Google search engine
பக்ரீத் பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் என்று ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர். பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி வருமாறு: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்: இந்த தியாக திருநாள் பகிர்வு, பரிவு, ஒற்றுமை மற்றும் சமரசம் ஆகிய மனப்பான்மைகளை ஏற்கத் தூண்டி, நமது பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தை ஒன்றிணைத்து வைத்திருக்கும்...
தமிழகம் முழு​வதும் அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களைத்​தாண்டி பொது இடங்​களில் மாடு​கள் உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனு​ம​திக்​கக்​கூ​டாது என உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. இதுதொடர்​பாக இந்து மக்​கள் கட்​சி​யின் இளைஞரணி பொதுச் செய​லா​ள​ரான கோவை மாவட்​டம் செல்​வபுரத்​தைச் சேர்ந்த கே. சூர்ய பிர​சாந்த் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், `பக்​ரீத் பண்​டிகையை முன்​னிட்டு கடந்​தாண்டு கோவை செல்​வபுரத்​தில் மாடு​கள் வெட்ட தனி​யாக தகர கொட்​டகைகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இதுதொடர்​பாக புகார் அளித்​த​தால்...
திரு​வண்​ணா​மலைக்கு சுவாமி தரிசனத்​துக்கு வந்த ஆந்​தி​ராவைச் சேர்ந்த இளம்​பெண்ணை போலீ​ஸார் வன்கொடுமை செய்த வழக்கை வரும் ஜூலைக்​குள் விசா​ரி்த்து முடிக்க வேண்​டுமென மகளிர் நீதி​மன்​றத்​துக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். ஆந்​திர மாநிலம் காளஹஸ்​தி​யில் இருந்து கடந்​தாண்டு செப்​டம்​பர் மாதம் தனது வளர்ப்​புத் தாயார் மற்​றும் மாமாவுடன் சரக்கு வாக​னத்​தில் திரு​வண்​ணா​மலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த 26 வயது இளம்​பெண்ணை மிரட்டி பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக திரு​வண்​ணா​மலை கிழக்கு...
தமிழகத்தில் 14.23 லட்​சம் விவ​சா​யிகள் பயன்​பெறும் வித​மாக பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்​ளு​படி செய்​திருக்​கிறது தவெக அரசு. ஆனால், தேர்​தல் வாக்​குறு​தி​யில் சொன்​னபடி விஜய் செய்​ய​வில்​லையே என விவ​சா​யிகளும் விவ​சாய சங்​கங்​களும் போர்க்​கொடி தூக்கி இருக்​கின்​றன. பயிர்க் கடன் தள்​ளு​படி என்​பது திமுக-வுக்​கும் அதி​முக-வுக்​கும் ஓட்டுக்​காக விவ​சா​யிகளை வளைக்​கும் ஒரு உத்​தி. அதேசம​யம், இந்த ‘தள்​ளு​படி’ விவ​காரத்​துக்கு நீண்ட நெடிய வரலாறே இருக்கிறது. விவ​சா​யிகளுக்கு கடன் வழங்​கும்...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில், அவரது இல்லத்துக்​கு, முன்​னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்​வல​மாக சீர்வரிசை எடுத்து வந்து வழங்​கி​னார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் - கயல்விழி தம்​ப​தி​யினருக்​கு, முதலா​வ​தாக ஆண் குழந்தை இருக்கும் நிலை​யில், அவர்​களுக்கு இரண்​டாவ​தாக, பெண் குழந்தை கடந்த 22-ம் தேதி பிறந்​தது. இந்​நிலை​யில், நீலாங்​கரை​யில் உள்ள சீமானின் இல்​லத்​துக்கு நாதஸ்​வரம், மேள தாளங்​கள்...
பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் உள்பட 10 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, ஜாக்டோ ஜியோ ஒருங்​கிணைப்​பாளர்​கள் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை சந்​தித்து நேற்று மனு அளித்​தனர். அவர்​கள் அளித்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தவெக தேர்​தல் வாக்​குறு​தி​யில் தெரி​வித்​துள்​ளபடி அரசு ஊழியர், ஆசிரியர்​கள் மற்​றும் அரசு பணி​யாளர்​களின் கனவான பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை உடனடி​யாக அமல்​படுத்​து​வீர்​கள் என நம்​பு​கிறோம். மக்​கள் நலத் திட்​டங்​களை செயல்​படுத்​து​வதற்கு தங்​களது தலை​மையி​லான அரசுக்கு...
‘குற்​றச்​சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​வ​தால் மக்​களின் பாது​காப்பை உறு​தி​செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என்று பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தின் பல பகு​தி​களில் கடந்த சில நாட்​களாக தொடர்ந்து நடை​பெற்று வரும் கொலை, தாக்​குதல், பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மீதான வன்​கொடுமை​கள், பழிக்​குப் பழி வாங்​கும் நோக்​கில் நடை​பெறும் வன்​முறைச் சம்​பவங்​கள் போன்​றவை பொது​மக்​களிடையே அச்​சத்​தை​யும் பாது​காப்​பின்​மை​யை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளன. அதனால்,...
உரிமை​யியல் வழக்​கு​களில் தமிழக அரசுக்​காக ஆஜராகி வாதிட ஏது​வாக 17 அரசு வழக்​கறிஞர்​களை நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. தமிழக அரசு தரப்​பில் உரிமை​யியல் வழக்​கு​களில் ஆஜராகி வாதிடும் வகை​யில் சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் தற்​காலிக அடிப்​படை​யில் 17 பேரை அரசு வழக்​கறிஞர்​களாக நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. அதன்​படி, அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண் பரிந்​துரை​யின்​பேரில் சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு அரசு...
ஆளும் தவெக தனிப் பெரும்பான்மையை நோக்கி அதிரடியாகக் காய்களை நகர்த்தி வருவதால், அதிமுக எம்எல்ஏ.க்கள் பலர் தவெகவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை அக்கட்சியால் எட்ட முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்,...
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கட்டிடம் முற்றிலுமாக இடிந்து...