Google search engine
தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்​கத்​தின் நாகை மாவட்ட, ஒன்​றிய நிர்​வாகி​கள் அவசரக் கூட்​டம் மாவட்​டத் தலை​வர் புலியூர் பாலசுப்​ரமணி​யன் தலை​மை​யில் நாகை​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் சிறப்பு அழைப்​பாள​ராக பங்​கேற்ற பி.ஆர்​.​பாண்​டியன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: நாகை மாவட்​டத்​தில் 2024-ல் மழை​யால் பாதிக்​கப்​பட்ட விவ​சா​யிகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதி மூலம் இது​வரை இழப்​பீடு வழங்​கப்​பட​வில்​லை. கருணாநிதி பிறந்த திருக்​கு​வளை​யில் விவ​சா​யிகள் தற்​கொலைகள் தொடர்​கிறது. நெல் உரிய காலத்​தில் கொள்​முதல் செய்​யப்​பட​வில்​லை. 2021...
கோடை​காலத்​தில் சொந்த ஊருக்கு செல்​லும் பயணி​கள் வசதிக்​காக, தாம்​பரம் - சந்​திர​காச்சி இடையே சிறப்பு ரயில் இயக்​கப்​படு​கிறது. இதன்​படி, தாம்​பரத்​தில் இருந்து இன்று (14-ம் தேதி), வரும் 21, 28 ஆகிய தேதி​களில் காலை 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06075) புறப்​பட்​டு, மறு​நாள் மாலை 6.30 மணிக்கு மேற்​கு​வங்​கம் மாநிலம் சந்​திர​காச்​சியை சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, மேற்​கு​வங்​கம் சந்​திர​காச்​சி​யில் இருந்து நாளை (15-ம் தேதி), வரும் 22, 29 ஆகிய தேதி​களில்...
இந்​திய ரயில்வேயின் மிகப்​பழமை​யான மண்​டலங்​களில் ஒன்​றான தெற்கு ரயில்வே இன்று (ஏப்​.14) 75-வது நிறுவன தினத்​தைக் கொண்​டாடு​கிறது. மெட்​ராஸ் மற்​றும் தென் மராட்​டிய ரயில்​வே, தென்​னிந்​திய ரயில்வே மற்​றும் மைசூர் மாநில ரயில்வே ஆகிய 3 அமைப்​பு​களை ஒன்​றிணைத்து தெற்கு ரயில்வே கடந்த 1951-ம் ஆண்டு ஏப்​.14-ம் தேதி உரு​வாக்​கப்​பட்​டது. தென்​னிந்​தி​யா​வில் ரயில்​வே​யின் வரலாறு 1856-ல் ராயபுரம் முதல் ஆற்​காடு (வாலாஜா ரோடு) வரை இயக்​கப்​பட்ட முதல் ரயி​லிலிருந்து தொடங்​கு​கிறது. பரிணாம வளர்ச்சி 1860-களில்...
தவறு​தலாக இன்​ஸ்​டாகி​ராமில் குறுஞ்செய்தி அனுப்​பிய விவ​காரத்​தில், பெண் மீது தாக்​குதல் நடத்​திய இளைஞர் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, திரு​வொற்​றியூரைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒரு​வர் கணவன் மற்​றும் குழந்​தைகளு​டன் வசித்து வரு​கிறார். மேலும், இவர் அதே பகு​தி​யில் உள்ள பெட்​ரோல் பங்க் ஒன்​றில் வேலை செய்து வரு​கிறார். கடந்த 11-ம் தேதி மாலை அவர் வேலை​யில் இருந்​த​போது, அங்கு வந்த இளைஞர் ஒரு​வர், எதற்​காக எனக்கு இன்​ஸ்​டாகி​ராம் மூலம் தொடர்ந்து...
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் வாக்​குப் பதிவு வரும் 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான தொழில்​நுட்ப ஆயத்​தப் பணி​களில் ஒரு முக்​கிய மைல்​கல்​லாக, புரோ மாட்யூல் (PRO Module-ECINET) குறித்த மாநில அளவி​லான பயிற்சி முகாம் நேற்று சென்​னை​யில் நடை​பெற்​றது. இசிஐ நெட் புரோ மாட்​யூல் என்​பது தேர்​தல் பணி​யில் இருக்​கும் தலைமை வாக்​குச்​சாவடி அலு​வலருக்​காக உரு​வாக்​கப்​பட்ட ஒரு செயலி​யாகும். வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள் மற்​றும் வாக்​குச்​சாவடி பொருட்​கள் வரு​கை, மாதிரி...
தி​​முக​வினர் டிசைன் டிசை​னாக பொய் பேசுவ​தில் வல்​ல​வர்​கள் என்று பாஜக முன்​னாள் தலை​வர்அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி மற்​றும் திருப்​பத்​தூரில் தே.ஜ. கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது, அவர் பேசி​ய​தாவது: தி​முக அரசு மீது மக்​கள் கோபத்​தில் உள்​ளனர். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​படு​வது உறு​தி. ஏராள​மான குற்​றங்​கள் நடக்​கும் தமிழகம் எப்​படி அமை​திப் பூங்​கா​வாக இருக்க முடி​யும்? இந்​தத்...
மது​பானம் விற்ற பணத்​தில் அரசு இயங்​கு​வது வெட்​கக்​கேடு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பேசி​னார். தேனி மாவட்​டம் ஆண்​டிபட்​டி​யில் சீமான் நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: திமுக​வும் அதி​முக​வும் மாறி மாறி இங்கு ஆட்சி செய்​கின்​றன. ஆனாலும், டாஸ்​மாக் மூடப்​பட்​ட​தா? கொலை கொள்ளை குறைந்​துள்​ள​தா? ஆண்​டிபட்​டி​யில் திமுக மற்​றும் அதி​முக சார்​பில் போட்​டி​யிடு​பவர்​கள் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த அண்​ணன், தம்​பிகள். கடந்த முறை...
தவெக ஆட்சி அமைந்​தால் ஆதார் அட்டை போன்று தமிழ்​நாடு அடை​யாள அட்டை உரு​வாக்​கப்​பட்​டு, ஏஐ தரவு​களு​டன் லஞ்​சம் இல்​லாத நலத்​திட்​டங்​கள் மக்​களுக்கு வழங்​கப்​படும் என்று கன்​னி​யாகுமரி​யில் நடந்த தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் விஜய் தெரி​வித்​தார். தவெக தலை​வர் விஜய் நேற்று மாலை கன்​னி​யாகுமரி​யில் ரோடு ஷோ நடத்​தி​னார். முன்​ன​தாக மகா​தானபுரம் ரவுண்​டா​னா​வில் வேனை விட்டு கீழே இறங்​கி, ரவுண்​டா​னாவை சுற்றி விசில் ஊதி​யபடி சைக்​கிள் ஓட்​டி​னார். அப்​போது அங்கு திரண்​டிருந்த...
மதுரை எஸ்​.எஸ்​.​காலனி பகு​தி​யில் தேர்​தல் பறக்​கும் படை​யினர் நேற்று நடத்​திய வாக​னச் சோதனை​யில், உரிய ஆவணங்​களின்றி கொண்டு செல்​லப்​பட்ட ரூ.50 கோடி மதிப்​பிலான தங்க, வெள்ளி நகைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, வாக்​காளர்​களுக்கு அரசி​யல் கட்​சி​யினர் பணம் மற்​றும் பொருள்​கள் வழங்​கு​வதை தடுக்​கும் வகை​யில், தேர்தல் பறக்​கும் படை​யினர் தீவிர வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அதன்​படி, மதுரை எஸ்​.எஸ்​.​காலனி பகு​தி​யில் தேர்​தல் பறக்​கும் படையினர் வாக​னச்...
நடிகர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் வெளி​யான அனைத்து இணை​யதளங்​களை​யும் முடக்கி சைபர் க்ரைம் போலீ​ஸார் நடவடிக்கை எடுத்​துள்​ளனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வர் நடிகர் விஜய் நடிப்​பில், முன்​னணி இயக்​குநர் ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் உரு​வான திரைப்​படம் ஜனநாயகன். விஜய்​யின் திரைப்​பயணத்​தில் இது கடைசிப் படம் என்​ப​தால், உலகெங்​கிலும் உள்ள ரசிகர்​கள் மத்​தி​யில் இப்​படத்​துக்கு பெரும் எதிர்​பார்ப்பு நிலவி வந்​தது. கடந்த ஜனவரி...