Google search engine

மக்களுடன் முதல்வர் திட்டம்; நல உதவிகளை வழங்கிய அமைச்சர்

குமரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் புதிய மின்னணு அட்டை வழங்குதல் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலஉதவி  வழங்கும் விழா தக்கலையில் நேற்று (23-ம் தேதி) நடைபெற்றது. கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்தார். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்...

குமரி நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவ மழையின் போது அணைகள் நிரம்புவதை கண்காணித்து உபரி நீரை படிப்படியாக திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழையாறு செல்லும் சுசீந்திரம் பகுதியில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலை வாய்க்கால், ஓடைகள் குளங்கள் தூர் வார வேண்டும்...

வாழைகளை சாலையில் நட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

நாகர்கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இடலாக்குடி செய்குதம்பி பாவலர் மண்டபத்தின் முன் பகுதியில் சாலை குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் அங்கு அடிக்கடி வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சியினர் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை...

குமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்தகுமார் நேற்று(செப்.22) வெளியிட்ட அறிக்கையில், மணவாளகுறிச்சியில் இந்திய அபூர்வ மணல் ஆலை மூலம் மணல்களிலிருந்து இல்மனைட், தோரியம் போன்ற கனிமங்களை பிரித்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணியை ஈட்டி வருகின்றது. இதன் கதிர்வீச்சால் அதிக கேன்சர் நோயாளிகளை...

திங்கள்சந்தை அருகே பைக் மோதி தம்பதி படுகாயம்

வாணியக்குடி அருகே உள்ள புதுகுடியிருப்புவிளை பகுதியைச் சேர்த்தவர் மல்கியா. இவரது மனைவி வில்லி சுகிர்தா. நேற்று முன்தினம் (செப்.21) மாலை மகளைப் பார்க்க இருவரும் பைக்கில் சென்றனர். அப்போது மகள் வீட்டு முன்பு ஓரமாக பைக்கை நிறுத்திய நிலையில் லில்லி சுகிர்தா இறங்கினார். மல்கியா இறங்க முயன்ற...

சாலையில் முறிந்து விழுந்த பழமையான மரம்- போக்குவரத்து பாதிப்பு

மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு என்ற இடத்தில் உண்ணாமலை கடை பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் முன்புறம் சுமார் நூறாண்டுகள்  பழமை வாய்ந்த மாமரம் ஒன்று காணப்பட்டது. இந்த மரத்தின் கீழ் பகுதியில் இருந்து இரண்டு கிளைகளாக பிரிந்து வளர்ந்து நின்றது. இதில் ஒரு கிளை நேற்று(செப்.22)...

மார்த்தாண்டத்தில் புதிய போலீஸ் சப்-டிவிஷன் துவக்கம்

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை மற்றும் குளச்சல் ஆகிய நான்கு போலீஸ் சப்-டிவிஷன்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் மிகப்பெரிய சப்-டிவிஷன் ஆக விளங்கிய தக்கலையை பிரித்து மார்த்தாண்டத்தை மையமாகக் கொண்டு புதிய சப்டிவிஷன் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் இருந்து வந்தது. இந்த நிலையில்...

பறவைகள் காட்சி கோபுரத்தை சீரமைக்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் பகுதிக்கு ஏராளமான பறவைகள் வருகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் அவைகளை பார்வையிடுவதற்காக தேரூரில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி கோபுரம் பராமரிக்கப்படாமல் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

வீட்டில் கஞ்சா புகைத்த  வாலிபர்கள் கைது

அருமனை அருகே உள்ள குஞ்சாலு விளையை சேர்ந்த ஸ்டீபன் மகன் மணிகண்டன் (23). இவரும் அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் மகன் சிவப்பிரசாத் (27) என்பவரும் நண்பர்கள். மணிகண்டன் வீட்டிற்கு சிவப்பிரசாத் அடிக்கடி வருவது வழக்கம்.   நேற்று (செப்.,19) அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில்  கஞ்சாவை...

திக்கணங்கோட்டில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினை  பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ்  நேற்று (செப்.,19) தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், திக்காணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 67 இலட்சம்...