Google search engine
மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​தீர்ஜெய்​ஸ்​வால் டெல்​லி​யில் நேற்று கூறிய​தாவது: வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக கடந்த ஆண்டு பிப்​ர​வரி 13-ம் தேதி முதல் இந்​தி​யா, அமெரிக்கா இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இருதரப்​பும் பல்​வேறு சுற்று பேச்​சு​வார்த்​தைகளை நடத்தி உள்​ளன. இந்த பேச்​சு​வார்த்​தைகளில் ஒப்​பந்​தத்​தின் இறுதி வடிவத்தை எட்​டினோம். இருதரப்​புக்​கும் பலன் அளிக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்​து​வ​தில் இந்​தியா உறு​தி​யாக உள்​ளது. இந்​திய பிரதமர் நரேந்​திர மோடிக்​கும் அமெரிக்க...
ஒரு நாட்டின் அதிபர் அதன் அண்டை நாட்டால் சிறைப்பிடிக்கப்படுகிறார். தங்கள் நாட்டின் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதை கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றனர். ஒரு சிலர் அச்சத்தோடு வேடிக்கைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் புதிய நம்பிக்கையுடன் அதை வரவேற்கின்றனர். இந்தக் கலவையான மனநிலை வெனிசுலா நிலவரம் மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழும் வெனிசுலா நாட்டவர் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற தேசங்களில் வசிக்கும் வெனிசுலா மக்களிடமும் பிரதிபலிப்பதை ஊடகங்கள், சமூக...
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை 500% உயர்த்த வழிவகுக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவு அளித்திருப்பதாக குடியரசு கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் அதிபரானால் உக்ரைன்-ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என உறுதி அளித்தார் டொனால்டு ட்ரம்ப். ஆனால், இதுவரை...
வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது அடிப்படையற்றது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் மாணவர் கிளர்ச்சியால் ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாட்டில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ‘‘ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்டது ஒரு சோகமான, கண்டிக்கத்தக்க செயல். வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின்...
அமெரிக்க சுகாதாரத் துறைச் செயலர் ராபர்ட் கென்னடி ஜூனியர், அமெரிக்கர்களுக்கான புதிய ஊட்டச்சத்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்கர்கள் தங்கள் உணவில் அதிக புரதச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வேளாண் துறை மற்றும் சுகாதாரம், மக்கள் சேவைகள் துறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க மக்களுக்கு இத்தகைய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அமெரிக்கர்கள்...
ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்கும் நாடு​கள் மீது 500% வரி விதிக்க வகை செய்​யும் மசோ​தாவுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளார். இந்த மசோதா நிறைவேற்​றப்​பட்டு சட்​ட​மாக நடை​முறைக்கு வரும் பட்​சத்​தில் ரஷ்​யா​விட​மிருந்து மலிவு விலை​யில் கச்சா எண்​ணெயை கொள்​முதல் செய்​யும் இந்​தி​யா, சீனா போன்ற நாடு​களுக்கு பெரிய பாதிப்பை ஏற்​படுத்​தும் என்று கூறப்​படு​கிறது. இதுகுறித்து அமெரிக்க செனட்​டர் லிண்ட்சே கிரஹாம் நேற்​று​முன்​தினம் கூறிய​தாவது: கச்சா எண்​ணெய் விவ​காரத்​தில்...
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தீவு தேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது அவசியம் என்று கூறியுள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசம் கிரீன்லாந்து. அங்கு ரேர் எர்த் மினரல்ஸ் எனப்படும் அரிதான கனிம வளங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் தொட்டே கிரீன்லாந்தை பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி...
வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ராணுவ நடவடிக்​கை​யின்​போது தங்​களது நாட்​டைச் சேர்ந்த 32 அதிகாரி​கள் கொல்​லப்​பட்​ட​தாக கியூபா அதிகாரப்பூர்வமாக தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​யில்” வெனிசுலா அரசாங்​கத்​தின் கோரிக்​கை​யின் பேரில் கியூ​பா​வின் ராணுவ மற்​றும் காவல் துறை அதி​காரி​கள் பல ஆண்​டு​களாக அங்கு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். இந்த நிலை​யில் வெனிசுலாவை சுற்​றிவளைத்து அமெரிக்கா நடத்​திய திடீர் தாக்​குதலில் 32 கியூபா அதி​காரி​கள் உயி​ரிழந்​தனர்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏர்​போர்ஸ் ஒன்...
இந்​தி​யா​வின் அண்டை நாடான வங்​கதேசத்​தில் முஸ்​லிம்​கள் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். அந்த நாட்​டில் அண்​மை​க்கால​மாக இந்​துக்​கள் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். கடந்த டிச.18-ல் மைமன்​சிங் பகு​தியை சேர்ந்த தீபு சந்​திரா அடித்​துக் கொல்​லப்​பட்​டார். டிச. 24-ல் ராஜ்​பாரி பகு​தியை சேர்ந்த அம்​ரித் மண்​டல் கொலை செய்​யப்​பட்​டார். கடந்த 29-ல் மைமன்​சிங் பகு​தியை சேர்ந்த பிஜேந்​திர பிஸ்​வாஸ் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இந்த சூழலில் வங்​கதேசத்​தின் ஜெஸ்​ஸோர் மாவட்​டம், ஆருவா கிராமத்தை சேர்ந்த...
ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் நான் மகிழ்ச்​சி​யாக இல்லை என்​பது பிரதமர் நரேந்​திர மோடிக்கு தெரி​யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வின் புளோரி​டா​வில் இருந்து தலைநகர் வாஷிங்​டன் செல்​லும்​போது, ‘ஏர் போர்ஸ் ஒன்' விமானத்​தில் நிருபர்​களுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்​டியளித்​தார். அப்​போது ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வது குறித்து அவரிடம் கேள்வி எழுப்​பப்​பட்​டது. இதற்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பதில் வரு​மாறு:...