குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனை குவைத்தின் மின்சார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில் தங்கள் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள தப்ரிஸ் பெட்ரோகெமிக்கல் அமைப்பின் மீது எதிர்தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும்...
ஈரான் ராணுவ ஏவுகணைகளில் ‘‘இந்திய மக்களுக்கு நன்றி’’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நடைபெறும் போரில் இந்தியா நடுநிலை வகிக்கிறது. மேலும் போரை நிறுத்த இந்திய அரசு சமரச முயற்சியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 4-ம் தேதி இலங்கை அருகே சென்று கொண்டிருந்த ஈரானின் ஐஆர்ஐஎஸ் லாவன் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி ஏவுகணை தாக்கியது. இதில் 87 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து...
மேற்கு ஆசியப் போருக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறியதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்தப் பதிவில், “இந்தியாவுடனான எங்களின் அற்புதமான உறவு தொடர்ந்து வலுப்பெறும். பிரதமர் மோடியும் நானும் (ட்ரம்ப்) காரியங்களை சிறப்பாக முடிக்கும் இரு தலைவர்கள். இத்தகைய செயல்திறன் பலருக்கு இருப்பதில்லை’’ என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேற்கு...
ஈரான் பள்ளி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி 175 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொன்றது தவறான தாக்குதல் அல்ல போர்க் குற்றம் என்று ஐ.நா.வில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தன. அப்போது ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்கப் பள்ளி மீது டொமஹாக் ஏவுகணை மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது....
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. சுமார் 71 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். சுமார் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வகையை சேர்ந்த பிஏ 3.2 என்ற கரோனா வைரஸ் பரவி வருகிறது....
நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் சர்மா ஒளி பதவி விலகினார். இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றார். அவரது தலைமையில் கடந்த 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது.
கடந்த 12-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நேபாள நாடாளுமன்றத்தில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடி தேர்தல்...
ஈரான் உடனான போர் 26 நாட்களை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் அரசு ஒப்பந்தம் செய்துகொள்ளத் தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும், அமெரிக்கா இனி ஒப்பந்தம் செய்ய முன்வருமா என்பது சந்தேகமே என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், “இந்தப் போரை முடிக்க நான்கு...
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நிர்வகித்த ஈரான் கடற்படைத் தளபதி அலிரேசா, இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் உயிரிழந்தார்.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடியிருக்கிறது. இதனால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எல்பிஜி காஸுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டாங்கிரி, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். சர்வதேச கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்திய குற்றத்துக்காக அவரை சர்வதேச...
ஈரானுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்குமான போர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் ராணுவ மத்திய கமாண்டை சேர்ந்த கடற்படை அட்மிரல் பிராட் கூப்பர் நேற்று கூறியதாவது: ஈரான் போரின்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளோம். இதில் பல்வேறு வெடிபொருட்கள் ஆலைகளும் அடங்கும். இதுதொடர்பான...










