நிஹாங் என்பவர்கள் சீக்கியர்களில் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள், சீக்கிய மதத்தில் ஆயுதம் ஏந்திய போர் வீரர்களாக அழைக்கப்படுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள குருத்வாராக்களுக்கு நிஹாங் சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த 16ம் தேதி உத்தராகண்ட் மாநிலம், கர்ணபிரயாக் பகுதியில் 6 நிஹாங் சீக்கியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிஹாங் சீக்கியர்கள் வாள்களை வீசியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவரின் நிலைமை...
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்-யுஜி' மறுதேர்வு எவ்வித குளறுபடி யும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தேசியத் தேர்வு முகமையின் (என்டிஏ) தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: "நீட் மறுதேர்வு எவ்வித குளறுபடியுமின்றி மிகச் சரியான முறையில் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து...
பிஹார் நீட் மறுதேர்வு மையத்தில் ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ பாணியில் மோசடி செய்ய முயன்ற 24 பேர் கைது
admin - 0
நாடு முழுவதும் நீட்-யுஜி மறுதேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. பிஹார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் நடைபெற்ற நீட் மறுதேர்வின்போது, ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ திரைப்பட பாணியில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட முயன்றது. இதை போலீஸார் முறியடித்துள்ளனர்.
இந்த கும்பல் விண்ணப்பதாரர்களுக்குப் பதிலாக நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக ‘சால்வர்களை' (மாற்று நபர்களை) ஏற்பாடு செய்ததாக காவல் துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் மருத்துவ மாணவர்கள் மற்றும் தேர்வு செயல்பாட்டில்...
மே.வங்க முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான மம்தா பானர்ஜியை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி குழுவினர் அறிவித்தனர்.
கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் நகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் (கவுன்சிலர்கள்) அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்தச் சிறப்பு கூட்டத்தில் கொல்கத்தா, பஹரம்பூர்,...
ஹைதராபாத் நகரில் நள்ளிரவு பதிவான கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. மேலும், மின்சாரம் தடை செய்யப்பட்ட காரணத்தால் மக்கள் அவதியடைந்தனர்.
இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய இந்த மழை ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பதிவானது. கேத்திரெட்டிப்பள்ளி, சந்திராநகர், மாதப்பூர், கச்சிபௌலி, ஹைடெக் சிட்டி, மணிகொண்டா, பிலிம் நகர், ஜூபிளி ஹில்ஸ், சார்மினார், மியாபூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கனமழை சுமார் 2 மணி...
கல்வி சீர்திருத்தத்துக்கான போராட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தொடங்கினார். வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு போன்றவை குறித்து அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் கல்வி சீர்திருத்தத்திற்கான கையெழுத்து இயக்கத்தை ராகுல் நேற்று தொடங்கினார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகள், அதிக கட்டணம் ஆகியவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த கல்வி முறை உங்கள் கனவுகளைத்...
மேகேதாட்டு அணை திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச தயார்: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு
admin - 0
மேகேதாட்டு அணை திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேகேதாட்டு அணை திட்டம் என் இதயத்துக்கு நெருக்கமானது மட்டுமல்ல. ஒட்டு மொத்த தென்னிந்தியாவுக்கும் நெருக்கமானது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகா தயாராக இருக்கிறது.
இந்த திட்டம் தொடர்பாக...
அசாமில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.14.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமூக ஊடகத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், "போதைப் பொருட்களுக்கு எதிரான எங்கள் போர் தீவிரமாக உள்ளது. அந்த வகையில், ஸ்ரீபூமி மற்றும் நாகான் ஆகிய 2 மாவட்டங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டது.
அந்த நடவடிக்கையின்போது, காவல் துறையினர் ரூ.14.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல்...
அயோத்தி கர்சேவக்புரத்தில் இருந்த தங்கம், வைரம், வெள்ளி, அஷ்ட தாதுவால் ஆன 1,250 புனித கற்கள் மாயமானதாக புகார்
admin - 0
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கோயிலில் இருந்து காணிக்கை திருடப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. இதுகுறித்து 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தர்மசேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் துபே ஒரு புதிய புகாரை அயோத்தி காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: 1989-ல் துவங்கிய ஸ்ரீராம ஜென்ம பூமி கோயில் போராட்டக் காலங்களில் நன்கொடை திரட்டப்பட்டது. அப்போது கோயில்...
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக விரைந்து செயல்பட அதிகாரிகளுக்கு ட்ரம்ப், மோடி உத்தரவு
admin - 0
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக விரைந்து செயல்பட வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி அவரவர் நாடுகளின் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அடுத்த சில மாதங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரி விகிதங்களை அவர் அறிவித்தார். இதன்படி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த...










