் விதமாக, அமெரிக்க ராணுவத்தின் 82-வது விமானப்...
அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்தான் செல்ல முயன்ற கன்டெய்னர் கப்பலை ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் 3 வாரங்களைக் கடந்து நடைபெறுகிறது.
இதனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்குக் கப்பல் செல்ல ஈரான் தடை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் சில கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியது. இந்நிலையில், அனுமதி பெறாமல் ஹார்முஸ்...
ஏர் கனடா விமானம் விபத்து: நியூயார்க் விமான நிலையத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு; 72 பயணிகள் தப்பினர்
admin - 0
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் முதன்மை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இருந்து 72 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் புறப்பட்ட ‘ஏர் கனடா எக்ஸ்பிரஸ்'...
ஈரான் போர் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதன் எதிர்வினையாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் முழுமையாக மூடியிருக்கிறது. அந்த நாட்டு ராணுவத்தின் சிறப்பு அனுமதியுடன் சில சரக்கு கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல அனுமதி...
ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் சமரச முயற்சி? – இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை
admin - 0
மத்திய கிழக்கில் போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையே சமரச முயற்சியை ஏற்படுத்த பாகிஸ்தான் முயன்று வருவதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கும் ஈரானுக்கும் இடையில் உள்ள நெருக்கமும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அவர் கொண்டுள்ள சுமுகமான உறவும் இந்தப் பேச்சு வார்த்தை முயற்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் அதே வேளையில், பதற்றத்தை தணிக்க...
ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் நடந்த மர்ம வர்த்தகத்தில் 20 நிமிடத்தில் ரூ.840 கோடி லாபம்
admin - 0
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்' தளத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டார். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, சர்வதேச சந்தையில் நடந்த வர்த்தகம் மூலம் மர்ம நபர் ஒருவர் வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம் ஈட்டியுள்ளார்.
இதுகுறித்து சந்தை ஆய்வாளர்கள் கூறியதாவது: திங்கள்கிழமை காலை நியூயார்க் நேரப்படி 6:50 மணிக்கு...
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்கி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.
ஈரான் ராணுவத்தின் சிறப்பு அனுமதியுடன் ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய எரிவாயு (எல்பிஜி) கப்பல்கள், ஜக் லட்கி என்ற கச்சா எண்ணெய் கப்பல் ஆகியவை இந்தியா வந்தன. இந்த சூழலில் ஜக்...










