Google search engine
ஹரியானாவில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஹரியானா மாநிலம் ஷிகோப்பூரில் ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கடந்த 2008-ல் ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இந்த நிலத்தை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேர் மீது அமலாக்கத்...
பிற கட்சிகளில் இருந்து பாஜக​வில் இணைந்த பலரும் முதல்​வர், துணை முதல்​வர் உள்​ளிட்ட முக்​கிய பொறுப்புகளைப் பெற்​றுள்​ளனர். அந்தப் பட்​டியலில் பிஹார் முதல்​வ​ராகப் பதவி​யேற்ற சாம்​ராட் சவுத்​ரி​யும் இணைந்துள்ளார். சாம்ராட் சவுத்ரி முதலில் லாலு பிர​சாத்​தின் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்​சி​யில் கடந்த 1990-ம் ஆண்​டு​களில் அரசி​யலைத் தொடங்​கினார். அப்​போது முதல்​வ​ராக இருந்த ராப்ரி தேவி​யின் அமைச்​சர​வை​யில் அமைச்​ச​ராக இருந்​தார். பின்​னர் நிதிஷ் குமாரின் ஐக்​கிய ஜனதா தளத்​தில் 2014-ல்...
ஆந்​திர மாநிலம் கும்​ம​ரா​வான்​லபல்​லி​யில் குவாரி தொழிலா​ளர்​கள் குடும்​பத்​துடன் வசித்து வந்​தனர். இவர்​கள் குவாரிக்கு தேவை​யான டெட்​டனேட்​டர், அமோனி​யம் சல்​பேட், டீசல் போன்​றவற்றை வைத்​திருந்​தனர். இந்​நிலை​யில், நேற்று வெடி விபத்து ஏற்​பட்​ட​தில் 4 பேர் அதே இடத்தி​லும் ஒரு​வர் மருத்​து​வ​மனை​யிலும் உயி​ரிழந்​தனர். காயம் அடைந்த 20 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் 12 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக மருத்​து​வர்​கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.
ம​கா​ராஷ்டி​ரா​வின் அமராவதி மாவட்​டம், பரத்​வாடா நகரை சேர்ந்​தவர் முகமது அயாஸ் என்​கிற தன்​வீர் (19). இவர் மீது, பாலியல் வன்​கொடுமை, பாலியல் துன்​புறுத்​தல் மற்​றும் ஆபாச வீடியோக்​களை பதிவு செய்​த​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக போலீ​ஸார் கூறுகை​யில், “வாட்​ஸ்-​அப், ஸ்னாப்​சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் 180 சிறுமிகளை முகமது அயாஸ் காதல் வலை​யில் வீழ்த்​தி​யுள்​ளார். பிறகு அவர்களை மும்பை மற்​றும் புனேவுக்கு அழைத்​துச் சென்​று, ஆபாச வீடியோக்​களை...
மும்பை​யில் உள்ள நெஸ்கோ மையத்​தில் கடந்த 11-ம் தேதி இரவு இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் ரூ.2,000 நுழைவுக் கட்​ட​ணம் செலுத்தி சுமார் 4,000 பேர் கலந்து கொண்​டனர். இதில் கலந்​து​கொண்ட சிலர் தடை செய்​யப்​பட்ட எம்டிஎம்ஏ போதைப் பொருளை உட்​கொண்​ட​தாக கூறப்படு​கிறது, இதனால் இரவு 12 மணி​யள​வில், 3 மாணவர்​களுக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்து அவர்​கள் அரு​கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர். இவர்களில் 24 வயது...
கோடை காலத்​தில் திருப்​பதி ஏழு​மலை​யான் கோயிலில் பக்​தர்​களின் கூட்​டம் நாளுக்கு நாள் அதி​கரித்து வருகிறது. இதனால் வரும் மே 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை தொடர்ந்து 2 மாதங்​களுக்கு விஐபி பிரேக் தரிசனம் மற்​றும் ஸ்லாட்​டட் சர்வ தரிசனம் (எஸ்​எஸ்​டி) அதாவது சர்வ தரிசனத்திற்கு திருப்​ப​தி​யில் டோக்​கன் வழங்​குதலை நிறுத்த தேவஸ்​தானம் திட்​ட​மிட்​டுள்​ளது. இதனால் முன்கூட்​டியே சர்வ தரிசன டோக்​கன்​கள் வழங்​காமல், நேரடி​யாக சர்வ...
குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் வீட்​டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி தமிழ்ப் புத்​தாண்டு வாழ்த்து தெரி​வித்​தார். அப்​போது அவருக்கு நினை​வுப் பரி​சாக முரு​கன் படத்தை சிபிஆர் வழங்​கி​னார். இது குறித்து குடியரசு துணைத் தலை​வர் சிபிஆர், ‘எக்​ஸ்’ தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “பாரதப் பிரதமர் நரேந்​திர மோடி அவர்களு​டன் இன்று குடியரசு துணைத் தலை​வர் மாளி​கை​யில், தமிழ்ப் புத்​தாண்டு வாழ்த்​துகளைப் பரி​மாறிக் கொண்​ட​தில் பெரும் மகிழ்ச்சி கொள்​கிறேன். அனை​வருக்​கும்...
 சத்​தீஸ்​கர் மாநிலம் சக்தி மாவட்​டத்​தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்​த​மான மின் உற்​பத்தி நிலை​யம் செயல்​பட்டு வரு​கிறது. இங்​கு, நேற்று மதி​யம் சுமார் 2 மணி​யள​வில் தொழிலாளர்​கள் தங்​களது வழக்​க​மான பணி​யில் ஈடுபட்டிருந்தனர். அப்​போது அங்​குள்ள பெரிய பாய்​லர் ஒன்று எதிர்​பா​ராத​ விதமாகப் பயங்கர சத்​தத்​துடன் வெடித்​துச் சிதறியது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஆலை வளாகம் முழு​வதும் அடர்ந்த புகை மூட்​டம் சூழ்ந்​த​தால் தொழிலா​ளர்​கள் உயிருக்​குப் பயந்து அலறியடித்​துக் கொண்டு ஓடினர். முதற்​கட்ட...
 இந்​திய கடற்​படை​யின் அடுத்த தலை​முறை ஏவுகணை கப்​பல் திட்​டத்​திற்​காக, 18 அதிநவீன ‘கமே​வா' வாட்​டர்​ஜெட் உந்​து​விசை அமைப்​பு​களை வழங்​கு​வதற்​கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்​ஸ்​பெர்க் மேரிடைம் நிறு​வனம் பெற்​றுள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: இந்​திய கடற்​படைக்கு தேவை​யான வாட்​டர்​ஜெட் கருவி​களை வழங்க நார்வே நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்யப்​பட்​டுள்​ளது. வழக்​க​மான கப்​பல்​களில் காணப்​படும் விசிறி போன்ற புரொப்​பல்​லர் அமைப்​பிற்கு மாற்​றாக, இந்த வாட்டர்​ஜெட் தொழில்​நுட்​பம் நீரை உள்​ளிழுத்​து, அதிக வேகத்​தில் வெளி​யேற்​று​வதன்...
பிஹார் தலைநகர் பாட்​னா​வில் தேசிய ஜனநாயக கூட்​டணி எம்​எல்​ஏக்​களின் கூட்​டம் இன்று நடக்​கிறது. இதில் அந்த மாநிலத்​தின் புதிய முதல்​வர் தேர்வு செய்​யப்பட உள்​ளார். பிஹாரில் பாஜக, ஐக்​கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்​துஸ்​தான் அவாம் மோர்ச்​சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயக முற்​போக்கு கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது. ஐக்​கிய ஜனதா தள தலை​வர் நிதிஷ் குமார், பிஹார் முதல்​வ​ராக...