கருங்கல்: போலீஸ்காரர் வீட்டு கதவு உடைத்து திருட்டு
கருங்கல் அருகே கம்பிளார் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் லாசர். இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி, குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்த லாசர் கடந்த 2-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றார். 8-ம் தேதி பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்...
குழித்துறை: நன்றி அறிவிப்பு கூட்டமாகமாறிய உண்ணாவிரத போராட்டம்
குழித்துறை அருகே மருதன்கோடு பகுதியில் இருந்த மகாத்மா காந்தி சிலை கடந்த மாதம் இரவில் மர்ம ஆசாமிகளால் சேதப்படுத்தப்பட்டது. இதில் குற்றவாளியை போலீசார் கைது செய்ய முடியாமல் திணறி வந்தனர். இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி சிலையை சேதப் படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும்...
மார்த்தாண்டம்: வணிகர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வர்த்தக சங்க அரங்கத்தில் நேற்று (அக்.,10) நடைபெற்றது. புதிய தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜா செல்வராஜ் வரவேற்று பேசினார். புதிய செயலாளர் சுரேஷ் குமார் அறிமுக உரை நிகழ்த்தினார்.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்...
நாகர்கோவிலில் உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம்
மனநலம் குறித்த விழிப்புணர்வையும், சிகிச்சை முறை அதன் தேவை குறித்த விழிப்புணர்வையும் பொது மக்களுக்கு ஏற்படுத்திட உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நேற்று (அக்.,10) மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியை கன்னியாகுமரி...
ஊட்டுவாழ் மடம் செல்லும் சுரங்கப்பாதை பணிகள் தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஊட்டுவாழ் மடத்திற்கு செல்வதற்காக சந்திப்பு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊட்டுவாழ் மடத்திலிருந்து வருபவர்கள் சுரங்கப்பாதையில் வந்து இடது பக்கமாக செல்லும் வகையில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை...
நாகர்கோவில்: ஆயுத பூஜையையொட்டி கண்ணை கவரும் மின் விளக்குகள்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாக்களை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பொன்ப்ப நாடார் வாடகை கார் ஓட்டுனர் சங்கம் சார்பாக ஆயுத பூஜையையொட்டி நேற்று (அக்.,10) கண்ணை கவரும் மின்விளக்குகள் அமைத்துள்ளனர். இந்த வண்ண மின் அலங்காரத்தை கண்டு களிக்க பொதுமக்கள்...
அகில இந்திய முற்போக்கு பெண்கள் குமரி ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட சிங்கன்காவு பகுதியில் குடியிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல், பேக்கரி பண்டங்கள் உற்பத்தி செய்யும் நோக்கில் பேக்கரி துவங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. அரசு அனுமதி பெறாமல் நடைபெறும் இந்த பேக்கரியால் சுகாதார கேடு ஏற்பட வாய்புள்ளது. எனவே இந்த பேக்கரிக்கு தடை...
ரத்தன் டாட்டா மறைவுதொழிலதிபர் டாக்டர் சுஜின் ஜெகேஷ் இரங்கல்
புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவிற்கு தொழிலதிரும், மெட்ரையிட் நிறுவன தலைவருமான டாக்டர் சுஜின் ஜெகேஷ் அறிக்கை மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது; இந்தியாவில் வசிக்கும் நடுத்தர...
மார்த்தாண்டம்: கஞ்சா விற்ற 3 கல்லூரி மாணவர்கள் கைது
நட்டாலம் 4 வழிச்சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து...
இரணியல்: ஆட்டோ டிரைவரை குத்தி பணம் பறிப்பு – 3 ஆண்டு சிறை
மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரன் (40). இவர் மார்த்தாண்டத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாசம் 18ஆம் தேதி இரவு அங்கு வந்த குளச்சல் பகுதி சேர்ந்த கவாஸ்கர்(24) என்பவர் குளச்சல் செல்ல வேண்டும் என சவாரிக்கு அழைத்துள்ளார்.
அவரை ஏற்றிக்கொண்டு...













