சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிக்கின. ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் படத்துடன் கூடிய விசிட்டிங் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை அண்ணாநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அரும்பாக்கம் 100 அடி சாலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில்...
மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஹசீனா சையத்தை நீக்கி கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி கருப்பு உடை அணிந்து, மகிளா காங்கிரஸார் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் கூறியதாவது: மேற்கு வங்கம், கேரளம், அசாமில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவிகள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால்...
மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல்
admin - 0
தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பொது பார்வையாளர்கள் 136 பேர், செலவின பார்வையாளர்கள் 150 பேர், காவல் பார்வையாளர்கள் 40 பேர் என 326 பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு செலவின பார்வையாளர் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ள மத்தியப் பார்வையாளர்களுக்கான (பொது, காவல் மற்றும் செலவினப் பார்வையாளர்கள்) ஆய்வுக் கூட்டம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்...
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்கின்றன. இதனால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொகுதி மறுவரையறையை நாடாளுமன்றத்தில் அவசர, அவசரமாக கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.
தென்னிந்தியாவின் குரல்வளையை நசுக்குவதற்கு அவசரம் காட்டும் மத்திய அரசின் ஜனநாயக விரோதப்போக்கு கடும் கண்டனத்துக்குரியது.
2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், வடமாநிலங்களின்...
தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக தமிழக முதல்வரின் தனிச் செயலரான உமாநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் முதல்வரின் தனிச் செயலராக பதவி வகி்த்து வரும் ஐஏஎஸ் அதிகாரியான உமாநாத், தன்னிச்சையாக தனக்கு...
இந்தியாவில் காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவின் காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியின் தலைமையிடமாகத் தமிழகம் திகழ்கிறது.
இந்தியாவின் மொத்த தோல் ஏற்றுமதியில் 47 சதவீதமும், காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் 38 சதவீதமும் தமிழகம் மட்டுமே பங்களிப்பது பெருமைக்குரிய சாதனையாகும்.
இந்தத் துறையில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணிபுரிந்து...
கும்மிடிப்பூண்டி தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பெருமிதம்
admin - 0
கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ-வான டி.ஜெ.கோவிந்தராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், கும்மிடிப்பூண்டி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைத்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து, டி.ஜெ.கோவிந்தராஜன் கூறியதாவது: கும்மிடிப்பூண்டி தொகுதியில், பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே காரணி, புதுப்பாளையம் ஆகிய கிராமங்களையும், அஞ்சாத்தம்மன் கோயில் பகுதியையும் இணைக்கும் வகையில் உயர்...
மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஊழல் குற்றச்சாட்டால் ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்டவர்: உதயநிதி பிரச்சாரம்
admin - 0
மாதவரம் தொகுதியி்ல் ஏற்கெனவே இருமுறை தொடர்ச்சியாக வெற்றிபெற்று எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.சுதர்சனம் மூன்றாவது முறையாக திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரான வி.மூர்த்தி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் எஸ்.சுதர்சனத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாதவரம் பஜார் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மாதவரம் தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மூர்த்தி எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆவின் பாலில்...
அப்பா, தங்கை, மகன் வரிசையில் மருமகனை எம்.பி.யாக்கி குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்த திமுக முயற்சிப்பதாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ். பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. சாதாரண மக்கள் வீடு கட்டினால்கூட கவுன்சிலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது. சாதிச் சான்றிதழ் பெறக்கூட லஞ்சம் கேட்கப்படுகிறது.
திமுக தலைவரின் மருமகன் சபரீசன் தற்போது வெளிப்படையாகவே அரசியல்...
சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் அனைவரும் சேர்ந்து திமுகவை விரட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ஆக்ரோஷமாகப் பேசினார்.
ஆற்காடு தொகுதியில் அதிமுக வேட்பளர் சுகுமார், ராணிப்பேட்டை தொகுதியில் தமாகா வேட்பாளர் கார்த்திகேயன், சோளிங்கர் தொகுதியில் பாமக சரவணன், திருத்தணி அதிமுக ஹரி ஆகியோரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.8 ஆயிரம் கூப்பன் கொடுப்பதாக முதல்வர்...










