“மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று மத்திய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “இந்திய பெண்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளது. அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. கனவு காணவும் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு நாடு நிச்சயம் வெற்றி பெற முடியாது” என்று ராகுல்...
சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு: அவதூறு பதிவுகளை அகற்ற 2 மணி நேரம் மட்டுமே கெடு
admin - 0
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ‘டீப் பேக்’ போலி பதிவுகளைத் தடுக்க, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் செய்யப்பட்ட புதிய திருத்தத்தின்படி, பாலியல் மற்றும் ஆபாச பதிவுகளை அகற்ற சமூக ஊடகங்களுக்கு இருந்த காலக்கெடுவை 24 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாகக் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு அல்லது நீதிமன்ற உத்தரவுப்படி சட்டவிரோத மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்ற இருந்த காலக்கெடு 36 மணி நேரத்தில்...
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்ய சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் நிலையில், 'சர்வே ஆஃப் இந்தியா'வின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் 27 இடங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் கலந்தாலோசித்து, இந்திய அரசு, 'சர்வே ஆஃப் இந்தியா'வின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் அம்மாநிலத்தில் அமைந்துள்ள 27 இடங்கள் மற்றும் புவியியல் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அருணாச்சலப்...
கடன் வாங்கியவர்களை மிரட்டுதல், திட்டுதல், சமூக வலைதளங்களில் தொல்லை தருதல் போன்ற செயல்களில் வங்கி ஏஜெண்டுகள் ஈடுபடக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
இது கடன் வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தவணையை செலுத்தத் தவறும் வாடிக்கையாளர்களை, வசூல் முகவர்கள் அச்சுறுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த...
இந்திய விமானப் படையின் ‘டாப் கன்’ பயிற்சி மையத்தில் சாதனை படைத்த முதல் பெண் அதிகாரி பாவனா காந்த்
admin - 0
இந்திய விமானப் படையின் அதிநவீன ‘பைட்டர் காம்பாட் லீடர்’ படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, இந்தியாவின் முதல் பெண் ‘டாப் கன்’ போர் விமானி என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த் படைத்துள்ளார்.
சுமார் 20 வாரங்கள் நடைபெற்ற அதிதீவிர வான்வழித் தாக்குதல் மற்றும் உத்திகளுக்கான உயர் பயிற்சியை நிறைவு செய்ததன் மூலம், நாட்டின் தலைசிறந்த போர் விமானிகளின் வரிசையில் அவர் இணைந்துள்ளார். இந்திய விமானப் படையின்...
பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த உரையாடலின் போது, இந்தியா - இஸ்ரேல் இடையிலான முக்கிய கூட்டாண்மையை ஆய்வு செய்த இரு தலைவர்களும், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதியேற்றனர். மேற்கு ஆசிய போர் சூழல் குறித்துப் பேசிய இரு தலைவர்களும், தொடர்ந்து தொடர்பில் இருப்பது என முடிவு செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம்...
மாநிலங்களவையில் எம்.பி.க்கள் சஞ்சய் சிங் மற்றும் வி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், கடந்த 2025-ம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்காக சுமார் ரூ.187 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக பிரான்ஸுக்குச் செல்ல ரூ.25.59 கோடியும், பிரேசிலுக்கு செல்ல ரூ.17.72 கோடியும், அமெரிக்கா வுக்கு செல்ல ரூ.16.54 கோடியும், சவுதி அரேபியாவுக்கு செல்ல ரூ.15.54 கோடியும், சீனாவுக்கு...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரூ.23,731 கோடி மதிப்பிலான தேசிய ஒருங்கிணைந்த உயிரி எரிவாயு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய திட்டத்துக்கு கோபர்தன் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இதன்படி கிராமங்கள்தோறும் வேளாண் கழிவுகள், மாட்டு சாணம், சர்க்கரை ஆலை கழிவுகள், காய்கனி கழிவுகள் ஆகியவற்றின் மூலம் உயிரி எரிவாயு உற்பத்தி செய்யப்படும்.
நடப்பு 2026-27 நிதியாண்டு முதல் 2035-36...
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அதிக் அகமது. பிரபல ரவுடி கும்பல் தலைவரும் அரசியல்வாதியுமான இவரை ஒரு வழக்கில் கடந்த 2023 ஏப். 15-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
பிரயாக்ராஜில் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, செய்தியாளர்களாக நடித்து உடன் வந்த மூவர், அதிக் அகமது (60) மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃபை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்போது நாடு...
பொதுப் பிரச்சினைகளை அறிய தேசிய அளவில் பிரச்சாரக் குழு: சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவிப்பு
admin - 0
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சிஜேபி அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை.
குறிப்பாக எங்கள் அமைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது, மக்களின் நலனுக்காக நாம் எடுக்க வேண்டிய பிரச்சினைகளைக் கண்டறிவது மற்றும் இயக்கத்துக்கான வரைபடத்தை உருவாக்குவது குறித்து விவாதிப்போம்.
விரைவில் தேசிய அளவில் பிரச்சாரக் குழு ஒன்றை அமைத்து, ‘மக்கள் என்ன சொல்கிறார்கள்’ (க்யா போல்தி பப்ளிக்)...










