குளப்புறம்: கேன்சர் நோயால் அவதிப்பட்ட மூதாட்டி தற்கொலை
குளப்புறம், கூட்டப்புளி பகுதியைச் சேர்ந்த 72 வயதான சுசீலா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தனது வீட்டின் பின்பக்க சமையலறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக...
குழித்துறை: நகராட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குழித்துறை நகராட்சியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆணையர் வெங்கடாச்சலபதி, நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளின் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, 5 நகராட்சி கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று இரண்டாவது நாளாகவும்...
கிள்ளியூர்: காங்கிரசின் வெற்றி புகார் வரவில்லை – கலெக்டர்
குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேற்று மாத்தூர் தொட்டி பாலம் பகுதியை பார்வையிட்டார். அப்போது, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தவெக வேட்பாளர் சபின் மாவட்ட ஆட்சியாளருக்கு மனு அளித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல் சம்பந்தமான...
குமரி: மலை பகுதிகளில் மழை ; ஆறுகளில் தண்ணீர் அதிகரிப்பு
குமரி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கோதையாறு மற்றும் பெருஞ்சாணியில் உற்பத்தியாகும் பரளியாற்றில் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அருவிக்கரை சுற்றுலா தலத்தில் பாறைகளினூடே சப்தமாதர் கோவிலையொட்டி பாய்ந்து வரும் பரளியாற்றின் காட்சி தற்போது மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பு அப்பகுதி மக்களின்...
வடசேரியில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு!
நாகர்கோவில் வடசேரி வாட்டர் டேங்க் ரோட்டின் பின்புறம் நேற்று குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதுடன், குடியிருப்பு தெருக்களுக்குள்ளும் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து...
குமரி: மாமியாரை மிரட்டிய மருமகன் மீது வழக்கு
மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த பிரேமா (56) என்பவரின் மகள் மஞ்சுவை, ரமேஷ் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததால், மஞ்சு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று, மனைவியை அழைத்துச் செல்ல வந்த ரமேஷ், மாமியார் பிரேமாவிடம் தகராறு செய்து கொலை...
தக்கலை: திமுக நிர்வாகியிடம் ரூ 4 லட்சம் மோசடி – வழக்கு
தக்கலை பகுதியை சேர்ந்தவர் பில்மோர் ராபர்ட் ( 45). திமுக குமரி மேற்கு மாவட்ட நிர்வாகி. இவரது மனைவி புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சாக உள்ளார். இவருக்கு பணியிட மாறுதல் வாங்கி தருவதாக கூறி முளகுமூடு பகுதியை சேர்ந்த ஆண்டனி (50), கொடைக்கானல் சகாய ராஜா...
நாகர்கோவிலில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் உட்பட 9 தீயணைப்பு நிலையங்களில் 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நேற்று இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இதில் கலந்துகொண்டு தீயணைப்பு குறித்த ஆலோசனைகளைப் பெற்றனர்.
இரணியல்: கஞ்சாவுடன் சிறுவன் உட்பட 2 பேர் கைது
இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற ஆலன் ஜிஜோ (22) மற்றும் 18 வயது சிறுவன் ஒருவரை பிடித்து விசாரித்தபோது, விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது....
தக்கலை: பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு
வில்லுகுறியில் திருமண வீட்டிற்கு சென்ற 17 வயது மாணவன் ஷாய், உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மீது மோதி, அரசு பஸ் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தக்கலை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













