அமெரிக்க படைத்தளம் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள கட்டிடம் சேதமடைந்துள்ளது.
இதை புகைப்படம் எடுத்துப் பகிர்ந்ததாக 25 வயதுடைய பிரிட்டன் விமானப் பணிப்பெண் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தியின்படி, அந்தப் பெண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் அந்தப் புகைப்படத்தைப்...
நிலவுக்கு கடைசியாக நாசா கடந்த 1971-ம் ஆண்டு அப்போலோ விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பியது. 50 ஆண்டுக்கு பின் தற்போது ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலத்தை நிலவுக்கு நாசா நேற்று பரிசோதனை முயற்சியாக அனுப்பியது. இந்த விண்கலத்தில் நாசா கமாண்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளேவர், கிறிஸ்டினா கோச், கனடா விண்வெளி வீரர் ஜெரிமி ஹேன்சன் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்த...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் ஈரான் ராணுவம் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் சல்ஃபகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: எங்களது ராணுவ வலிமை மற்றும் தளவாடங்கள் குறித்த உங்களது (அமெரிக்கா) உளவுத் தகவல்கள்...
இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், "எங்களது இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர், கவலை வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளது.
உலகின் 20% எரிசக்தி விநியோகம் நடைபெறும் முக்கிய வழித்தடமான...
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேற்காசியாவில் நிலவும் போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென உலக நாடுகள் விரும்புகின்றன....
இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா நகரில் வாழும் மழலைகள் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல் விளையாடிய வீடியோ இப்போது உலகளவில் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.
போர் மிகக் கொடூரமானது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. பிள்ளை மனம் மாறாத மழலைகள் சிலர், பொம்மை ஒன்றை இறுதிச் சடங்குக்கு அந்த வீடியோவில் கொண்டு செல்கின்றனர். வழக்கமாக பொம்மையைக் கொண்டு விளையாடும் உலக அளவிலான குழந்தைகளுக்கு...
‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது அமெரிக்கா: நிலவை சுற்றி வரவுள்ள 4 விண்வெளி வீரர்கள்
admin - 0
நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம். இவர்கள் இந்த பயணத்தில் நிலவை சுற்றி வரவுளள்னர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969-ல் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா...
குவைத்தில் மேற்காசிய போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் நேற்று அதிகாலையில் கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில்...
ரஷ்ய ராணுவ விமானம் க்ரிமியா பகுதியில் நேற்று முன்தினம் இரவு விபத்துக் குள்ளானதில் அதில் பயணம் செய்த 30 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய ராணுவத்தில் உள்ள பழமையான போக்குவரத்து விமானம் ஏஎன்-26. சோவியத் ரஷ்யா காலத்தில் 1969-1985-ம்ஆண்டுகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டது. இந்த விமானத்தில் நேற்று முன்தினம் 7 ஊழியர்கள், 23 பயணிகள் என மொத்தம் 30 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் ரஷ்யாவின் க்ரிமியா பகுதியில் உள்ள செவஸ்தோபோல்...
நேட்டோ ஒரு ‘காகிதப் புலி' என்றும் அதிலிருந்து வெளியேறுவது பற்றி தீவிரமாக பரிசீலிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் இணைய வேண்டும் என்றும் இதற்காக தங்கள் நாட்டு போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்றும்...










