Google search engine
​வார கடைசி நாட்​களை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து இன்​றும், நாளை​யும் 885 பேருந்துகள் இயக்​கப்​படும் என, போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்ளது. இதுகுறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: முகூர்த்த தின​மான இன்று (4-ம் தேதி) மற்​றும் வார கடைசி நாட்​களை முன்​னிட்டு (5, 6, 7 தேதி​கள்) சென்​னையி​லிருந்து இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும்...
தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்​ணா​மலை தனிக்​கட்சி அறி​விப்பை வெளி​யிடப் போகிறார் என்​பது பரபரப்​புச் செய்​தி​யாக இருக்​கும் நிலை​யில், “அவர் தனிக்​கட்சி முடி​வில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்​போது அவர் அறிவிக்​கப் போவதில்லை. புதன் மாலை 7 மணி வரைக்​கும் டெல்​லியி​லிருந்து சென்னை திரும்​புவதற்கு அண்​ணா​மலை ரிட்​டர்ன் டிக்​கெட் எடுக்கவில்லை. அதனால் இன்று அவர் சென்னை வரு​வதே சந்தேகம் தான்” என்று உறு​திபடச் சொல்​கிறார்​கள்...
தமிழ்​நாடு தொழிலா​ளர் கல்வி நிலை​யத்​துக்​கென பிரத்​யேக​மாக உரு​வாக்​கப்​பட்​டுள்ள புதிய இணை​யதளத்தை தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜா.​முகமது பர்​வேஸ் தொடங்கி வைத்​தார். தமிழ்​நாடு தொழிலாளர் கல்வி நிலை​யம் கடந்த 1973-ம் ஆண்டு தொடங்​கப்​பட்டு தற்​போது சென்னை அம்​பத்​தூரில் இயங்கி வரு​கிறது. இங்கு தொழிலா​ளர் மேலாண்​மை​யில் பிஏ, எம்​ஏ மற்​றும் முது​நிலை டிப்​ளமா படிப்​பு​கள் நடத்​தப்​படு​கின்​றன. கடந்த 2001 முதல் முழுநேர மற்​றும் பகு​திநேர ஆராய்ச்​சிப் படிப்பு (பி.எச்​டி) மேற்​கொள்​வதற்​கான ஆராய்ச்சி நிலை​ய​மாக​வும்...
எஸ்​.ஜே.சூர்​யா​வின் புதிய படத்​தின் படப்​பிடிப்​பின் போது, சிலிண்டர் வெடித்து தொழில்​நுட்ப கலைஞர் உயி​ரிழந்​தார். திரைப்பட இயக்​குநரும், நடிகரு​மான எஸ்​.ஜே.சூர்​யா, 10 வருடங்​களுக்கு முன்பு ‘இசை’ என்ற படத்தை இயக்கி நடித்​திருந்​தார். இப்​படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெறாத​தால், அதற்கு பிறகு நடிப்​பில் மட்​டும் கவனம் செலுத்த தொடங்​கி​னார். தற்​போது, அவர் ‘கில்​லர்’ என்ற படத்தை இயக்கி நடிக்​கிறார். இதில், ப்ரீத்தி அஸ்​ராணி நாயகி​யாக நடிக்​கிறார். ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறு​வனத்​துடன் இணைந்​து, ஏஞ்​சல் ஸ்டுடியோஸ்...
“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்” என்று மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்​தில் கோடை விடு​முறை முடிந்து அனைத்து வித​மான பள்ளி​களும் இன்று (ஜூன் 4) திறக்​கப்பட்டன. தமிழகத்​தில் இந்தாண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடத்​தப்​பட்​டது. இதன் காரண​மாக பள்ளி மாணவர்​களுக்​கான தேர்​வு​கள் வழக்​கத்​தை​விட முன்​கூட்​டியே நடத்தி முடிக்​கப்​பட்​டன. அதன்​படி பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12-ம்...
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்​குடி​யில் குரு பகவான் சந்​நி​தி​யில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தமிழக அரசு அறி​வித்த விவ​சாயக் கடன் தள்​ளு​படி அறி​விப்பு திருப்தி இல்லை என்​ப​தால் தமிழகம் முழு​வதும் விவ​சா​யிகள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்​கள். எனவே, விவ​சா​யிகளின் கடன்​கள் முழு​வதை​யும் தள்​ளு​படி செய்ய வேண்​டும். கும்​பகோணத்​தில் போலீஸ் அதி​காரி​யின் கையை முறுக்கி ஆளுங்​கட்​சி​யினர் அராஜகம் செய்​துள்​ளனர். ஆட்​சிக்கு வந்து விட்​ட​தால் தவெக​வினர்...
தமிழக எல்லை மறு​வரையறை ஆணை​யத்​தின் ஆலோ​சனைக் கூட்​டம், மாநில தேர்​தல் ஆணைய அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. தமிழ்​நாடு மாநில தேர்​தல் ஆணை​யர் மற்​றும் எல்லை மறு​வரையறை ஆணைய தலை​வர் பா.ஜோதி நிர்​மலா​சாமி தலை​மை​யில் நடை​பெற்ற இக்​கூட்​டத்​தில், 11 மாவட்ட ஊராட்​சிகள், 40 ஊராட்சி ஒன்​றி​யங்​கள், 177 கிராம ஊராட்​சிகளில் தேர்ந்​தெடுக்​கப்பட வேண்​டிய உறுப்​பினர்​களின் எண்​ணிக்கை நிர்​ண​யம் செய்​தல், அதன் தொடர்​புடைய வார்டு எல்லை மறு​வரையறை செய்​தல் ஆகியவை குறித்து விவா​திக்​கப்​பட்​டது. இதைத்​தொடர்ந்து...
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் வளையல்காரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(37). அதிமுகவில் தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளராக இருந்து வந்த இவர், அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளால் மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்குமுன் அவர் பதிவுசெய்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வெளியான நிலையில் மற்றொரு வீடியோ தற்போது பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: தவெக தலைவரும், முதல்வருமான விஜய்க்குத்தான் இந்தப் பதிவு....
“சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை” - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் இந்தக் கருத்தால் திமுக முகாம் தகித்துக் கொண்டிருக்கிறது. தனது வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை வைகோ வரவேற்று வழியனுப்பிய உற்சாகத்தைப் பார்த்ததுமே இவர் இனி நம் பக்கம் தங்கமாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்ட திமுக, அதற்காக கவலைப்படவும் இல்லை. ஆனால், துரை...
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார். அதேபோல் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்து பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தி...