ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்க போரில் இணைய யுஏஇ தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்வகையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது.
இந்த சூழ்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்காக ஈரானுக்கு எதிராக போரிடும் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இணையத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி அறிக்கையின்படி, இத்தகைய ராணுவ நடவடிக்கைக்கு...
சீனா மற்றும் வட கொரிய தலைநகரங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், சீனாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் சைனா, பீஜிங்கிற்கும் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிற்கும் இடையே இன்று (மார்ச் 30) நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது.
ஏர் சைனா விமானத்தை, வட கொரியாவுக்கான சீனத் தூதர் வாங் யஜுன் மற்றும் பிற தூதர்கள் வரவேற்றதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவிலிருந்து...
“ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம். அந்தத் தீவை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிது” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில், “ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா சார்ந்த 20 எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலவந்தி வழியாக கடந்து...
ஈரானின் எண்ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளிதாக கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த பிப். 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் நேற்று 31-வது நாளாக நீடித்தது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்....
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தலங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று அளித்த பேட்டியில் அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறியதாவது: யுஏஇ ஒரு அர்த்தமற்ற குழப்பத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தனது உறவின் மூலம் செய்த...
ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேன்சர் மருந்துகள், இன்சுலின், உயிர்க் காக்கும் மருந்துகளின் விநியோகம் தாமதப்படுவது மட்டும் அல்லாமல் அவற்றின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இதனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த...
அமெரிக்க ராணுவத்தை அனுமதிக்க கூடாது: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் அறிவுறுத்தல்
admin - 0
பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியை விரும்பினால், அமெரிக்க ராணுவம் தங்கள் நாட்டில் இருந்து செயல்பட வளைகுடா நாடுகள் அனுமதிக்க கூடாது என ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இங்கிருந்து அமெரிக்க...
மேலும் 2 எல்பிஜி டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் மூடியது. கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 5-ல் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. இதை ஈரான் மூடியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது....
ஈரான் போரில் ரூ.29,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்: பென்டகன் அதிகாரி தகவல்
admin - 0
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமெரிக்காவின் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரான் உடனான மோதல் தொடங்கிய முதல் மூன்று...
ஈரான் மீது தரைவழியாக தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராகி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரில் ஈரானின் ராணுவ தளங்கள், அணு சக்தி தளங்கள், எண்ணெய் வயல்கள் என 10,000-க்கும் மேற்பட்ட இடங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி உள்ளன. இதற்கு பதிலடியாக...










