இந்தியாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் இருந்த மாநிலம் சத்தீஸ்கர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நக்சலைட்டுகள் இல்லா மாநிலமாக சத்தீஸ்கர் அறிவிக்கப்பட்டது. நக்சலைட்டுகள் பலர் கொல்லப்பட்டனர். சரணடைந்த பலருக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரின் நக்சல் ஆதிக்கம் இருந்த பஸ்தர் காட்டு பகுதியில் 12 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.சுந்தர்ராஜ். இவர் தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்தவர்....
உத்தவ் சிவசேனாவின் ஒரு எம்.பி.க்கு ரூ.50 கோடி பேரம்? – கட்சி நிர்வாகிகளுக்கு சஞ்சய் ராவத் எச்சரிக்கை
admin - 0
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியில் உள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி கடந்த சில வாரங்களாக முயன்று வருவதாக செய்திகள் வெளியாகின.
சிவசேனா கட்சியின் (உத்தவ்) எம்எல்ஏ.க்களில் 16 பேரும், எம்.பி.க்களில் 7 பேரும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் தொடர்பில் இருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக...
அமலாக்கத் துறை அனுப்பிய புதிய சம்மனை தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார்.
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர் எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற ஐ.டி. நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்துக்கு கொச்சின் தாது மணல் ஆலை நிறுவனம் (சிஎம்ஆர்எல்) எந்தவொரு சேவையும் பெறாமல் ரூ.2.78 கோடி செலுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது...
உ.பி.யின் பதாவுன் மாவட்டம், கர்ஹவுனா என்ற கிராமத்தில் திருமணத்துக்கு முந்தைய சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக 9 பெண்கள் நேற்று காலை இ-ரிக்ஷாவில் சென்றுள்ளனர்.
இ-ரிக்ஷா ஓட்டுநர் ஒரு டிராக்டர் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு டிராக்டர் மீது இ-ரிக்ஷா மோதியது. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பெண்கள் உயிரிழந்தனர்.
மேலும் பெண்கள்...
மனிதாபிமான உதவியாக ஆப்கானிஸ்தானுக்கு 5 டன் அத்தியாவசிய மருந்துகளை இந்தியா நேற்று வழங்கியது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”மனிதாபிமான உதவி மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களின் நல்வாழ்வுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்தியா மேலும் 5 டன் அத்தியாவசிய மருந்துகளை காபூலுக்கு வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 11ம் தேதி, ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைப்பை...
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் தோல்வியைதொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் (டிஎம்சி) எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் தனி அணியாக பிரிந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றனர். இதேபோல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 20 மக்களவை எம்.பி.க்கள் தனி அணியாக செயல்பட முடிவு செய்தனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு...
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்
admin - 0
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப்படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
தற்கொலைப்படை (காமிகாஸ்) ட்ரோன்களை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்க இந்திய விமானப்படை (ஐஏஎப்) திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டரை ஐஏஎப் வெளியிட்டுள்ளது. நிலையான இறக்கைகள் கொண்ட, ஒருமுறை மட்டுமே தாக்கக்கூடிய ஆளில்லா வான்வழி அமைப்புகள்தான் (OWA-UAS) தற்கொலைப்படை ட்ரோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படையின் 5-வது பேஸ் ரிப்பேர் டெப்போ (பிஆர்டி)...
டெல்லியைச் சேர்ந்த ராதா காயத்ரி (27) குருகிராமில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் புனே நகரில் ஐடி துறையில் பணிபுரியும் தனது கணவர் சவும்யா ஸ்ரீசரனுடன் உத்தராகண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்ற இத்தம்பதி பிறகு அங்கிருந்து கடந்த 14ம் தேதி இரவு முசோரி வந்துள்ளனர். திப்ரிதார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கிய இத்தம்பதியினர் இரவில் மது அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில்...
தெலங்கானா அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை – ரூ.32 லட்சம் ரொக்கம், 1 கிலோ தங்கம் பறிமுதல்
admin - 0
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிலம் மற்றும் சர்வே துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் எஸ்.நரஹரி. இவர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவித்துள்ளதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் ஹைதராபாத்தில் அவர் வசிக்கும் வீடு, அலுவலகம் மற்றும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் என மொத்தம் 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஸ்ரீதர் கூறுகையில், ‘‘நரஹரி வீட்டின்...
அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்பட்டது.
ஜப்பானின் கியூஷு மாகாணம் மியாசாகி நகரைத் தாயகமாகக் கொண்ட இந்த மாம்பழங்கள், உலகிலேயே மிக விலையுயர்ந்த மாம்பழ வகையாகக் கருதப்படுகின்றன. சர்வதேசச் சந்தையில் இதன் விலை ஒரு கிலோ ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3.5 வரை லட்சம் வரை விற்பனையாகிறது.
இந்த வகை மாம்பழங்கள் பழுக்கும் போது, வழக்கமான மாம்பழங்களைப் போல மஞ்சள் நிறமாக மாறாமல், அடர்...










