Google search engine
இந்​தி​யா​வில் நக்​சலைட்​டு​கள் நடமாட்​டம் அதி​கம் இருந்த மாநிலம் சத்​தீஸ்​கர். மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் திட்​ட​மிட்ட நடவடிக்​கைகள் மூலம் கடந்த மார்ச் 31ம் தேதி​யுடன் நக்​சலைட்​டு​கள் இல்லா மாநில​மாக சத்​தீஸ்​கர் அறிவிக்​கப்​பட்​டது. நக்​சலைட்​டு​கள் பலர் கொல்​லப்​பட்​டனர். சரணடைந்த பலருக்கு மறு​வாழ்​வுக்​கான உதவி​கள் செய்யப்பட்டுள்​ளன. சத்​தீஸ்​கரின் நக்​சல் ஆதிக்​கம் இருந்த பஸ்​தர் காட்டு பகு​தி​யில் 12 ஆண்​டு​கள் பணி​யாற்​றிய மூத்த ஐபிஎஸ் அதி​காரி பி.சுந்​தர்​ராஜ். இவர் தமிழ்​நாட்​டின் கோவையைச் சேர்ந்​தவர்....
மகா​ராஷ்டிர முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசேனா (யுபிடி) கட்​சி​யில் உள்ள எம்​.பி., எம்எல்​ஏ.க்​களை தங்​கள் பக்​கம் இழுக்க மகா​ராஷ்டிர துணை முதல்வர் ஏக்​நாத் ஷிண்​டே​வின் சிவசேனா கட்சி கடந்த சில வாரங்​களாக முயன்று வரு​வ​தாக செய்​தி​கள் வெளி​யாகின. சிவசேனா கட்​சி​யின் (உத்​தவ்) எம்​எல்​ஏ.க்​களில் 16 பேரும், எம்.பி.க்களில் 7 பேரும் துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டேவுடன் தொடர்​பில் இருப்​ப​தாக​வும், வரும் நாடாளு​மன்ற மழைக்காலக் கூட்​டத் தொடருக்கு முன்​பாக...
அமலாக்​கத் துறை அனுப்​பிய புதிய சம்​மனை தொடர்ந்து கேரள முன்​னாள் முதல்​வர் பின​ராயி விஜயனின் மகள் வீணா நேற்று காலை விசா​ரணைக்கு ஆஜரா​னார். கேரள முன்​னாள் முதல்​வர் பின​ராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர் எக்​சாலாஜிக் சொல்​யூஷன்ஸ் என்ற ஐ.டி. நிறுவனத்தை நடத்தி வந்​தார். இந்த நிறு​வனத்​துக்கு கொச்சின் தாது மணல் ஆலை நிறு​வனம் (சிஎம்​ஆர்​எல்) எந்​தவொரு சேவையும் பெறாமல் ரூ.2.78 கோடி செலுத்​தி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இது...
உ.பி.யின் பதாவுன் மாவட்டம், கர்ஹவுனா என்ற கிராமத்தில் திருமணத்துக்கு முந்தைய சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக 9 பெண்கள் நேற்று காலை இ-ரிக்‌ஷாவில் சென்றுள்ளனர். இ-ரிக்‌ஷா ஓட்டுநர் ஒரு டிராக்டர் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு டிராக்டர் மீது இ-ரிக்‌ஷா மோதியது. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் பெண்கள்...
மனி​தாபி​மான உதவி​யாக ஆப்​கானிஸ்​தானுக்கு 5 டன் அத்​தி​யா​வசிய மருந்​துகளை இந்​தியா நேற்று வழங்​கியது. இது குறித்து வெளி​யுறவுத் துறை அமைச்சக செய்​தித் தொடர்பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் ‘எக்​ஸ்' தளத்​தில் வெளியிட்டுள்ள பதி​வில், ”மனி​தாபி​மான உதவி மற்​றும் ஆப்கானிஸ்​தான் மக்​களின் நல்​வாழ்​வுக்​கான தனது அர்ப்பணிப்பை மீண்​டும் உறு​திப்​படுத்​தும் வகை​யில், இந்​தியா மேலும் 5 டன் அத்​தி​யா​வசிய மருந்​துகளை காபூலுக்கு வழங்கியுள்​ளது” என்று தெரி​வித்​துள்​ளார். கடந்த ஜூன் 11ம் தேதி, ஆப்​கானிஸ்​தானின் சுகா​தார அமைப்பை...
மேற்கு வங்க சட்​டப்​பேரவை தேர்​தல் தோல்​வியைதொடர்ந்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் (டிஎம்சி) எம்.எல்​.ஏ.க்​கள் மற்​றும் எம்​.பி.க்​கள் கட்​சித் தலை​வரும், முன்னாள் முதல்​வரு​மான மம்தா பானர்​ஜிக்கு எதி​ராக போர்க்கொடி தூக்​கினர். இந்நிலையில், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் தனி அணி​யாக பிரிந்து எதிர்க்​கட்சி அந்தஸ்தை பெற்​றனர். இதேபோல் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சியில் 20 மக்​களவை எம்​.பி.க்​கள் தனி அணி​யாக செயல்பட முடிவு செய்​தனர். இந்​நிலை​யில் மேற்கு வங்​கத்​தில் செயல்​பட்டு...
இந்​திய நிறு​வனங்​களு​டன் இணைந்து தற்​கொலைப்​படை ட்ரோன்​களை உள்​நாட்​டிலேயே தயாரிக்க இந்​திய விமானப்​படை திட்​ட​மிட்​டுள்​ளது. தற்​கொலைப்​படை (காமி​காஸ்) ட்ரோன்​களை இந்​திய நிறுவனங்களு​டன் இணைந்து தயாரிக்க இந்​திய விமானப்​படை (ஐஏஎப்) திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​கான டெண்​டரை ஐஏஎப் வெளியிட்​டுள்​ளது. நிலை​யான இறக்​கைகள் கொண்ட, ஒரு​முறை மட்​டுமே தாக்​கக்​கூடிய ஆளில்லா வான்​வழி அமைப்​பு​கள்​தான் (OWA-UAS) தற்​கொலைப்​படை ட்ரோன்​கள் என்று அழைக்கப்படுகின்​றன. இந்​தத் திட்​டத்தை கோயம்​புத்​தூர் மாவட்​டம் சூலூரில் உள்ள விமானப்​படை​யின் 5-வது பேஸ் ரிப்​பேர் டெப்போ (பிஆர்​டி)...
டெல்லியைச் சேர்ந்த ராதா காயத்ரி (27) குருகிராமில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் புனே நகரில் ஐடி துறையில் பணிபுரியும் தனது கணவர் சவும்யா ஸ்ரீசரனுடன் உத்தராகண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்ற இத்தம்பதி பிறகு அங்கிருந்து கடந்த 14ம் தேதி இரவு முசோரி வந்துள்ளனர். திப்ரிதார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கிய இத்தம்பதியினர் இரவில் மது அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளனர். இந்நிலையில்...
தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத்​தில் நிலம் மற்​றும் சர்வே துறை இணை இயக்​குந​ராக பணி​யாற்றி வந்​தவர் எஸ்​.நரஹரி. இவர் வரு​மானத்​துக்கு பொருந்​தாத வகை​யில் சொத்துகளை குவித்​துள்​ள​தாக புகார் எழுந்​தது. இதன் அடிப்​படை​யில் ஹைத​ரா​பாத்​தில் அவர் வசிக்​கும் வீடு, அலு​வல​கம் மற்​றும் நண்​பர்​கள், உறவினர்​களின் வீடு​கள் என மொத்​தம் 11 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத்​துறை அதி​காரி​கள் நேற்று அதிரடி சோதனை நடத்​தினர். இதுதொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் ​துறை டிஎஸ்பி ஸ்ரீதர் கூறுகை​யில், ‘‘நரஹரி வீட்​டின்...
அயோத்​தி​யில் எழுந்​தருளி​யுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்​பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்​பட்​டது. ஜப்​பானின் கியூஷு மாகாணம் மியா​சாகி நகரைத் தாயக​மாகக் கொண்ட இந்த மாம்​பழங்​கள், உலகிலேயே மிக விலை​யுயர்ந்த மாம்பழ வகை​யாகக் கருதப்​படு​கின்​றன. சர்​வ​தேசச் சந்​தை​யில் இதன் விலை ஒரு கிலோ ரூ.1.5 லட்​சம் முதல் ரூ.3.5 வரை லட்​சம் வரை விற்​பனை​யாகிறது. இந்த வகை மாம்​பழங்​கள் பழுக்​கும் போது, வழக்​க​மான மாம்பழங்​களைப் போல மஞ்​சள் நிற​மாக மாறாமல், அடர்...