Google search engine
‘அரசுப் பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள உடற்​கல்வி ஆசிரியர் பணி​யிடங்​கள் விரை​வில் நிரப்​பப்​படும்’ என்று பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார். சென்னை சிந்​தா​திரிப்​பேட்​டை​யில் உள்ள தனக்​கோடி நடுநிலைப்​பள்​ளி​யில் 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான புதிய மாணவர் சேர்க்​கையை பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று ஆய்வு செய்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நடப்பு கல்வியாண்​டில் இது​வரை அரசுப் பள்​ளி​களில் ஒரு லட்​சத்து 52 ஆயிரத்து 625 பேர் சேர்க்கை பெற்​றுள்​ளனர். புதி​தாக 4 லட்​சம்...
தமிழக அரசின் கைத்​தறி, கைவினைப்​ பொருட்​கள், துணிநூல் மற்​றும் காதித்​துறை​யின் செயலர் வி.அ​முதவல்லி வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பட்​டு​வளர்ப்​புத் துறை பணி​யிடங்​களுக்கு சிறப்பு விதி​முறை​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. அதன்​படி, பட்​டு​வளர்ப்பு உதவி இயக்​குநர் நேரடி நியமனத்​துக்கு எம்​எஸ்சி விவ​சா​யம் (பட்​டு ​வளர்ப்​பு) பட்​டம் கல்​வித் ​தகு​தி​யாக நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அதே​போல், பட்​டு​ வளர்ப்பு உதவி ஆய்​வாளர் பதவிக்​கான குறைந்​த​பட்ச கல்​வித்​தகுதி பிஎஸ்சி பட்​டு​ வளர்ப்பு பட்​டம் ஆகும். பட்​டு​ வளர்ப்பு இளநிலை ஆய்​வாளர்...
தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் இன்னொரு நடிகரின் கட்சியான தவெக. “கணிசமான அதிமுக தொண்டர்களும் தவெக-வில் இணையத் தயாராகி விட்டார்கள். இன்னும் 6 மாதத்தில் ஒட்டுமொத்த அதிமுக முக்கிய நிர்வாகிகளும் தவெக-வில் இணைவார்கள்” என்று அடித்துச் சொல்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. தேர்தலுக்கு முன்பே கூட்டணி...
சென்னை திரு​வல்​லிக்​கேணி பார்த்தசாரதி கோயி​லில் 47 ஆண்​டு​களாக கோயில் செயல் அலு​வலரே தக்​கா​ராக நியமிக்​கப்​பட்டு வரு​வ​தால், அரசு அதி​காரி​யாக உள்ள செயல் அலு​வலரை தக்​கா​ராக நியமிக்க கோரி, டி.ஆர்​.ரமேஷ் என்​பவர் சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​த​போது, செயல் அலு​வலர்​கள் கோயி​லின் மத நடவடிக்​கை​களில் ஈடு​படு​வ​தாக மனு​தா​ரர் தரப்​பில் குற்​றம்​சாட்​டப்​பட்​டது. மத நடவடிக்​கை​களில் தலை​யிட...
உல​கள​வில் ஒவ்​வொரு ஆண்​டும் 70 லட்​சம் பேர் புகை​யிலை​யால் உயி​ரிழக்​கின்​றனர், இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களை சந்​தித்த நுரை​யீரல் நிபுணர் மருத்​து​வர் நரசிம்​மன் கூறிய​தாவது: உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்​டு​தோறும் மே-31ம் தேதி அனுசரிக்​கப்​படு​கிறது. இந்த ஆண்டு இளைஞர்​களை புகை​யிலை மற்​றும் நிக்​கோட்​டின் பழக்​கத்​திலிருந்து பாது​காப்​போம் என்ற கருப்​பொருளில் விழிப்​புணர்​வு​களை ஏற்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. உலகள​வில் ஒவ்​வொரு ஆண்​டும் 70 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் புகை​யிலை நேரடி​யாக உட்​கொள்​வது மூல​மாக​வும், 16 லட்​சம் பேர்...
 ‘நீ​தித் துறை​யில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடி​யாது; அதே​போல நீதிப​தி​களை புனிதர்​களாகச் சித்​தரிக்க வேண்​டிய அவசி​ய​மும் இல்​லை’ என்று கருப்பு படத்​துக்கு தடை கோரிய வழக்கை தள்​ளு​படி செய்​து, சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். ‘நடிகரும், இயக்​குநரு​மான ஆர்​.ஜே.​பாலாஜி இயக்​கத்​தில் நடிகர் சூர்​யா, நடிகை த்ரிஷா நடித்து சமீபத்​தில் வெளிவந்​துள்ள ‘கருப்​பு’ திரைப்​படத்​தில் நீதித் ​துறையை​யும், நீதிப​தி​களை​யும் அவம​திக்​கும் வகை​யில் காட்​சிகள் எடுக்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​படத்​துக்கு தடை...
டெல்லி பயணத்தை முன்​கூட்​டியே முடித்​துக் கொண்டு முதல்​வர் விஜய் நேற்று சென்னை திரும்​பினார். முன்​ன​தாக திட்​டமிடப்பட்ட சோனி​யா, ராகுல் சந்​திப்பு ரத்து செய்யப்​பட்​டதால் அரசி​யலில் அது பெரும்விவாதப் பொருளாக மாறி​யுள்​ளது. நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. ஆட்சி அமைக்க பெரும்​பான்மை கிடைக்​காத​தால் காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்​எல் கட்​சிகளின் ஆதர​வுடன் விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​றார். இப்​படி​யான அரசி​யல்...
இளைஞர்​கள் செல்​போனை ஒதுக்கி வைத்​து​விட்டு புத்​தகங்​களை வாசிக்க தொடங்க வேண்​டும் என சென்​னை​யில் நடந்த புத்தக வெளி​யீட்டு விழா​வில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறி​வுறுத்​தி​னார். மெட்​ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசி​யேஷன் மற்​றும் கொன்​ராட் அதெ​னாவர் அறக்​கட்​டளை சார்​பில் வங்​கி​யாள​ரும், பிரபல எழுத்​தாள​ரு​மான ஷியாம் னி​வாசன் எழு​திய ‘பெட்​டர் நெவர் ஸ்டாப்​ஸ்’ புத்தக வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் கபில் தேவ், புத்​தகத்தை வெளி​யிட்​டார்....
கோடை வெப்​பத்​தால் ஏற்​படும் நோய்​களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநக​ராட்சி சார்​பில் 360 சுகா​தார நிலை​யங்​கள் தயார் நிலை​யில் இருப்​ப​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்​தில் கடந்த சில நாட்களாக கோடைவெப்​பம் அதி​கரித்து வருகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளி​யேறும்​போது உடலில் உப்​புச்​சத்து மற்​றும் நீர்ச்​சத்து பற்​றாக்​குறை ஏற்​படு​கிறது. இதனால் அதிக தாகம், தலை​வலி, உடல்​சோர்​வு, தலைசுற்​றல், தசைப்​பிடிப்​பு, குறைந்த அளவு சிறுநீர்...
“இனி வரும் தேர்தல்களில் தனி சின்னத்திலேயே போட்டியிடுவோம்” என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, தனி சின்னத்தில் வென்ற முஸ்லிம் லீக் கட்சிக்கு தவெக அரசில் அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால் மமக இந்த முடிவுக்கு வந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை மறுத்த ஜவாஹிருல்லா, “பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியானது தனி சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே அதன் பதிவை தக்கவைத்துக் கொள்ள முடியும்...