Google search engine
பொதுப் பார்வையாளர்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம் பொதுமக்கள், தொகுதியின் தேர்தல் அலுவலகங்களில் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளர் தேம்ஜென்வாபாங்...
கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் சுதாகர், திமுக வேட்பாளர் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 30-ம் தேதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர் விடுமுறைக்குப் பின் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலில், கும்மிடிப் பூண்டி தொகுதியில், திமுக வேட்பாளர் டி.ஜெ. கோவிந்தராஜன்,...
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, சூளைமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மகளிர் அணி செயலாளருமான வளர்மதி போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் தனது பிரச்சாரத்தை தொடங்கி, கோபாலபுரம், ராயப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார். இந்நிலையில், சூளைமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் வளர்மதி பேசும்போது, ‘‘திமுக...
தமிழகத்​தில் அதிக வாக்​காளர் களைக் கொண்ட பெரிய தொகுதி என்ற தனிச்​சிறப்பு வாய்ந்தது சோழிங்​கநல்​லூர் தொகு​தி. சென்​னையை ஒட்டி ஓஎம்​ஆர் சாலையில் அமைந்​துள்ள சோழிங்​கநல் லூரில் ஏராள​மான தகவல் தொழில்நுட்ப நிறு​வனங்​கள், எல்​காட் சிறப்பு பொருளா​தார மண்​டலம், பொறி​யியல் கல்​லூரி​கள், உலகளா​விய திறன் மையங்​கள் என பலதரப்​பட்ட நிறு​வனங்​கள் இயங்கி வரு​கின்​றன. ஐடி நிறு​வனங்​களின் அதி​கரிப்பால் குடி​யிருப்​பு​களும் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களும் பெருகி வரு​கின்றன. இத்​தொகு​தி​யின் தற்​போதைய எம்​எல்​ஏ​வான அரவிந்த் ரமேஷ், மீண்​டும்...
தமிழக வெற்​றிக் கழகம் புதுச்​சேரி​யில் நேயம் மக்​கள் கழகம் என்ற புதிய கட்​சி​யுடன் கூட்​டணி அமைத்து போட்​டி​யிடு​கிறது. இந்நிலையில், தவெக தலை​வர் விஜய் 4-ம் தேதி பிரச்​சா​ரம் மேற்​கொள்ள புதுச்​சேரி காவல் துறை​யிடம் அனு​மதி கோரப்​பட்​டுள்ளது. புதுச்​சேரி மாநில எல்​லைப்​பகு​தி​யான காலாப்​பட்​டில் தொடங்கி கடலூர் அரு​கே​யுள்ள முள்​ளோடை வரை 23 இடங்​களில் காலை 9.30 முதல் இரவு 9.30 வரை வேனில் பிரச்​சா​ரம் செய்ய அனு​ம​திக்க வேண்​டும் என்று அதில்...
சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமன், மருத்​துவ கண்​காணிப்​பாளர் பாஸ்​கரன் ஆகியோர் கூறிய​தாவது: கடலூரை சேர்ந்த ஏழை தம்​ப​தி​யின் மகள் 14 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்​டு​களாக கட்​டுப்​பாடின்றி சிறுநீர் வெளி​யேறும் பாதிப்பு இருந்து வந்​தது. பல்​வேறு மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்​றும், அந்த பிரச்​சினை சரி​யாக​வில்​லை. இந்​நிலை​யில், மகா​ராஷ்டிரா மாநிலம் மும்​பை​யில் உள்ள பிரபல தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அந்த சிறுமி அழைத்து செல்​லப்​பட்​டார். அங்கு சிறுமியை பரிசோதனை...
புதுச்​சேரி சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி பிரச்​சா​ரம் மேற்​கொள்ள பிரதமர் நரேந்​திர மோடி நாளை (மார்ச் 3-ம் தேதி) புதுச்​சேரி செல்​கிறார். அங்கு பிரச்​சா​ரத்தை முடித்து விட்டு சென்னை திரும்​பும் அவர் அன்று இரவு, சென்னை கிண்​டி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர ஓட்​டலில் தங்​கு​கிறார். மறு​நாள் காலை தமிழக பாஜக நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்​துகிறார். பின்​னர், மதி​யம் புறப்​பட்டு கேரளா செல்​கிறார். இதையொட்டி பாது​காப்பு காரணங்​களுக்​காக மீனம்​ பாக்​கம், கிண்டி ஆகிய பகு​தி​கள், பிரதமர் பயணிக்​கும்...
​மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் செங்​கல்​பட்டு மாவட்ட குழு சார்​பில் நேற்று முன் தினம் நடை​பெற்ற நிதி அளிப்பு மற்​றும் அரசி​யல் விளக்​க கூட்​டத்​தில் கட்​சி​யின் அரசி​யல் தலைமை குழு உறுப்​பினர் கே.பால​கிருஷ்ணன் பேசி​ய​தாவது: பழனி​சாமி அவர்​களே நீங்​கள் ஆட்​சிக்கு வந்து செய்த சாதனை என்ன நீங்​கள் அந்தகட்​சி​யின் தலை​வ​ராக வந்த பின்​னர் உங்​களு​டைய சாதனை என்​னவென்று விளக்க முடி​யு​மா? தமிழகத்​தில் தொடர்ந்து தோல்​வியை சந்​தித்​தது தான் பழனி​சாமி​யின் சாதனை. பாஜக​வுடன்...
மத​சார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி வேட்​பாளர்​கள் அறி​முக கூட்​டத்​தில் கடுமை​யாக உழைப்​போம், ஒற்​றுமை​யாக உழைப்​போம் என அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் வேண்​டு​கோள் விடுத்​தார். காஞ்​சிபுரம் வடக்கு மாவட்​டத்​தில் உள்ள 6 தொகு​தி​களில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் அறி​முக கூட்​டம், மாவட்ட செயல் வீரர்​கள் கூட்​டம் கூடு​வாஞ்​சேரி​யில் நேற்று முன் தினம் நடை​பெற்​றது. காஞ்​சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செய​லா​ளர் தா.மோ.அன்​பரசன் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் மண்டல தேர்​தல் பொறுப்​பாளர் ஆ.ராசா கலந்​து​கொண்டு ஆலந்​தூர் வேட்​பாளர் தா.மோ.அன்​பரசன்,...
வியாசர்பாடி ஜீவா நிலை​யம் அருகே ஏற்​பட்ட சிக்​னல் பிரச்​னை​யால், 35 நிமிடங்​கள் வரை மின்​சார ரயில் சேவை பாதிக்​கப்​பட்​டது. இதனால், பயணி​கள் கடும் அவதிக்கு உள்​ளாகினர். சென்னை புறநகர் மின்​சார ரயில் சேவை​யில், சென்ட்​ரல் - அரக்​கோணம் வழித்​தடம் முக்​கிய​மான​தாகும். இத்​தடத்​தில், நாள்​தோறும் 200-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில் சேவை​கள் இயக்​கப்​படு​கின்​றன. இதில் லட்​சக்​கணக்​கான மக்​கள் பயணிக்​கின்​றனர். இந்​நிலை​யில், வியாசர்​பாடி ஜீவா ரயில் நிலை​யம் அருகே நேற்று பிற்​பகலில் திடீரென சிக்​னல்...