தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் போலீஸார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க...
செல்போனில் பேசியபடியே ரோந்து வாகனத்தை ஓட்டிய தலைமைக் காவலர் மீது புகார் தெரிவித்த சமூக ஆர்வலருக்கு, அபராதம் விதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூகஆர்வலர் நவீன்குமார் (28). சென்னை, திருவொற்றியூரில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவசர வேலை காரணமாக, ஷேர் ஆட்டோவில் பயணியாக நுங்கம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காவல் ரோந்து வாகனத்தை தலைமைக் காவலர் ஒருவர் செல்போனில்...
தூத்துக்குடி: போலீஸ் தாக்கியதில் இளைஞர் மரணம்? உடலை வாங்க பெற்றோர் மறுப்பு.. போலீசார் சொல்வது என்ன?
admin - 0
தூத்துக்குடியில் அருணாச்சலம் என்ற 26 வயது இளைஞரை போலீசார் அடித்து கொன்றதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும் அப்போது விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மகன் உயிரிழந்தததை அடுத்து கதறி அழுத பெற்றோர் போலீசார் தான் அடித்து...
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தீர்வை விரும்பவில்லை என்றும், குழப்பத்தையே விரும்புகிறது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்தய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்து...
“முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்” – தூத்துக்குடி சம்பவத்துக்கு உதயநிதி கண்டனம்
admin - 0
‘காவல் மரணங்களின்போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது’ என தூத்துக்குடி இளைஞர் மரணம் அடைந்த சம்பவத்துக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ்...
‘காவிரி டெல்டாவின் உயிர்நாடிப் பிரச்சினையில் த.வெ.க. அரசின் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து கால தாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே முழுக் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது இந்த அரசு?
குறுவையும் பாதித்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேராபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
நெருக்கடியான...
முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நகரப்பகுதி மட்டுமில்லாமல் கிராமப்புறங்களிலும் அனைத்துதிரையரங்குகளிலும் ஜனநாயகன் படம் வெளியானது.
திரையரங்கம் முன்பு கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும் மேளதாளம் முழங்கவும் ரசிகர்கள், தொண்டர்கள் நடனமாடினர். பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்தபோது அமைச்சர்கள் முகமது பர்வேஸ்,...
காமராஜர் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிப்புக்கு 3 ஆண்டு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாகத் துறை
admin - 0
காமராஜர் காலை உணவு திட்டத்தில், 3 ஆண்டு உணவு தயாரிப்புக்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து நகராட்சி நிர்வாகத் துறை டெண்டர் கோரியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் வகையில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022-ம் அண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், தவெக அரசு...
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் பாரிமுனையில் இயங்கி வந்த பேருந்து நிலையம், மொத்த காய்கறி வியாபாரத்தின் கேந்திரமாய்த் திகழ்ந்த கொத்தவால்சாவடியால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெருக்கடி ஏற்பட்டது.
இதற்கு தீர்வுகாண கோயம்பேட்டில் ரூ.103 கோடியில் ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 2002-ம் ஆண்டு அதிமுக அரசால் திறக்கப்பட்டது.
கோயம்பேட்டிலும் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் அதிகமானதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு...
தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல் துறையினரின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும்...










