ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் போனில் ஆலோசனை

0
21

பி​ரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான், பிரதமர் நரேந்திர மோடி​யுடன் நேற்று போனில் பேசி​னார். ஈரான் போர் நில​வரம் கவலை அளிப்​ப​தாக தெரி​வித்த தலைவர்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் பாது​காப்​பான கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெற வேண்​டும் என வலியுறுத்​தினர்.

ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் எரிபொருள் கப்​பல் போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​துள்​ளது. அமெரிக்கா – ஈரான் இடையே நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வியடைந்​துள்​ளது. ஈரானுடன் மீண்​டும் பேச்​சு​வார்த்தை நடத்​தும் முயற்​சிகள் நடை​பெறுகின்​றன.

இந்​நிலை​யில் அமெரிக்கா​வுடன் ஈரான் ஒப்​பந்​தம் செய்​யா​விடில் மீண்​டும் போர் தொடங்​கும் என அமெரிக்கா எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இந்​நிலை​யில் பிரதமர் நரேந்​திர மோடியை பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான் நேற்று போனில் தொடர்பு கொண்டு பேசி​னார். மேற்கு ஆசிய நில​வரம் குறித்து கவலை தெரி​வித்த தலை​வர்​கள், ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் பாது​காப்​பான கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெற வேண்​டும் என வலி​யுறுத்​தினர்.

இது குறித்து எக்ஸ் தளத்​தில் பிரதமர் மோடி கூறி​யிருப்​ப​தாவது: எனது நண்​பர் இம்​மானுவேல் மேக்​ரானிடம் இருந்து போன் அழைப்பு வந்​தது. மேற்கு ஆசிய நில​வரம் குறித்து இரு​வரும் விவா​தித்​தோம். ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் தடையற்ற கப்​பல் போக்​கு​வரத்து உடனடி​யாக நடை​பெற வேண்​டும் என்​ப​தில் இரு​வரும் ஒரு​மித்த கருத்தை கொண்​டுள்​ளோம். இவ்​வாறு பிரதமர்​ மோடி கூறி​யுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here