Google search engine
முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமோ அந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற போராடுவேன் என்று ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளிடம் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்தார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கலந்துரையாடினார். முன்னதாக அமைச்சர் பேசியதாவது: உலகில் பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் கிடையாது....
ஒப்​பந்த தொழிலா​ளர்​களை பணி நிரந்​தரம் செய்ய கோரி, அண்​ணா​சாலை​யில் உள்ள மின்​வாரிய தலை​மையகம் அருகே தமிழ்​நாடு மின்​உற்​பத்தி மற்​றும் பகிர்​மான தொழிலா​ளர்கூட்​டமைப்​பினர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது, கூட்​டமைப்​பின் மாநில தலை​வர் மகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக மின்​வாரி​யத்​தில் பல ஆண்​டு​களாக ஒப்​பந்த தொழிலா​ளி​யாக பணி​யாற்றி வரு​கிறோம். புயல், மழை, கரோ​னா, போன்ற அனைத்து பேரிடர் காலங்​களி​லும் உயிரை பொருட்​படுத்​தாமல் பாடு​பட்​டோம். எங்​கள் நீண்ட நாள் கோரிக்​கை​யான தினக்​கூலி அடிப்​படை​யில், ரூ.965-ஐ அரசே...
தி​முக எம்​எல்​ஏக்​களை கைது செய்​வதை​யும், அதி​முக எம்​எல்​ஏக்​களை விலைக்கு வாங்​கு​வதை​யும் தவெக அரசு முழுநேரபணி​யாகச் செய்து வரு​கிறது என்​று, எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி விமர்​சித்​துள்​ளார். தமிழக முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக​வும், மிரட்​டும் தொனி​யிலும் பேசி​ய​தாக கைது செய்​யப்​பட்ட விளாத்​திக்​குளம் தொகுதி எம்​எல்ஏ .​வி.​மார்க்​கண்​டேயன், பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். கடந்த ஒரு வார​மாக சிறை​யில் உள்ள அவரை, திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி.முன்​னாள் அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, ரகுபதி...
தி​முக எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் காணொலிக் காட்சி வாயி​லாக இன்​று (ஜூலை 28) நடை​பெற உள்​ளது, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்​றி​பெற்று ஆட்​சி​யமைத்​துள்ள தவெக​வின் முதல் பொது பட்​ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி​யும், வேளாண் பட்​ஜெட் மே 6-ம் தேதி​யும் வெளி​யிடப்பட உள்​ளது. இதற்​கான முன்​னேற்​பாடு​கள் தற்​போது தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், பட்​ஜெட் கூட்​டத்​தொடரில் பங்​கேற்​பது தொடர்​பான திமுக எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் இன்று...
அ​தி​முக செயற்​குழுக் கூட்​டத்தை அடுத்த மாதம் கூட்ட கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி திட்​ட​மிட்​டுள்​ளார். நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் வென்​றது. தவெக 108 இடங்​களில் வென்று ஆட்​சி​யைப் பிடித்​தது. ஆட்​சியை தக்க வைத்​துக்​கொள்ள அதி​முக​வின் ஆதரவை தவெக நாடியது. தொடர்ந்து பழனி​சாமி​யின் எதிர்ப்பை மீறி, முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் தவெக அரசுக்கு ஆதர​வளித்​தனர். பொதுக்​குழு​வைக் கூட்​டி, அதி​முக​வின் தோல்விக்​கான காரணத்தை விவா​திக்க...
யூடியூபர் இர்ஃ​பான் கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்​பு, தனது கர்ப்​பிணி மனை​வியை துபாய்க்கு அழைத்து சென்​று, மருத்​து​வப் பரிசோதனை செய்​து, கரு​வில் உள்ள சிசு​வின் பாலினத்தை அறிந்து கொண்​டார். அதனை, தனது யூடியூப் சேனலில் வீடியோ​வாக வெளி​யிட்டு அறி​வித்​தார். அப்​போது பல்​வேறு விமர்​சனங்​கள் எழுந்​த​தால், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநரகம், இர்ஃ​பானிடம் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பியது. இதுதொடர்​பாக, சுகா​தா​ரத்​துறை அதி​காரி​கள் அவரிடம் விசா​ரணை​ நடத்​தினர். இதையடுத்​து, தனது செயலுக்கு...
அடை​யாளம் தெரி​யாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரு​வ​தாக, சென்னை காவல் ஆணை​யரிடம், மேயர் பிரியா புகார் தெரி​வித்​துள்​ளார். சென்னை மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, சென்னை காவல் ஆணை​யரிடம் ஆன்​லைன் மூலம் புகார் ஒன்றை அளித்​துள்​ளார். அதில், ‘வாட்​ஸ்​அப், பேஸ்​புக் உள்​ளிட்ட சமூகவலைத் தளங்​களில் தன்னை குறித்து அவதூறான தகவல்​கள் மற்​றும் தவறான பதிவு​கள் பரப்​பப்​படு​கிறது. இதன் மூலம் தனது நற்​பெயருக்கு களங்​கம் ஏற்​படுத்த முயற்சி நடை​பெறுகிறது. மேலும், சென்னை மாநக​ராட்சி...
தமிழகத்​தில் உள்ள தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் சுங்கச்சாவடிகளில் மாதாந்​திர பாஸ் கட்​ட​ணம் ஏப்​ரல் முதல் 3-வது முறை​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் உள்ள தேசிய நெடுஞ்​சாலைகளில் 77 இடங்​களில் சுங்​கச்​சாவடிகள் உள்​ளன. சுங்​கச்​சாவடிகளில் ஒவ்​வோர் ஆண்​டும், 5 சதவீதம் கட்​ட​ணத்தை உயர்த்​திக்​கொள்ள, தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது. ஆண்​டு​ தோறும் ஏப்​.1-ம் தேதி கட்​ட​ணம் மாற்​றப்​படு​கின்​றது. இந்​நிலை​யில் சுங்​கச்​சாவடிகளுக்கு அருகே 20 கி.மீ. சுற்​றள​வில் வசிப்​பவர்​களுக்​கான மாதாந்​திர சுங்​கச்​சாவடி பாஸுக்​கான கட்​ட​ணத்தை...
வந்​தே​பாரத் விரைவு ரயிலில் பயணிக்கு வழங்​கிய மசால் வடை​யில் `ஃபெவி க்விக்' (உடனடி​யாக ஒட்​டும் பசை) இருந்​த​தால், அந்த பயணி கடும் அதிர்ச்​சி​யடைந்​தார். இதையடுத்து உணவை வழங்​கிய கேட்​டரிங் ஒப்​பந்த நிறு​வனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க பயணி​கள் போர்க்​கொடி தூக்​கினர். சென்னை கொளத்​தூரைச் சேர்ந்​தவர் சேகர். இவர் லயன்ஸ் கிளப்பை சேர்ந்த 150 பேருடன் மைசூரு சென்​று​விட்டு நேற்று மதி​யம் சென்​னைக்கு வந்தே பாரத் விரைவு ரயி​லில் புறப்​பட்​டார்....
கோ​யில்​களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வலி​யுறுத்​தி, இந்து முன்​னணி சார்​பில் தமிழகம் முழு​வதும் ஆர்ப்​பாட்​டங்​கள் நடை​பெற்​றன. தமிழகத்​தில் இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் நடை​முறை​யில் உள்ள கட்டண தரிசன முறையை முழு​மை​யாக ரத்து செய்ய வலி​யுறுத்​தி, இந்து முன்​னணி சார்​பில் தமிழகம் முழு​வதும் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டங்​கள் நடை​பெற்​றன. தமிழகம் முழு​வதும் சுமார் 65 முக்​கிய இடங்​களில் இந்த ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. சென்​னை​யில், சிவானந்தா சாலை​யில்...