பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 4 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று சீனா சென்றுள்ளார்.
சீனாவுடனான உறவை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளின் 75 ஆண்டு விழாவில் பங்கேற்கவும் ஷெபாஸ் ஷெரீப் சீனா சென்றுள்ளார். அவர் தனது 4 நாள் பயணத்தின் முதல் கட்டமாக நேற்று சீனாவின் ஹாங்சோ நகரை சென்றடைந்தார்.
அங்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெஜியாங் மாகாண செயலாளரை பிரதமர் ஷெபாஸ் சந்திக்கிறார். மேலும்,...
ஈரானுடனான பேச்சுவார்த்தை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும், ஈரானுடனான ஒப்பந்தம் குறித்து இன்று பிற்பகல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று பிற்பகல் சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும். நமக்கு நீண்டகால பலனளிக்கக் கூடிய ஒரு வரைவுத் திட்டத்தில்...
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (மே 24) ராணுவ வீரர்கள் பயணித்த ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குவெட்டா நகரில் உள்ள சமன் பதக் ரயில் நிலையம் அருகில் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பினால் ரயில், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக காவல்...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள சூழலில், அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் ஒரு விரிவான உடன்பாடு எட்டப்படும் நிலையை நெருங்கிவிட்டதாக குறிப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். “பேச்சுவார்த்தைகள் முறையான...
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள பாதுகாப்புச் சாவடி ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் நேற்று காலை திடீரென சுடத் தொடங்கினார். உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையினர் களமிறங்கி 21 வயதுள்ள இளைஞரை சுட்டுக்கொன்றனர்.
இதுகுறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நமது நாட்டின் புனித சின்னத்தின் (வெள்ளை மாளிகை) மீது ஒருவித வெறி, வன்முறை உணர்வு கொண்டவரே இந்த துப்பாக்கிச் சூட்டில்...
“என்னை இந்தியா நூறு சதவீதம் நம்பலாம்” என தொலைபேசி மூலம் நிகழ்த்திய உரையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 250-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்வு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவுக்கு மார்கோ ரூபியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர்...
“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்” – ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு
admin - 0
நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான் என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி விமர்சித்துள்ளார்.
ஆயுத மோதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் என்ற பொருளில் ஐநா பாதுகாப்பு சபையில் திறந்த விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பார்வதனேனி, “நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட களங்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான். அப்படிப்பட்ட ஒரு...
ஈரானுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், டிரோன்கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற ஆய்வு சேவை (சிஆர்எஸ்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரவு வகைப்பாடு, தொடர்ந்து நடைபெறும் போர், இழப்புக்கான காரணங்களை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போரின் செலவு, ஏற்கெனவே சுமார் 29 பில்லியன் டாலராக உயர்ந்துவிட்டதாகவும்...
புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹானை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கடந்த 2019ம் ஆண்டு சிஆர்பிஎப் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று மோதி பயங்கரமாக வெடித்தது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். வெடிபொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை எடுத்துச்...
அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று ஈரானை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஈரான் மறுத்ததால் அந்நாட்டின் மீது அமெரிக்க - இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின.
இந்நிலையில் போரை நிறுத்த பாகிஸ்தான் செய்த மத்தியஸ்தம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நடைபெறாமல் முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானில்தான் இருக்க...










