எஸ் டி மாங்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீஜா (44) என்பவர், தனது மகள் பெமியை திருமணம் செய்துகொண்ட லெனின் (30) என்பவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். லெனின், கடந்த 21ம் தேதி மாமியாரையும் மனைவியின் தங்கையையும் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நித்திரவிளை போலீசார் லெனின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.















