Google search engine
முதல்வர் விஜய்யை ஃபோர்டு நிறுவனத்தினர் சந்தித்தனர். அவர்களிடம் மறைமலைநகரில் உற்பத்தி மற்றும் விரிவாக்கத்தை விரைவில் தொடங்கும்படி முதல்வர் வலியுறுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை, அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் உற்பத்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, ஃபோர்டு நிறுவனம், தமிழகத்தில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது...
ஆவின் நெய் விலை உயர்த்​தப்​பட​வில்லை என அந்த நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. மேலும், மொத்த விற்​பனை​யாளர்​களுக்​கான கமிஷன் குறைப்பு உத்​தரவு வாபஸ் பெறப்​பட்​டுள்​ளது என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழக மக்​களுக்கு பால் மற்​றும் பால் பொருட்​களை விற்​பனை செய்​யும் பணி​யில், தமிழக அரசின் ஆவின் நிறு​வனம் ஈடு​படு​கிறது. ஆவின் நிறு​வனம், பால் உற்​பத்​தி​யாளர்​களிட​மிருந்து பாலை கொள்​முதல் செய்​து, அதை பதப்​படுத்தி பல்​வேறு வகை​களில் விநி​யோகம் செய்​கிறது. இதற்​கிடை​யில், ஆவின் நெய் தொடர்​பான பில்​லிங்...
சேத்​துப்​பட்டில் செயல்​பட்டு வரும் உயி​ரி-எரி​வாயு ஆலை​யைத் முதல்​வர் விஜய் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். சென்னை சேத்​துப்​பட்டு பகு​தி​யில் பொது-தனி​யார் பங்​களிப்​புடன் செயல்​பட்டு வரும் உயி​ரி-எரி​வாயு ஆலை​யைத் முதல்​வர் விஜய் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். சென்​னை​யில் நாள்​தோறும் சேரும் குப்​பைகளில் 3,200 மெட்​ரிக் டன் மக்​கும் குப்​பைகளாக​வும், 2,950 மெட்​ரிக் டன் மக்​காத குப்​பைகளாக​வும் உள்​ளன. இதில் மக்​கும் குப்​பைகளை நவீன தொழில்​நுட்​பத்​தில் இயற்கை எரி​வா​யு​வாக​வும், உராக​வும் மாற்ற வேண்​டும். பிளாஸ்​டிக் உள்​ளிட்ட...
மதுபானக் கொள்​முதலில் அனைத்து மது உற்​பத்​தி​யாளர்​களிட​மிருந்​தும் சம அளவில் கொள்​முதல் செய்​யப்​படும் என, டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். தமிழகத்​தில் உள்ள டாஸ்​மாக் கடைகளில் இந்​திய தயாரிப்பு வெளி​நாட்டு வகை மது​பானங்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. இந்த மது​பானங்​களை டாஸ்​மாக் நிர்​வாகம் மது​பான உற்​பத்​தி​யாளர்​களிட​மிருந்து கொள்​முதல் செய்து சில்​லறை விற்​பனை கடைகள் மற்​றும் மனமகிழ் மன்​றங்​கள் போன்ற உரிமம் பெற்​றவர்​களுக்கு வழங்கி வரு​கிறது. குறிப்பாக, சில குறிப்​பிட்ட உற்​பத்​தி​யாளர்​களிடம் இருந்து மட்​டுமே அதி​கள​வில் மது​பானம்...
திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தனது லண்​டன் பயணத்​தை ​முடித்து நேற்று இரவு சென்னை திரும்​பி​னார். அவருக்கு விமான நிலை​யத்​தில் கட்சி நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினின் பேரனும், தமிழக சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லினின் மகனு​மான இன்​பநி​தி, லண்​டன் மான்​செஸ்​டர் நகரில் உள்ள புகழ்​பெற்ற பல்​கலைக்​கழகத்​தில் விளை​யாட்டு மேம்​பாடு தொடர்​பான இளநிலை பட்​டப்​படிப்பை முடித்​துள்​ளார். அவரது பட்​டமளிப்பு விழா​வில் பங்கேற்பதற்காக, திமுக...
சர்வதேச போர் பதற்ற சூழலால் ஏற்பட்ட காஸ் தட்டுப்பாட்டால், ஏப்ரல் மாதம் மட்டும் அம்மா உணவகங்களில் வருவாய் குறைந்தது என்று, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் விஜய் உத்தரவின்படி, அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67,164 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வந்த நிலையில், தற்போது, தினசரி சராசரியாக...
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18-ம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட...
 சென்னை - பெங்களூரு விரைவு நெடுஞ்சாலைப் பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பெருநகரங்களான சென்னை - பெங்களூருவை இணைக்கும் வகையில், ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ எனப்படும் அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள கடந்த 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகள் முடிந்து, தேசிய நெடுஞ்சாலை...
தமிழக முதல்வர் விஜய் மேற்கொண்ட திடீர் ஆய்வின் எதிரொலியாக சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதி கைப்பந்து மைதானம் உடனடியாக திறக்கப்பட்டது. இதனால் விடுதி மாணவர்கள் உற்சாகமாக கைப்பந்து விளையாடி மகிழ்ந்தனர். சென்னை சைதாப்பேட்டையில் அண்ணா சாலையை ஒட்டி எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் அமைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இந்த விடுதி ரூ.44.5 கோடி செலவில் மின்தூக்கி வசதியுடன் 10 மாடி கட்டிடமாக புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் விஜய் கடந்த...
தொல்​லியல் துறை​யின் ஓய்​வு​பெற்ற இணை தலைமை இயக்​குந​ரான எம்​.நம்​பி​ராஜன் தலை​மை​யில் 14 பேர் அடங்​கிய தமிழ்​நாடு புராதன சின்​னங்​கள் ஆணை​யம் அமைத்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் அறநிலை​யத்​துறை தெரி​வித்​துள்​ளது. திரு​வண்​ணா​மலை அருணாச்​சலேஸ்​வரர் கோயி​லில் அறநிலை​யத்​துறை சார்​பில் நிறைவேற்​றப்​பட​வுள்ள திட்​டங்​கள் குறித்​தும், கோயி​லின் பழமை மற்​றும் புராதன சின்​னங்​களை பாது​காக்க 2012-ம் ஆண்டு இயற்​றப்​பட்ட புராதன சின்​னங்​கள் ஆணைய சட்​டத்​தின்​கீழ் தமிழ்​நாடு புராதன சின்​னங்​கள் பாது​காப்பு ஆணை​யம் அமைக்க...