பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பரப்புரைக்காக வருகிறார். அவர் வேப்பமூடு முதல் வடசேரி வரை சாலைகளில் மக்கள் மத்தியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளார். இதனையொட்டி, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இன்று மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டு சாலைகளில் சோதனை நடத்தினர்.














