Google search engine

நாகர்கோவில் குடிநீர் குழாய் பள்ளம் மூடாததால் ஆபத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 50, 51, 52 வார்டுகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி அருகில் தோண்டப்பட்ட குழி முழுமையாக மூடப்படாமல் விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதில் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் பொது...

குளச்சல்: அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

குளச்சல் இலப்ப விளை அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குளச்சல் நகர்மன்றத் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. காலையில் குருந்தன் கோடு வட்டார மேற்பார்வையாளர் ஜான்சன் அறிவியல் கண்காட்சியை திறந்துவைத்தார். இப்பள்ளி ஆசிரியை பெல்சி பாய் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்....

திருவட்டார்: தொழிலாளியை வெட்டிவருக்கு 3 ஆண்டு சிறை

திருவட்டாறு அருகே உள்ள குட்டைக்குழி பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் (65). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற விஜயகுமார் (50) இவரும் தொழிலாளி. இவர்களிடையே ரப்பர் மரக்கிளை வெட்டியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10-06-2023-ல் குமார் என்ற விஜயகுமார் கபிரியேலை...

திங்கள்சந்தை: கால்வாயில் கவிழ்ந்த மினி டெம்போ

இரணியல் பகுதி வழியாக செல்லும் கால்வாய் தண்ணீர் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் திங்கள்சந்தை அடுத்த புதுவிளை பாலம் அருகே கால்வாய் கரையில் தடுப்பு சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதனால் அடிக்கடி சிறுவர்கள், பொதுமக்கள், வாகனங்கள் கால்வாயில் தவறி விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.  எனவே கால்வாய்...

கீழ்குளம்: அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப் பள்ளியில் இன்று காலை மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் பி. கோபால் தலைமை வகித்தார். கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஏஞ்சலின் பிரைட், ஜோஸ்பின்,...

கருங்கல்: ரூ. 8 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்கு

முளகுமூடு தேரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ (27). இவர் கப்பியறை பகுதி வேளாங்கோடு என்ற இடத்தில் பைப் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ கருங்கல் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், - முளகுமூடு பகுதியைச் சேர்ந்த...

வடசேரியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் வடசேரி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தொழிலாளியான துரைராஜ் (வயது 37) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல்...

இரணியல்: மனைவியை கொடுமைப்படுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை

மண்டைக்காடு அருகே சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காராயன் மகன் பிரான்சிஸ் கொத்தனார். இவருக்கும் அழகன்பாறை பகுதியைச் சேர்ந்த மேரி லீமா ரோஸ் என்பவருக்கும் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு பிரான்சிஸ் கூடுதலாக ரூ. 50,000 வரதட்சணை கேட்டு மேரி லீமா ரோசை...

மண்டைக்காடு:  இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

மண்டைக்காடு அருகே அழகன்பாறை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் மகள் ஆஷிகா (27). இவருக்கும் படர்நிலம் பகுதியை சேர்ந்த வினோ என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு...

குலசேகரம்: பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை

குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் என்பவர் மூத்த மகன் ஆஸ்பின் (31). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ஆஸ்பின் கட்டிடம் ஒன்றில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அன்று முதல் அவர் வேலைக்குச் செல்ல...