Google search engine
குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனை குவைத்தின் மின்சார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில் தங்கள் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள தப்ரிஸ் பெட்ரோகெமிக்கல் அமைப்பின் மீது எதிர்தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும்...
ஈ​ரான் ராணுவ ஏவு​கணை​களில் ‘‘இந்​திய மக்​களுக்கு நன்​றி’’ என்ற வாசகம் எழுதப்​பட்டு இருக்​கிறது. அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே நடைபெறும் போரில் இந்​தியா நடுநிலை வகிக்கிறது. மேலும் போரை நிறுத்த இந்​திய அரசு சமரச முயற்​சி​யில் ஈடு​படுவ​தாக​வும் கூறப்படுகிறது. கடந்த 4-ம் தேதி இலங்கை அருகே சென்று கொண்​டிருந்த ஈரானின் ஐஆர்​ஐஎஸ் லாவன் கப்​பலை அமெரிக்க நீர்​மூழ்கி ஏவு​கணை தாக்​கியது. இதில் 87 பேர் உயி​ரிழந்​தனர். இதைத் தொடர்ந்து...
மேற்கு ஆசி​யப் போருக்கு மத்​தி​யில் பிரதமர் நரேந்​திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அதிபர் ட்ரம்ப் கூறியதை இந்​தி​யா​வில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்​ஸ்' தளத்​தில் பகிர்ந்து கொண்​டுள்​ளது. அந்​தப் பதி​வில், “இந்​தி​யா​வுட​னான எங்​களின் அற்​புத​மான உறவு தொடர்ந்து வலுப்​பெறும். பிரதமர் மோடி​யும் நானும் (ட்ரம்ப்) காரி​யங்​களை சிறப்​பாக முடிக்​கும் இரு தலை​வர்​கள். இத்​தகைய செயல்​திறன் பலருக்கு இருப்​ப​தில்​லை’’ என்று ட்ரம்ப் கூறி​யுள்​ளார். மேற்கு...
ஈ​ரான் பள்ளி மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்தி 175 மாணவர்​கள் மற்​றும் ஆசிரியர்​களை கொன்​றது தவறான தாக்​குதல் அல்ல போர்க் குற்​றம் என்று ஐ.நா.வில் ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி கூறி​னார். ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்​தன. அப்​போது ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்​கப் பள்ளி மீது டொமஹாக் ஏவு​கணை மூலம் அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது....
அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் மீண்​டும் கரோனா வைரஸ் பரவி வரு​கிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறு​தி​யில் சீனா​வின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்​டறியப்​பட்​டது. அங்​கிருந்து உலகம் முழு​வதும் வைரஸ் பரவியது. சுமார் 71 கோடி பேர் வைரஸால் பாதிக்​கப்​பட்​டனர். சுமார் 70 லட்​சம் பேர் உயி​ரிழந்​தனர். இந்த சூழலில் அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் ஒமைக்​ரான் வகையை சேர்ந்த பிஏ 3.2 என்ற கரோனா வைரஸ் பரவி வரு​கிறது....
நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று பதவியேற்றுக் கொண்டார். நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் சர்மா ஒளி பதவி விலகினார். இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றார். அவரது தலைமையில் கடந்த 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 12-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நேபாள நாடாளுமன்றத்தில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடி தேர்தல்...
ஈரான் உடனான போர் 26 நாட்களை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் அரசு ஒப்பந்தம் செய்துகொள்ளத் தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும், அமெரிக்கா இனி ஒப்பந்தம் செய்ய முன்வருமா என்பது சந்தேகமே என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “இந்தப் போரை முடிக்க நான்கு...
ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக...
ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை நிர்​வகித்த ஈரான் கடற்​படைத் தளபதி அலிரேசா, இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் உயிரிழந்​தார். அமெரிக்​கா - ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் ராணுவம் மூடி​யிருக்​கிறது. இதனால், உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எல்​பிஜி காஸுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. ஈரான் கடற்​படை​ தளபதி அலிரேசா டாங்​கிரி, ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யின் பொறுப்​பாள​ராக செயல்​பட்டு வந்​தார். சர்​வ​தேச கடல் போக்​கு​வரத்தை தடுத்து நிறுத்​திய குற்​றத்​துக்​காக அவரை சர்​வ​தேச...
ஈ​ரானுக்கு எதி​ரான போரில் 10 ஆயிரம் இலக்கு​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யுள்​ளோம் என்று அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. ஈரானுக்​கும், அமெரிக்கா, இஸ்​ரேல் படைகளுக்​கு​மான போர் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் நடந்து வரு​கிறது. இதுகுறித்து அமெரிக்கா​வின் ராணுவ மத்​திய கமாண்டை சேர்ந்த கடற்​படை அட்​மிரல் பிராட் கூப்​பர் நேற்று கூறியதாவது: ஈரான் போரின்போது 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இலக்​கு​களைத் தாக்கி அழித்துள்ளோம். இதில் பல்​வேறு வெடிபொருட்​கள் ஆலைகளும் அடங்​கும். இதுதொடர்​பான...