Google search engine
ஆந்​திர மாநிலம், அனகாபல்லி மாவட்​டத்​தில் நேற்​று​முன்​தினம் நள்​ளிரவு 12.05 மணிக்கு திடீரென லேசான நில நடுக்​கம் ஏற்​பட்​டது. இதனால் மக்​கள் பீதி அடைந்​தனர். இந்த மாவட்​டத்​தில் ராம்​பில்​லி, எடமஞ்​சிலி, கோட்ட ஊரட்லா ஆகிய பகு​தி​களில் நில நடுக்​கத்தை மக்​கள் உணர்ந்​தனர். ரிக்​டர் அளவு 3.7 ஆக பதி​வாகி உள்​ளது. நில நடுக்​கத்தை உணர்ந்​ததும் பயந்து போய் மக்​கள் வீடு​களை விட்டு வெளியே ஓடி வந்​தனர். நிலநடுக்கம் மீண்டும் ஏற்படும் என்ற பயத்தில்...
நாடாளுமன்ற மக்​களவை தொகுதி எண்​ணிக்​கை​யில் மாற்​றங்​கள் கொண்டு வரப்​படு​வது இது முதல் முறையல்​ல. சுதந்​திரத்​துக்​குப் பிறகு எம்​.பி.க்​களின் எண்​ணிக்கை 5 முறை மாற்றி அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வின் முதல் பொதுத் தேர்​தல் 1951 அக்​டோபர் 25 முதல் 1952 பிப்​ர​வரி 21 வரை நடை​பெற்​றது. அப்​போது 489 மக்​களவை இடங்​களுக்​கான வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. ஆரம்ப கால ஏற்​பாடு​களின் அடிப்​படை​யில் இந்த தொகு​தி​களின் எண்​ணிக்கை தீர்​மானிக்​கப்​பட்​டது. அடுத்து 1957-ல் நடை​பெற்ற 2-வது பொதுத்...
மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் நடித்து, ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளார். இவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான அமலாக்கத் துறை வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் சர்மா முன் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நடிகை ஜாக்குலின்...
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அருணா சின்சோல்கர் (64). இவரை கடந்த ஆண்டு நவம்பரில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள், தீவிரவாத தடுப்புப் படையிலிருந்து பேசுவதாக மிரட்டி அவரை டிஜிட்டல் கைது செய்தனர். பின்னர் மிரட்டி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.26.65 லட்சத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பின்னர், தான் ஏமாற்றப்பட்டது அருணாவுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவர் போபால் சைபர்...
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத், பிரதமர் நரேந்திர மோடியை விட் பெரிய பெண்ணியவாதி வேறொருவர் இருக்க முடியாது என்று பாராட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசிய அவர், “இன்று, பாரதத்தின் மகள்கள் பிரதமர் மோடியை விடப் பெரிய பெண்ணியவாதி யாரும் இல்லை என்று நம்புகிறார்கள். பெண்ணியத்தின் ஒரே அடையாளமாக அவரே திகழ்கிறார். இந்த நாட்டின் மகள்கள் அவருக்கு என்றென்றும்...
திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் கடந்த ஜெகன்​மோகன் ரெட்​டி​ ஆட்​சி​யின் போது, கலப்பட நெய் வாங்கப்பட்டதாக தற்​போதைய ஆந்​திர முதல்​வர் சந்​திர​ பாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து இந்த விவ​காரம் பக்தர்களிடையே பேரதிர்வை ஏற்​படுத்​தி​யது. இதுதொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உச்​ச நீதிமன்​றம் உத்தரவிட்​டது. இதனை தொடர்ந்து சிபிஐ அதி​காரி​கள் திருப்​பதி மற்​றும் திரு​மலை​யில் ஆய்வு நடத்தி சிலரை கைதும் செய்​தனர். இந்​நிலை​யில் சமீபத்​தில் ஆந்​தி​ரா​வில் நடை​பெற்ற 7ம் வகுப்பு சமூக அறி​வியல்...
பி​ரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான், பிரதமர் நரேந்திர மோடி​யுடன் நேற்று போனில் பேசி​னார். ஈரான் போர் நில​வரம் கவலை அளிப்​ப​தாக தெரி​வித்த தலைவர்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் பாது​காப்​பான கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெற வேண்​டும் என வலியுறுத்​தினர். ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் எரிபொருள் கப்​பல் போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​துள்​ளது. அமெரிக்கா - ஈரான் இடையே நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வியடைந்​துள்​ளது. ஈரானுடன் மீண்​டும் பேச்​சு​வார்த்தை நடத்​தும் முயற்​சிகள் நடை​பெறுகின்​றன. இந்​நிலை​யில்...
பயணி​கள் ரயில் போக்குவரத்து தொடங்கி 173-வது ஆண்டு நிறைவு பெற்​றுள்​ளதாக ரயில்வே அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். நாட்​டின் முதலா​வது பயணி​கள் ரயில் போக்​கு​வரத்து 1853-ம் ஆண்டு ஏப்​ரல் 16-ம் தேதி மகா​ராஷ்டிர மாநிலம் போரி பந்​தர்​ (​மும்​பை) மற்​றும் தானே இடையே தொடங்​கப்​பட்​டது. இந்த போக்​கு​வரத்து தொடங்​கப்​பட்டு நேற்​றுடன் 173-வது ஆண்டு நிறைவடைந்​துள்​ளது. இதுதொடர்​பாக ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் தானே...
பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பெங்களூரு மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் போதைப்​ பொருள் தடுப்​புப் பிரி​வினருடன் இணைந்து பாகலூர், பானச​வாடி உள்ளிட்ட 8 காவல் நிலைய சரகத்​துக்​குட்​பட்ட‌ இடங்​களில் போதைப் ​பொருள் கடத்​தலைத் தடுக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். இதில் மொத்​த​மாக 5.91 கிலோ எம்​டிஎம்ஏ, 21.82 கிலோ ஹைட்ரோ கஞ்​சா, 1.51கிலோ கோக்​கைன் உள்​ளிட்ட போதைப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இது...
வங்காள புத்தாண்டு ‘பொய்லா பைசாக்’-ஐ முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் எழுதிய வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்காள புத்தாண்டை முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு வாழ்த்துகள். கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் குழப்பமான ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் தங்களின் அடிப்படை உரிமை, கவுரவம் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை இழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தற்போது நிலவும் சூழல் பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு,ஏழைகளின் உரிமைகள்...