நாகர்கோவில்: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
குமரி மாவட்டம் வியன்னூர் அம்புவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 52). கூலித்தொழிலாளியான இவர் சொந்த ஊரில் சரியாக வேலை கிடைக்காததால் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள ஒரு உறவினர்...
நாகர்கோவிலில் ரூ. 24 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட வஞ்சி மார்த்தாண்டன் புதுத்தெருவில் ரூ. 7 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 13-வது வார்டுக்குட்பட்ட ராமவர்மன் புதுத்தெருவில் ரூ. 5.66 லட்சத்தில் கான்கிரீட்...
கோட்டாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்றுமுன்தினம் கம்பளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட...
குழித்துறை: போப் பிரான்சிஸ் நினைவு ஊர்வலம், திருப்பலி
குழித்துறை மறை மாவட்டம் சார்பில் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி அவரது நினைவாக திருப்பலி மற்றும் இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது. இரங்கல் ஊர்வலத்திற்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ்...
கொல்லங்கோடு: பத்திரகாளி கோயிலில் பத்தாமுதய பொங்கல்
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் மூல கோயிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் பத்தாம் நாள் பத்தாமுதய பொங்காலை நடத்தப்படுவது வழக்கம். இந்த வருட பொங்கல் நேற்று காலை வழக்கமான பூஜைகள் முடிந்து, பின்னர்...
நாகர்கோவிலில் கொட்டும் மழையில் மேயர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் நேற்று இரவு பெய்த கனமழையால் டென்னிசன் சாலை, கிருஷ்ணன் கோவில், கிறிஸ்து நகர் மற்றும் டெரிக் சந்திப்பு ஆகிய பகுதிகளில் மழை நீர் ஓடைகளில் கழிவுப் பொருட்களால்...
நாகர்கோவிலில் ஒரே நாளில் 100 கடைகளில் சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று நாகர்கோவில் மாநகரில்...
கொல்லங்கோடு: செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியில் செம்மண் அள்ளி டெம்போக்களில் கடத்தி செல்வதாக கொல்லங்கோடு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது மண் கடத்தியவர்கள் போலீசாரை...
இரணியல்: நீதிமன்ற உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் ஆசாரி மகன் லட்சுமணன். இவர் இரணியல் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி...
தக்கலை: இளம்பெண்ணை மிரட்டியவருக்கு குண்டாஸ்
தக்கலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடன் நெருங்கி பழகிய நபர் தன்னுடைய ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டி வருவதாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில்...