Google search engine
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்ற கருத்தை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் வெளிப்படுத்தியுள்ளார். கண்ணியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை அவசியம் என்றும், ஈரான் தனது தேசிய உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஈரானிய மாணவர் செய்தி நிறுவனம் (ISNA) வெளியிட்ட செய்தியில், நிர்வாக அமைப்புகளின் மக்கள் தொடர்பு கூட்டத்தில் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், “பேச்சுவார்த்தை நடத்த மறுப்பது அறிவுப்பூர்வமானதல்ல. நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என்று...
மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றம் ராஜதந்திரத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நார்வே நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்பு உறவு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவும் நார்வேயும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு, பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன. எந்தவொரு...
மேற்கு ஆசியா​வில் நடந்து வரும் போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​காக, ஈரானின் திருத்தப்பட்ட புதிய அமை​தித் திட்​டம் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது தற்​காலிகப் போர்​நிறுத்​தம் அமலில் உள்ள நிலை​யில், இரு நாடு​களுக்​கும் இடையே முக்​கிய தூத​ராகச் செயல்​பட்டு வரும் பாகிஸ்​தான் மூல​மாக இந்​தத் திட்​டம் பகிரப்​பட்​டுள்​ள​தாக பாகிஸ்​தான் அரசு வட்​டாரங்​களை மேற்​கோள் காட்டி ராய்ட்​டர்ஸ் செய்தி நிறு​வனம் திங்​கள்​கிழமை தெரி​வித்​துள்​ளது. போரை முடிவுக்​குக் கொண்டு வர ஈரான் விருப்​பம் தெரி​வித்​துள்ள நிலை​யில்,...
பாகிஸ்​தானின் முன்​னாள் பிரதமர் இம்ரான் கான், தாம் பதவியி​லிருந்து நீக்​கப்​பட்​டதற்​குப் பின்​னால் வெளி​நாட்​டுச் சதி இருப்​ப​தாகத் தொடர்ந்து குற்​றச்​சாட்​டு​களை கூறி வந்​தார். இதற்கு வலுச் சேர்க்​கும் வித​மாக, ரகசிய அரசு தூதரக ஆவணம் ஒன்று தற்​போது கசிந்​துள்​ளது பாகிஸ்​தானில் சர்ச்​சையை கிளப்பி​யுள்​ளது. ‘சைபர்' என்று அழைக்​கப்​படும் இந்த ஆவணம், மார்ச் 2022-ல் அமெரிக்கா​வுக்​கான அப்​போதைய பாகிஸ்​தான் தூதர் ஆசாத் மஜீத் கான் மற்​றும் அமெரிக்க தூதர் டொனால்டு லூ ஆகியோருக்கு...
ரஷ்யா மீது இன்று (ஞாயிறுக் கிழமை) உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில், ஒரு இந்திய தொழிலாளி உட்பட நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது. ரஷ்யா மீதான இந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்தியத் தொழிலாளி உள்பட 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், சிலர் காயமடைந்தனர். இரவு முழுவதும் நடந்த இந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை...
அணுசக்தி பேச்சுவார்த்தை மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக முடிவெடுக்காவிட்டால் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.  தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், "ஈரானுக்கான நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவாகச் செயல்படுவது நல்லது. இல்லையெனில் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது. இந்தத் தருணத்தில் காலம் மிக முக்கியமானது" என்று மிகக் கடுமையான தொனியில்...
ட்ரோன் தாக்​குதல் காரண​மாக ஐக்​கிய அரபு அமீரகத்தின் அணு மின் நிலை​யத்​தில் தீப்​பற்​றியது. இதில் யாருக்கும் காயம் ஏற்​பட​வில்​லை. கதிர்​வீச்சு பாதிப்​பும் ஏற்படவில்​லை. ஈரான் மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்​தி​ய ​போது ஐக்​கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட வளை​குடா நாடு​களில் உள்ள எண்​ணெய் கிடங்​கு​கள் மற்​றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறி​வைத்து ஈரான் ட்ரோன் மற்​றும் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. அமெரிக்கா,...
ஆப்​கனில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் அரசு பொறுப்​பேற்ற பிறகு பல்​வேறு கட்​டுப்​பாடு​களை விதித்து வருகின்​றனர். அதன் அடுத்த கட்​ட​மாக, ‘கணவன் - மனைவி பிரிவதற்​கான கொள்​கைகள்’ என்ற தலைப்​பில் தலிபான்கள் சட்டத் திருத்​தம் கொண்டு வந்​துள்​ளனர். அதற்கு ஆப்​கன் உச்ச தலை​வர் ஹிபத்​துல்லா அகுண்ட்​ஸடா கையெழுத்​திட்​டுள்​ளார். அந்த சட்​டத்​திருத்​தத்​தில், ‘‘ஆப்கானிஸ்தானில் கன்​னிப் பெண்​கள் மவுனம், திரு​மணத்​துக்கு சம்​மத​மாகக் கருதப்​படும். பெண் குழந்​தைகளின் திருமண விஷயத்​தில், பரு​வம் அடைந்த பிறகு,...
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி கவுரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. இதையடுத்து பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி-க்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து சென்றிருந்தார். இந்நிலையில், இந்த பயணத்தில் மூன்றாவது நாடாக ஸ்வீடனுக்கு அவர் நேற்று...
சீனா - அமெரிக்கா உறவுகளில் மிக முக்கிய விஷயமாக இருக்கும் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது....