ராணுவ மையத்தை கண்காணிக்க மின்கம்பத்தில் ரகசிய கேமரா: பாக்., கனடாவில் உள்ள தீவிரவாதிகள் சார்பில் செயல்பட்ட இருவர் கைது
admin - 0
ராணுவ மையத்தை கண்காணிக்க மின்கம்பத்தில் ரகசிய கேமரா பொருத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரில் மிகப் பெரிய ராணுவ மையம் மற்றும் ராணுவத் தலைமையகம் உள்ளது. இதன் அருகில் பதிண்டா விமானப்படைத் தளமும் உள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் நடைபெற்ற சாலை விபத்து தொடர்பாக போலீஸார் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் இருந்த மின் கம்பத்தில் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இது...
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சர்தார் சிங் தன்வர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 10-ம் தேதி இரவு மது போதையில் வீடு திரும்பி மனைவி மங்கி பாயுடன் தகராறு செய்தார். சண்டை முற்றியதால், அவர் மனைவியை அடித்து, உதைத்தார். இதில் போலீஸில் புகார் தெரிவிக்க போகிறேன் என கூறிவிட்டு இரவில் வீட்டை விட்டு மனைவி புறப்பட்டார்.
அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்த தன்வர், ஒரு தூணில் இரும்புச் சங்கிலியால்...
தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1.44 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.
தெலங்கானாவில் கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகள் (பிளஸ்-1, பிளஸ்-2) திறக்கப்பட்டன. இதனையொட்டி, தெலங்கானா அரசு நேற்று முதல் 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும்...
அரசுமுறைப் பயணமாக ஸ்லோவாக்கியா நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோவாக்கியா அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது சர்வதேச விருது...
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு, பெண்களுக்காக ‘பிரியதர்ஷினி திட்டம்’ என்ற இலவச பேருந்து பயணத் திட்டத்தை இன்று (ஜூன் 15) தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கேரள அரசு பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம்.
கேரள சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற வாக்குறுதியை ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அளித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும்...
நாட்டில் நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். குறிப்பாக தற்போது டைப்-2 வகை நீரிழிவு நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
டைப்-2 வகை நீரிழிவு நோய் என்பது உடலால் இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்த முடியாத நிலை (இன்சுலின் எதிர்ப்பு) அல்லது போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவே நீரிழிவு நோயின் மிகவும்...
ராணுவத்தின் அடுத்த தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரத் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜுன் 30-ம் தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார்.
ராணுவத் தளபதியாக இருக்கும் ஜெனரல் உபேந்திர திவிவேதி இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதைடுத்து ராணுவ துணைத் தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்தை புதிய தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது.
ராணுவத்தில் சுமார் 40 ஆண்டு காலமாக பணியில் இருக்கும் தீரஜ் சேத், பல பிரிவுகளில் உயர்...
“மேற்கு ஆசிய போர் காரணமாக இந்தியாவுக்கு ‘பொருளாதார சுனாமி’ காத்திருக்கிறது என்ற ராகுலின் எச்சரிக்கை அர்த்தமற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுவது போல இந்திய பொருளாதாரத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் 'விக்சித் பாரத் சங்கல்ப் சமாவேஷ்' என்ற கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பாஜக...
அமெரிக்கா தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ட்ரம்ப் போஸ்டர்களை கிழித்த ஆட்டோ ஓட்டுநர்கள்
admin - 0
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து டெல்லியில் உள்ள ட்ரம்ப் போஸ்டர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் கிழித்து ஏறிந்தனர்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் மே மாதம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதன்படி, டெல்லி முழுவதும் சுமார் 100 ஆட்டோ ரிக்ஷாக்களில் ‘ஹேப்பி பர்த்டே அமெரிக்கா' என்ற வாசகங்கள், ட்ரம்ப் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த...
ஹார்முஸ் ஜலசந்தியில் 500 இந்திய மாலுமிகள் 107 நாட்களாக சிக்கி தவிப்பு – தமிழக மாலுமி உயிரிழப்பு
admin - 0
அணு ஆயுத தயாரிப்புக்கு யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் ஈரான் ஈடுபட்டதால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின.
அப்போது முதல் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், வளைகுடா நாடுகளுக்கு எரிபொருள் எடுத்துவர சென்ற நூற்றுக்கணக்கான கப்பல்கள் கடந்த 107 நாட்களாக முடங்கி கிடக்கின்றன. இங்கு 13-க்கும் மேற்பட்ட இந்திய கப்பல்கள் சிக்கியுள்ளன. இங்குள்ள கப்பல்களில் 562 இந்திய மாலுமிகள் சிக்கி தவிக்கின்றனர்.
இந்நிலையில்...










